தனியாக வாழ்கிறோமா ? பேசாலைதாஸ்
" தனியாக பிறக்கிறோம். தனியாகத்தான் இற ந்து போகிறோம். ஆனால், தனியாக வாழ்கி றோமா? தனியாக வாழ்கிற அந்த திறன், இந்த மக்களுக்கு இருக்கிறதா ? எங்கிருந்து வந்தோ மோ வந்த இடத்தை, சுலபமாக மீண்டும் அடைவ தற்கு தனிமையில் வாழ்வதே உகந்த வழி. ஒரு முழுமையான தனிமை குறித்து விழிப்புண ர்வை ஏற்படுத்துவது தான், இந்த கூடி வாழ்கிற கூட்டு வாழ்வின் முக்கிய செயல்படாக இருக்கி றது.
ஒரு குடும்பம், ஒருவனுக்கு தனிமையை அனுமதி ப்பது கிடையாது. உறவுகள் என்ற நிலையில் லாத மாயத் தோற்றத்தை உனது குடும்பம் உனக் குக் கொடுக்கிறது. உறவு என்பது வழிந்தோடி விடுகிற ஒரு நதி. அது ஒரு கானல் நீர். அன்பு என் பது மிக முக்கியமானது.
ஆனால், அதனால் வேதனையை தான் முடிவாக உன்னால் அடைய முடிகி றது. ஏன் அப்படி ? அன்பின் தன்மையை நீ உணரவில்லை. அன்பை பயன் படுத்திக் கொள்கிறாய். தவிர, நீ அன்பாக மாறவில்லை. மாறுவதற்கு உன க்கு தெரிவதில்லை.
24 மணி நேரமும் உனது மூளையில் ஒருவரும், அவரது மூளையில் நீயு மாக இருக்கிறீர்கள். ஒருவரை ஒருவர் அழித் துக்கொண்டும் , பொறாமை யில் வெந்து கொண்டும், சண்டையிட்டு துன்புறுத்திக் கொண்டும் இருப் பதே இங்கு வாடிக்கையாகிப் போய்விட்டது. தண்ணீரை நினைத்து நெரு ப்பை தொடுகிற உனது செயல்தான்' மாயை ' என்பது . இதயத்தி ற்கும் , மூளைக்கும் உள்ள வித்தியாசத்தை உன்னால் புரிந்து கொள்ள முடியவி ல்லை.
நிச்சயமற்ற வாழ்வை நேசிக்கிறாய். நிச்சயமான மரணத்திற்கு பயப்படு கிறாய். அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறாய். அனைத்து சொந்தங்கள் அருகில் இருந்தும், வெறுமையை உணர்கிறாய். தனிமையை உனக்கு அது கொடுக்கிறது. அதற்காக, நீ உனது உறவில் இருந்து பிரிந்து விட்டாய் என்பது. அர்த்தமல்ல. கூட்டத்தில் இருந்து கொண்டு உன்னை நீ தனிமை படுத்தி வாழ முயற்ச்சி செய், பற்றுக பற்றற்று! புத்தர் செய்ய தவறியதை பேசாலைதாஸ் உனக்கு சொல்கின்றேன் கேள்!
புத்தர் ஞானம் அடைந்தவுடன், தன் தோழனும் சீடனுமான ஆனந்தாவிடம் தான் யசோதாவை பார்க்க அரண்மனைக்கு செல்லவேண்டும் என்றா ராம், அங்கு போய் யசோதாவை கண்டார். புத்தரை சுற்றி தெய்வீக ஒளி வட்டம் இருப்பதை யசோதா உணர்கின்றாள். புத்தரிடம் கேட்கின்றாள், ஞானவடிவம் காண, காட்டுக்குத்தானா? செல்லவேண்டும், அரண்மனை யில் கூட்டங்களுக்கிடையில் வாழ்ந்து கொண்டு, ஞானம் அடைய முடி யாதா என கேட்கின்றாள். அதற்கு புத்தர், ஞானம் பெற்றபின்னர் தான் அது எப்படி என்பது, எனக்கு புலப்பட்டது, மாளிகையில் இருந்தபடி, மக்கள் கூட்டத்தை நேசித்த படியே, அன்பென்ற உத்தியால் அதை பெற முடியும் என்று. மக்கள் கூட்ட த்தில் இருந்து கொண்டு ஒரு துறவி, ஒரு குருவானவர், ஞானம் அடைய முடியும், ஆனால் பெரும்பாலும் குருக்கள் கன்னியாஸ்தி ரிகள் துறவிகள் அதில் தோல்வி அடைகின்றனர். அதற்கு காரணம் பற்று! ஏதோ ஒன்றில் தங்களை அறியாமல் பற்று கொள்கின்றனர், அது உண்மை அன்பை, அதன் சுவையை மறைக்கின்றது. பற்றுக பற்றற்று!
இனிமேல், உறவு என்பது என்ன என்று தெரிந்து கொண்டு விடுவாய். அன்பின் உண்மையான வடிவம் என்ன என்பதை உணர்ந்து கொண்டு விடுவாய். நீ நீயாக இருப்பாய். அவர், அவராக இருப்பார் . உங்களுக் குள் சொந்தம் இருக்கும். அதில் வேதனைகள் இருக்காது. புரிதல் இருப்ப தால், அங்கு பொறாமைகள் இருக்காது. சொந்தம் என்பது வேதனைகள் இல்லாத ஒரு இயல்பான விஷயம் என்பதை நீ புரிந்து கொண்டிருப் பாய். உண்மையில் இதை நீ உணரும்போது, அதுதான் ஒரு பேரானந்த மாக இருக்கும்.
உனக்கு தேவையான இடத்தை கொடுப்பதும், அதை புரிந்து கொள்ள வைப்பதும், சொந்தத்தில் சிக்கி கொண்டு விடாமல் அதில், உறவாடும் அனுபவத்தை சொல்லிக் கொடுப்பதும், அதனால் ஏற்படுகிற பேரானந்த த்தை உனக்கு உணர்த்துவதும் இந்த பற்றுக பற்றற்று என்கின்ற உத்தி தான். முதலில் உன்னை நீ உனக்குள் மறுத்துவிடு, உன்னில் இருந்து வருகின்ற எனக்கு, என்னுடைய என்ற பற்றும், அதனால் வருகின்ற சொந்தம், உடைய, என்ற உரிமை கோரலும், நான் என்ற ஆணவத்தை ஏற்படுத்தும், அதில் முதலில் அழிந்து போவது அன்பின் சுவை, அதன் அருமை. புரிந்து கொள்! இந்த புரிதல் வந்துவிட்டால் உனக்குள் ஒரு அமைதி வரும்,, தொடரும் என் ஞானவேட்டை,,,,,,,,,,, அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்