அன்பு என்பது
ஒரு உறவல்ல.
அது ஒரு இருப்பு நிலை.
ஜீஸஸ்,
ஒரு நாள் மதியம்
நல்ல வெயில் நேரத்தில்
நடந்து போய் கொண்டிருந்தார்.
அதிகமான வெயில் அவருக்கு ஒரு வித
சோர்வை தந்தது.
ஜீசஸ்,
நல்ல உடல் வலிமை
உள்ளவர் தான்.
நீண்ட நேர பயணத்தால்,
அவர்
உடல் சோர்வை அடைந்தார்.
எனவே,
அவருக்கு சற்று
ஓய்வு தேவை பட்டது.
ஒரு வீட்டின் முன்பு இருந்த
மரத்தடியில் அமர்ந்து
சற்று இளைப்பாறினார்.
அந்த வீடு,
' மேக்டலின் ' என்ற அழகான இளம்பெண்ணிற்கு சொந்தமானது.
அவள் ஒரு விலை மாது.
அவளது கவர்ச்சியான எழிலான தோற்றத்தில்,
உடலமைப்பில் மயங்கி
பல செல்வந்தர்கள்
அவளோடு தொடர்பில் இருந்தார்கள்.
அவள்,
தனது வீட்டு ஜன்னல் வழியாக,
வெளியே மரத்தடியில்
ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ' ஜீசஸை '
பார்த்து விட்டாள்.
அவள்
இதுவரை எத்தனையோ ஆண்களின் உடலை பார்த்திருக்கிறாள்.
இதுவரையில்,
எந்த ஆண் மகனும்
அவளை வசீகரித்தது இல்லை.
ஜீசஸின் உடல் கட்டமைப்பில் அவள்
மயங்கி நின்றாள்.
அவரால்
வசீகரிக்கப்பட்டாள்.
அவள் உடனடியாக வெளியே வந்து ஜீசஸை சந்தித்தாள்.
வசீகரம் கலந்த அழகிய புன்னகையுடன் அவள்
அவரிடம் பேசினாள்,
' என் வீட்டிற்கு வாருங்கள்.
ஏன் இந்த மரத்தடியின் கீழே அமர்ந்திருக்கிறீர்கள் ?
நான் உங்களை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.
என் வீட்டிற்கு வந்து,
என்னுடன் நீங்கள் ஓய்வெடுக்கலாம்.
வாருங்கள். ' என்றாள்.
ஜீசஸ்,
அந்த கணத்திலேயே
அவளை பற்றி உணர்ந்து கொண்டார்.
மேலும்,
அவள் உணர்ச்சி
வசப்பட்டிருப்பதையும் கண்டார்.
அவளிடம் அமைதியாக பேசினார்,
' இப்போது எனது தேவை முடிந்து விட்டது.
இந்த ஓய்வு எனக்கு போதுமானது.
நான்
எனது உடல் களைப்பில் இருந்து புத்துணர்வு
பெற்று விட்டேன்.
நான் இப்போது மீண்டும் நடந்து செல்ல தயாராகி விட்டேன்.
அடுத்த முறை,
இந்த வழியே கடந்து செல்லும்போது,
நான் உனது வீட்டிற்குள் வருகிறேன். ' என்றார்.
அவள்,
அவரது பதிலை அவமானமாக உணர்ந்தாள்.
இதுவரையில்,
அவள் எந்த ஆடவரையும்
இது போல் அன்பாக அழைத்த தில்லை.
அவளை ஒருமுறை பார்த்தாலே போதும் என்ற நினைப்புடன் நீண்ட தூரங்களிலிருந்து இளைஞர்கள், சீமான் கள் வந்து செல்வார்கள்.
சில நாட்டு அரசர்கள் கூட
அவளிடம்
வந்து போவதுண்டு.
அவள்
ஒரு எழில் நிறைந்த
அழகிய இளம் மங்கை.
அவளிடம்,
இவர் மறுத்து பேசியதை
அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
மீண்டும் அவரிடம் ஏக்கத்துடன் கேட்டாள்,
' எனது உண்மையான அன்பை நீங்கள் உணரவில்லையா ?
என்னை உதாசீன படுத்தாதீர்கள்.
அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.
உங்கள் இதயத்தில்
என்மீது
அன்பு என்பது சிறிதுகூட இல்லையா ? ' என்றாள்.
ஜீசஸ் அவளை பரிவுடன் பார்த்தார்,
' இதுவரையில் உன்னிடம் வந்தவர்கள் எல்லாம் உன்னை
நேசிப்பது போல் நடித்தவர்கள்.
அதனால்தான்,
அவர்கள் தேவை முடிந்ததும்
உன்னை விட்டு பிரிந்து செல்ல அவர்களால் முடிந்தது.
நான் உன்னை
உண்மையில்
நேசிக்கிறேன்.
நான் மட்டும்தான்,
நீ யார் என்பது தெரிந்தும்
உன்னை நேசிக்க முடியும்.
உன்னை பிரிவதற்கு
எனக்கு மனமில்லை.
உன் மீது உண்மை அன்பை நான் வைத்திருப்பதால்தான்
சிறிது நேர உறவை எனது மனம் விரும்பவில்லை.
எனது வேலை எனக்காக அங்கு காத்திருக்கிறது. '
என்று அவளை கடந்து சென்றுவிட்டார்.
அவர் கூறியது சத்தியமான வார்த்தை.
அவரது அன்பில் கிளர்ச்சியில்லை,
உண்மை இருந்தது.
அவருக்கு அன்பு என்பது
ஒரு உறவல்ல.
அது ஒரு இருப்பு நிலை.
ஜீசஸ் சிலுவையில்
அறைய பட்ட போது,
அது வரையில் அவருடன் இருந்த சீடர்கள் ஒருவர் கூட
அந்த இடத்தில் இல்லை.
ஜீசஸின் தாய் மேரி இருந்தார்.
இதயத்தில் இருந்த அன்பு
கண்ணீராய் பெறுகி ஒட,
பதைத்து போன மனதுடன்
அந்த
விலை மாது ' மேக்டலின் '
அங்கு இருந்தாள்.
No comments:
Post a Comment