Tuesday, 1 March 2022

இணைந்திருங்கள் என்கிறார் கடவுள், இல்லை என்கிறேன் நான்!

இணைந்திருங்கள் என்கிறார் கடவுள், இல்லை என்கிறேன் நான்! பேசாலைதாஸ் 


சூஃபிகள் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் ஒருவர் மக்களுடன் இணைந்திருக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். 

இல்லையேல் அந்த பற்றுதலே கடவுளுக்குத் தடையாக, முட்டுக்கட்டையாகிவிடும்.

நீங்கள் உங்கள் பெண்ணுடன் இருங்கள் மற்றும் உங்கள் ஆணுடன் இருங்கள். உங்கள் குழந்தைகளுடன் இருங்கள். உங்கள் நண்பர்களுடன் இருங்கள். 

ஆனால் நினைவில் கொள்ளுங்கள்.  இங்கே நாம் அனைவரும் அந்நியர்கள். நமது ஒற்றுமை என்பது தற்செயலானது.  

நாம் அனைவரும் பயணிகள். சாலையில் சந்தித்தோம்.  சில நாட்களுக்கு  நாம் ஒன்றாக இருப்போம்.  அதற்கு நன்றியுணர்வு கொள்வோம்.

ஆனால் விரைவில் அல்லது அதற்குப் பிறகு உங்கள் மனைவி இறந்துவிடுகிறார். அல்லது அவள் தன் சொந்த வழியில் செல்கிறாள். எங்கே என்று உனக்குத் தெரியாது.  

அல்லது உங்கள் மனைவி உங்களை விட்டு பிரிந்து செல்கிறார்.  அல்லது நீங்கள் வேறு யாரையாவது காதலிக்கிறீர்கள்.  

உங்கள் மகன் வளர்ந்துவிட்டான் அவன் தன் உயிரைத் தன் கைகளில் எடுத்துக்கொண்டு உங்களை விட்டு விலகிச் செல்கிறான்.  

ஒவ்வொரு மகனும் பெற்றோரை விட்டு நகர ஆரம்பிக்கிறான்.நாம் அனைவரும் இந்த சாலையில் சில நாட்கள் மட்டுமே ஒன்றாக இருக்கிறோம்.  

நாம் ஒன்றாக இருப்பது என்பது தற்செயலானது.  அது என்றென்றும் இருக்கப் போவதில்லை.

எனவே மக்களுடன் இருங்கள். மக்களுடன் அன்பாக இருங்கள், மக்களுடன் கருணையுடன் இருங்கள்.  ஆனால் இணைந்திருக்காதீர்கள்.  

இல்லையெனில், உங்கள் இணைப்பு உங்களுக்கு அப்பால் செல்ல போதுமான சுதந்திரத்தை அனுமதிக்காது.

இருப்பதை கொண்டு,,,,,

இருப்பதை கொண்டு,,,,, பேசாலைதாஸ் 


இருப்பதை வைத்துக் கொண்டு இல்லாததைப் பயன் படுத்து

சீன ஞானி லாவோட்சு சொல்லியிருக்கிற இந்த தத்துவம் என்னை யோசிக்க வைத்தது.

களிமண்ணால் பானை செய்கிறோம். பால் பொங்குவது வெற்றிடத்தில். 

பானை உடைந்தால் சோறு பொங்க முடியாது. ஆகவே பானை தேவை.

 “இருக்கிற பானையை வைத்துக் கொண்டு இல்லாத வெற்றிடத்தைப் பயன் படுத்து’ என்கிறார் அந்த ஞானி.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

 கதவு, ஜன்னல் வைத்து வீடு கட்டினாலும் நாம் வாழ்வது உள்ளே இருக்கிற வெற்றிடத்தில்தான்! 

இன்னும் சொல்லப்போனால் கடவுள் என்பதே ஆற்றல் மிகுந்த ஒரு வெற்றுத் தன்மைதான்!..

இந்த வெறுமையை தான்...சித்தர்கள்

சூனியம்..பரவெளி...பரப்பிரம்மம்

என்று பல பெயர்களில் அழைக்கின்றனர்....

நெருங்குவது அல்ல , விலகுவதே ஆன்மீகம் !

நெருங்குவது அல்ல , விலகுவதே ஆன்மீகம் ! பேசாலைதாஸ்


ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ?

நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள்.

உடனே புறப்பட்டான் .போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான்

அவர் கேட்டார் ." எங்கே போகிறாய் ?"

கடவுளை காண போகிறேன் !"

எங்கே ? "

கோவிலில் !"

அங்கே போய் ........"

அவரை வழிபட போகிறேன் ! "

அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?"

தெரியாது "

எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை . அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட முடியும்?"

அப்படியென்றால் "

உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும் "

அவன் ரொம்பவே குழம்பி போய்ட்டான்.

ஞானி தெளிவு படுத்தினார்.

ஏ, மனிதனே ..... நீ செய்யபோவது உண்மையான வழிபாடு அல்ல .... இன்றைக்கு மனிதர்கள் " வழிபாடு " என்ற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் . தங்களது கோரிக்கைகளை குரல் மூலம் பட்டியலிட்டு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .தங்களது புகார்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் "

நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் ..."

நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ?"

அப்படியானால் .. ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி ?"

அவரை நீ சந்திக்க முடியாது . உணர முடியும் !"

அதற்க்கு வழி ?"

தியானம்"

தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ?"

இல்லை "

மனிதன் வியப்போடு நிமிர்ந்தான்.

அவர் சொன்னார் :

தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது . அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் , அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய் . உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் . தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் "

அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருவர்அங்கே வந்தார் . ஞானியின் முன்னால் வந்து பணிவோடு நின்றார் .

தன்னுடைய தேவையை சொன்னார் :

I WANT PEACE"

ஞானி சொன்னார்:

முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு , மூன்றாவது வார்த்தையை நீ நெருங்கலாம் !" எனக் கூற,வந்தவர் யோசித்தார்.

' I ' . ' WANT ' இரண்டையும் விட்டு விலகினால் 'PEACE ' நெருங்கி வருகிறது !

நான் ' என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ' என்னுடையது ' என்கிற ஆசைகளை விலக்குங்கள். ' அமைதி ' என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் .

வெளிநாட்டுகாரருக்கு விளக்கம் கிடைத்தது .மனநிறைவோடு திரும்பி சென்றார் . 

கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கே வந்தான் .

சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது !"

எப்படி அது ?"

ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !"

அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம் !

ஞானி கேட்டார்

அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் 

எவ்வளவு தூரம் ?"

ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !"உற்சாகமாக சொன்னான்.

உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?"

இல்லை "

அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு !"

யார் அவர் "

அங்கே இருக்கிற அர்ச்சகர் !"

வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் .

சரி , சுவாமி . நான் வர்றேன் !"சோர்வோடு நடந்து போனான்.

அதன்பிறகும் விவாதம் தொடர்ந்தது . இறுதியில் மனிதன் எழுந்தான் . ஞானியிடம் விடை பெற்றான் . திரும்பி நடந்தான்.

ஞானி கேட்டார் :

எங்கே போகிறாய் ? "

வீட்டுக்கு !"

கோவிலுக்கு போகவில்லையா ?"

இல்லை "

அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?"

ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்துக் கொண்டேன் .

'நான் '.'என்னிடம் ' இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன் "

ஞானி இருகைகளையும் உயர்த்தினார்.

ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்ககிறீர்களோ , அவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள்..

உள் உணர்வே உண்மையானது

 உள் உணர்வே உண்மையானது  பேசாலைதாஸ்

ஒரு புதிய கோவிலின் வாசலுக்காக வரைபடம் தயாரிக்கும் படி ஒரு புத்தமத துறவிக்கு உத்தரவிடப்ப ட்டது. அவர் பல வரைபடங்களைத் தயாரித்தார். மிகவும் திறமைவாய் ந்த ஒரு சீடன் அவருக்கு இருந்தான். அவர் அவனை தன்னுடனேயே இரு க்கும்படிக் கூறினார். 

அவர் வரைபடத்தை உருவாக்குகை யில் சீடன் பார்த்துகொண்டே இருக் கவேண்டியதுதான், அதை அவன் விரும்பினால், அது சரி, நன்றாயிருக்கிறது என்று சொல்லவேண்டும். அவனுக்குப் பிடிக்கவில்லையென்றால், இல்லை என்று சொல்லவேண்டும். 

மேலும் குரு – நீ சரி என்று சொல்வதை மட்டுமே நான் அனுப்ப போகிறேன். நீ சரியில்லை என்று சொல்வதையெல்லாம் நான் தவிர்த்துவிட்டு மீண்டும் மீண்டும் புதிய வரைபடத்தை நான் உருவாக்குவேன் – என்றார்.

நூற்றுக்கணக்கான வரைபடங்கள் இப்படி ஒதுக்கப்பட்டன. மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. குருவிற்கே பயம் வர ஆரம்பித்து விட்டது, ஆனாலும் கொடுத்த வார்த்தையை காப்பாற்ற வேண்டும். குரு படம் வரைவார். சீடன் பார்த்துக்கொண்டிருப்பான், சரியில்லை என்பான். குரு மறுபடியும் ஒன்றை வரைய ஆரம்பிப்பார்.

ஒருநாள் பேனா மை முடியப்போகிறது, ஆகவே குரு – போய் பேனா மை கொண்டுவா – என்றார். அந்த சீடன் வெளியே போனான், குரு அவனை, அவனது இருத்தலை மறந்து முயற்சியற்றவரானார், அவனது இருத்தலே பிரச்சனை. 

சீடன் உடனிருக்கிறான், பார்த்துகொண்டிருக்கிறான் என்ற எண்ணம் குருவின் மனதில் இருந்துகொண்டே இருந்தது. அவன் இதை விரும்புவானா. மாட்டானா, இதையும் நிராகரித்து விடுவானா என்று தொடர்ந்து நினைத்துக்கொண்டேயிருந்தார். இது உள்ளே ஒரு பதட்டத்தை ஏற்படுத்திவிட்டது., ஆகவே அந்த குருவால் இயல்பாக இருக்க முடியவில்லை.

அந்த சீடன் வெளியே போனான். வரைபடம் முடிந்துவிட்டது. சீடன் உள்ளே திரும்பிவந்து – அபாரம். ஆனால் இதை ஏன் முன்பே வரையவில்லை – என்றான்.

குரு – இப்போதுதான் ஏனென்று எனக்கே புரிந்தது. நீ இருந்ததனால்தான். நீ இருந்ததால், நீ சரியென்று சொல்ல வேண்டுமென முயற்சித்தேன். அந்த முயற்சிதான் முழுவதையும் கெடுத்துவிட்டது. நான் இயல்பாக இருக்க முடியவில்லை, நான் கரைய முடியவில்லை, நீ இருந்ததால் நான் என்னை மறக்க முடியவில்லை.- என்றார்.

நீங்கள் தியானம் செய்யும் பொழுதெல்லாம், நீங்கள் அதைச் செய்யும் முயற்சியே, நீங்கள் அதில் வெற்றிபெற நினைக்கும் நினைப்பே, தடைதான்.பொறுமையுடன் இருந்தால் ஒரு நாள் வரும், முயற்சியற்ற ஒருநாள் வரும். அப்போது உண்மையில் நீ அங்கிருக்க மாட்டாய், வெறும் தியானம் மட்டுமே அங்கிருக்கும்.