"பயமின்மை"
எனது நோக்கமல்ல.
"ஒவ்வொரு தனிமனிதனும்,
அவனை - அவனாக...
கண்டு கொள்ளவேண்டும்"
என்று நான் விரும்புகிறேன்.
அவனை - அவனுக்குள்
திருப்பிவிடுவதே,
எனது முக்கிய பணி.
அதற்காக அவன் யாரையும்
பின்பற்ற தேவையில்லை.
இதற்க்காக,
இன்னும் இன்னும் பல வழிகளை நான் கையாளுவேன்.
கோடிக்கணக்கான
உலக மக்கள் தொகையில்...
ஒன்றரை லட்சம் (அப்போது)
சன்னியாசிகள் என்பது...
கடலில் கரைத்த பெருங்காயமே !!!
எனது சன்னியாசிகளும்,
என்னை விரும்பும் மக்களும்,
தொடர்ந்து செய்வார்கள்.
"அவர்களுடன்...
எப்போதும் நானிருப்பேன்."
"ஆன்மீகம் என்பது...
தனி மனிதன் சுதந்திரம்"
அதில் தியானம்,
ஒரு உள்முக பயணம்...!
அறியாததில் குதித்து விடுவது.
என்று அறிய முடியாத,
வரைபடமே இல்லாத பாதையில் பயணம்.
அதற்குத் தைரியமும்,
துணிச்சலும் மிக முக்கியம்.
பயம்...
பணத்தை நோக்கி செலுத்தும்.
பயம்...
அதிகாரத்தை நோக்கி செலுத்தும்.
பயம்...
கடவுளை நோக்கி செலுத்தும்.
பயம்...
பல திசைகளையும் நோக்கி,
உன்னை இழுத்துச் செல்லும்.
பயம்...
"உன்னை ஒரு போதும்
உள்நோக்கி செலுத்தாது."
நீ உனக்குள் செல்ல
முதலில் உனக்குத் தேவை,
"பயமின்மை"
No comments:
Post a Comment