Thursday, 30 January 2025

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு?

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு? பேசாலைதாஸ் 


குளிர்ப் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணங் கொண்ட ஒரு 
சிட்டுக்குருவி வாழ்ந்து வந்ததுஇலையுதிர்கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது  மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசையை நோக்கிப் பறக்க ஆயுத்தமா யின ஆனால் இந்த சிட்டுக்க்குருவி மட்டும் அவைகளோடு செல்லக் கூடா தெனத் தீர்மானித்துவிட்டது. 

குளிர்காலம் வந்தது, குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குறுவி கல ங்கிவிட்டது. கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்த போது அந்த குளிரின் கடுமையில் பறந்தால், மரணம் நிச்சயம் என்பதை அறிந்து இருந்த இடத்திலேயே இருந்துவிட்டது. அடர்ந்த பனிவீழ்ச்சியி னால்,  அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்கவிடாமல் செய்ததோடு அது மரத்தினின்று கீழே ஒரு விவசாயின் வீட்டு முற்றத்தில் வீழ்த்திவிட்டது 

அந்த முற்றத்தில் சென்று, கொண்டிருந்த பசு ஒன்று அந்த சிட்டுக்குருவி மீது சாணம் போட்டுவிட்டு சென்றுவிட்டது. சிட்டு குருவிக்கு மூச்சு திணறி னாலும் அந்த சாணத்தின் சூடு வெப்பம் அதற்கு இதமாக இருந்தது சூட்டி னாலும், மூச்சுவிட முடிந்ததாலும் மகிழ்ச்சியுற்ற அந்த சிட்டுக்குருவி பாட ஆரம்பித்தது 

அந்தப் பக்கமாக வந்த பூனை பாட்டு வரும் திசையை கண்டது, சாணத்தை அகற்றிப் பார்த்தது பறவையை பார்த்ததும் மகிழ்ச்சியோடு அதை விழுங்கிவிட்டது 

அன்பர்களே இந்த கதையில் இருந்து நாம் தெரிந்துகொள்ளக்கூடிய மூன்று படிப்பினையுண்டு. உன் மீது சாணம் போடுபவன்,உன் எதிரியாய் இருக்க வேண்டிய.அவசியம் இல்லை.அவன் யாராகவும் இருக்கலாம். அடுத்த  படிப்பினைஉன்னை சாணத்திலிருந்து,  அகற்றுபவன் உன் நண்பனா கத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவன் உன் எதிரியாகவும் இருக்காலம், இது காலத்தின் ஏற்பாடு 

 நீ மகிழ்ச்சியாக சாணத்தின் இதமான சூட்டில் அடங்கி இருக்கிறாய் என்றால்,சத்தமிடாமல் அமைதியாக இருக்கலாமே, எல்லாமே விதி வசம். நம்மில் பலர் அப்படித்தான், வசதிகள் வரும்போது, பட்டகஸ்டங்கள் மறந்து அந்த சிட்டுக்குருவிபோல வாழ முற்படுகின்றோம்.                                                                                   அன்புடன் பேசாலைதாஸ்


Wednesday, 29 January 2025

உள் முகம் மாற்றம்

உள் முகம் மாற்றம் பேசாலைதாஸ்


உன்னைத்திருத்து உலகம் தானாக திருந்தும், மாற்றம் பற்றி பரவலாக எங்கும் பேசப்படுகின்றது.  அரசியலில், இனப்பிரச்சனை தீர்வுகளில், பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் அதிகமாக பேசப்படுகின்றது. முதலில் தனிமனித எண்ணங்களில், சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டால்,  ஏனையவை தானாக மாறும். அந்த மாற்றாம் 
நீதி சார்ந்து இருந்தால் போதும். உங்களுக்குள் நீங்கள் மாற்றம் காணாவிட்டால்....  அடுத்தவரின் வாழ்க்கையை மாற்றவோ வழி நடத்தவோ ஒருபோதும் முனையாதீர்கள்!! 
இங்கு யாரையும் மாற்றுவதற்காக யாரும் பிறக்கவில்லை!! எனவே எவரையும் மாற்ற முயற்சிக்காதீர்கள்!! அது வெளி நபர்கள் என்றில்லை!!  உங்கள் மனைவியோ, மகனோ, மகளோ இல்லை கூடப்பிறந்தவர்களோ  என்று யாரையும் மாற்ற முயற்சிக்காதீர்கள்!!  
உங்களையே நீங்கள் அறியாத வரை, நீங்கள் மிகவும் ஆபத்தானவர் என்பதால், உங்கள் வழிகாட்டல் இங்கு யாருக்கும் தேவையில்லை!! உங்கள் வழிகாட்டுதல்   படியும், உங்கள் யோசனைப்படியும் நீங்கள் மற்றவர்களை கட்டாயப் படுத்தலாம். மேலும் உங்கள் பேச்சின் படி  நடக்காதவர்களிடம் கோபம் காட்டலாம். அவர்களை முடக்கலாம், கொல்லலாம், ஊனப்படுத்தலாம்!!  ஆனால் அவர்களின் உண்மையான மாற்றத்திற்கு (உள்முக மாற்றத்திற்கு) உங்களால் ஒருபோதும்  உதவ முடியாது!!  
உங்களுக்குள் நீங்கள் மாற்றப்படாதவரை.... மற்றொருவரின் வாழ்க்கைக்கு செல்லாதீர்கள்.  நீங்கள் ஞானத்தின் ஒளியால் நிரப்பப்பட்டால், நீங்கள் உதவலாம்!! இன்னும் சொல்லப்போனால்  உண்மையில் நீங்கள் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய எந்த முயற்சியும் செய்ய வேண்டிய அவசியமில்லை!!  ஏனெனில்  விளக்கில் இருந்து ஒளி பாய்வது போலவோ, மலரிலிருந்து நறுமணம் பரவுவது போலவோ,  இரவில் சந்திரன் பிரகாசிப்பது போலவோ உங்களிடமிருந்து உதவி அதுவாகவே பாய்கிறது!!  
மலர் அதன் நறுமணத்தை பரப்புவதற்கு இந்த முயற்சியும் செய்வதில்லை!! சந்திரனின் அதன் ஒளியை எங்கும் பரப்புவதற்கு எந்த பிரயாசையும் எடுத்துக் கொள்வதில்லை!! அது - அதனின் இயல்பாகவே எங்கும் பாய்கிறது!!
உங்களுடைய உள் முகம் மாற்றத்தின் மூலம்  நீங்கள் - உங்களுக்கு ஒளியாக மாறினால்,  நீங்கள் மற்றவர்களுக்கு வெளிச்சமாகி விடுகிறீர்கள்!! இதுவே உங்களின் இயல்பான நிலையாகி விடுகிறது!! இதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்

Tuesday, 21 January 2025

பாவமும் பழியும்

பாவமும் பழியும்  பேசாலைதாஸ்

பலருடைய இறப்புகளூக்கு காரனமே தெரியாது, செய்யாத பாவத்துக்காக பழிவாங்கப்படுகின்றார்கள்; சிலர் தாம் செய்த தப்புக்கு தானும் தண்டனை அடைவதுமில்லாமல், அப்பாவிகளூம் தண்டனை அனுபவிக்க வைத்துவிடுகின்றார்கள் 

இறந்து போன ஒருத்தன் சொர்க்கத்துக்கு சென்ற போது

அவன் எப்படி இறந்தான் என வாயிற்காப்போன் கேட்டான்

"என் பொண்டாட்டி எனக்கு துரோகம் பண்றானு எனக்கு ஒரு நாள் தோணிச்சு. 

நான் ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்கேன்.என்னோட வீடு 5 ஆவது மாடில இருக்கு.

ஒரு நாள் வேலைக்கு போறதா பொய் சொல்லிட்டு , பாதியிலேயே வீட்டுக்கு வந்துட்டேன்

. என் பொண்டாட்டி என்னைய எதிர்பாக்கல .என்னைப் பாத்ததும் , 'ஏதாச்சும் மறந்து விட்டிட்டு போய்ட்டிங்களா? ' ன்னு கேட்டா.

நான் அவளுக்கு பதில் சொல்லாம வீடு பூரா தேடிப் பாத்தேன். 

ஆனா ஒருத்தனையும் காணோம். 

கடைசியா பால்கனிய (BALCONY) போய் பாத்தேன் 

. நான் தேடி வந்தவன் அங்க பால்கனி க்ரில்ல புடிச்சி தொங்கிகிட்டு இருந்தான் .

எனக்கு ரொம்பக் கோபம் வந்துச்சி . 

அவன் விரலில் ஓங்கி ஓங்கி மிதிச்சேன்.

 வலி தாங்காம அவன் பிடிய விட்டுட்டு கீழ விழுந்துட்டான்.

 நான் கீழ எட்டி பாத்தேன் .

 அவன் சாவாம ஒரு புதர் மேல விழுந்து கெடந்தான் .

நான் உடனே கிச்சனுக்குள்ள போய் , பிரிட்ஜை இழுத்துகிட்டு வந்து , பால்கனி மேல கஷ்டப்பட்டு தூக்கி வச்சு , அந்த பிரிட்ஜை கீழ விழுந்து கெடந்த அவன் மேல போட்டு , அவன நசுக்கி கொன்னுட்டேன்.

இதெல்லாம் செஞ்ச பின்னாடி எனக்கு சந்தோஷத்துல நெஞ்சு வலி வந்து, அங்கேயே விழுந்து செத்துட்டேன்."

அவன் கதையை கூறி முடித்ததும், தேவதை

நீ உள்ளே போகலாம் ." என்றது .

அவன் போன சற்று நேரம் கழித்து , இன்னொருவன் வந்தான். 

அவனிடமும் தேவதை கேட்க

அவன் அவனுடைய கதையை கூற ஆரம்பித்தான்.

"நான் ஒரு அபார்ட்மெண்ட்ல 6 ஆவது மாடில குடியிருக்கேன். 

நான் எப்பவும் ப்ரீயா இருந்தா பால்கனில யோகா பண்றது வழக்கம் .

 அன்னைக்கு அப்படித்தான் தலைகீழ நின்னுக்கிட்டிருந்தேன். 

திடீர்னு பேலன்ஸ் மிஸ் ஆகி கீழ விழுந்துட்டேன்.

நல்ல வேளையா 5 ஆவது வீட்டு பால்கனி கிரில் கம்பிய பிடிச்சுக்கிட்டேன்.

 அந்த வீட்டுல ஒரு புருஷனும் அவனோட பொண்டாட்டியும் மட்டும் இருக்காங்க .

திடீர்ன்னு வெளிய வந்த அந்தம்மாவோட புருஷன் , பால்கனில தொங்கிகிட்டு இருந்த என் கைய மிதிக்க ஆரம்பிச்சான். 

நான் வலி தாங்காம கீழ விழுந்துட்டேன் 

. நல்ல வேளையா நான் விழுந்த எடத்துல ஒரு புதர் இருந்ததால நான் சாகல. 

ஆனா என்னோட முதுகு ஒடஞ்சி போச்சி.

அந்தம்மாவோட புருஷனுக்கு என் மேல அப்படி என்னதான் கோபம்னு எனக்குத் தெரியல.

 கொஞ்ச நேரத்துல மேல இருந்து ஒரு பிரிட்ஜ் ஐ என் மேல தள்ளி வுட்டு என்னை கொன்னுட்டான்."😔😔

அவன் பேசி முடித்ததும் , தேவதைக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. 

கஷ்டபட்டு அடக்கிக் கொண்டு அவனை உள்ளே போக அனுமதியளித்தது.

மூன்றாவதாக ஒருத்தன் வந்தான் . 

அவனிடமும் தேவதை கேட்டது அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான்.

"எனக்கும் பக்கத்து தெருவுல ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்குற ஒருத்தனோட பொண்டாட்டிக்கும் இடையில 2 வருஷமா கள்ள தொடர்பு இருந்துச்சி. 

அவ புருஷன் வேலைக்கு போனதும், அவ எனக்கு போன் பண்ணுவா. 

ஒடனே நானும் அவ வீட்டுக்கு போய்டுவேன்.

அன்னைக்கும் அப்படித்தான் அவ எனக்கு போன் பண்ணுனா 

நானும் உடனே கெளம்பி அவ வீட்டுக்கு போனேன். 

ஆனா கொஞ்ச நேரத்திலேயே அவ புருஷன் வந்து கதவ தட்ட ஆரம்பிச்சான் . 

அவ உடனே என்ன பிரிட்ஜ்க்குள்ள வச்சு பூட்டிட்டு 

கதவ தெறக்க போனா .

நான் பிரிட்ஜ்க்குள்ளேயே பயந்து போய் உக்காந்திருந்தேன்.

 அப்புறம் என்ன நடந்துச்சுனே தெரியல

இப்ப இங்க வந்துட்டேன் என்றான்

Friday, 3 January 2025

ஒரு அரசன் கனவு கண்டான். இரவில் அவன் கனவில் மரணத்தைக் கண்டான். அவன் பயந்து போனான். அவர் கேட்டார், “என்ன விஷயம்? என்னை ஏன் இப்படி பயமுறுத்துகிறாய்?”

மரணம் சொன்னது, “நாளை சூரிய அஸ்தமனத்தில் நான் வருகிறேன் என்று சொல்ல வந்தேன், எனவே தயாராகுங்கள். இது இரக்கத்தால் மட்டுமே, எனவே நீங்கள் தயார் செய்யலாம். ராஜா மிகவும் அதிர்ச்சியடைந்தார், அவரது தூக்கம் கலைந்தது. அது நள்ளிரவு. அவர் தனது மந்திரிகளை அழைத்து, "நேரம் குறைவாக இருப்பதால் கனவை விளக்கக்கூடியவர்களைக் கண்டுபிடி. ஒருவேளை அது உண்மையாக இருக்கலாம்! ” பின்னர் மொழிபெயர்ப்பாளர்கள் வந்தனர், ஆனால் மொழிபெயர்ப்பாளர்கள் எப்போதும் இருந்ததைப் போலவே, அவர்கள் சிறந்த அறிஞர்களாக இருந்தனர். அவர்கள் பல பெரிய புத்தகங்களைக் கொண்டு வந்தார்கள், அவர்கள் விவாதிக்கவும், தகராறு செய்யவும், வாதிடவும் தொடங்கினர். சூரியன் உதயமாகி விடிந்தது. ராஜாவுக்கு மிகவும் நம்பிக்கையான வேலைக்காரனாக இருந்த ஒரு முதியவர், அரசனிடம் வந்து, அவர் காதில் கிசுகிசுத்தார், “முட்டாள்தனமாக இருக்காதே! இந்த மக்கள் என்றென்றும் சண்டையிடுவார்கள், அவர்கள் எந்த முடிவுக்கும் வர மாட்டார்கள்.இப்போது, ​​எல்லோரும் அவருடைய விளக்கம் சரி என்று முயற்சித்தார்கள், மேலும் ராஜா முன்பை விட மிகவும் குழப்பமடைந்தார். எனவே அவர் முதியவரிடம், “அப்படியானால் நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அவர், “அவர்கள் தங்கள் விவாதங்களைத் தொடரட்டும். அவை அவ்வளவு சீக்கிரம் முடிவடையப் போவதில்லை - சூரியன் மறையும், ஏனென்றால் சூரியன் உதயமானதும் சூரிய அஸ்தமனம் வெகு தொலைவில் இல்லை. மாறாக, என் அறிவுரையை ஏற்றுக்கொண்டு தப்பித்துக்கொள்ளுங்கள் - குறைந்தபட்சம் இந்த அரண்மனையிலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள். வேறு எங்காவது இரு! மாலையில் முடிந்தவரை எங்காவது சென்றடையுங்கள். லாஜிக் சரியாகப் பார்த்தது. ராஜாவிடம் மிக வேகமான குதிரை இருந்தது, அது உலகிலேயே வேகமானது. அவர் விரைந்தார், அவர் தப்பினார். நூற்றுக்கணக்கான மைல்கள் அவர் கடந்தார். அவர் ஒரு குறிப்பிட்ட நகரத்தை அடைந்த நேரத்தில் சூரியன் மறையத் தொடங்கியது. அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவர் தனது குதிரையைத் தட்டினார், "நீங்கள் நன்றாக செய்தீர்கள். நாங்கள் வெகுதூரம் வந்துவிட்டோம்.” அவர் தனது குதிரையைத் தட்டிக் கொண்டிருந்தபோது, ​​திடீரென்று யாரோ தனக்குப் பின்னால் நிற்பதை உணர்ந்தார். அவன் திரும்பிப் பார்த்தான் - மரணத்தின் அதே நிழல். மேலும் மரணம் சிரிக்க ஆரம்பித்தது. அதற்கு அரசன், “என்ன விஷயம்? ஏன் சிரிக்கிறாய்?” மரணம் சொன்னது, “இந்த மரத்தடியில் நீங்கள் இறக்க நேரிட்டதால் நான் கவலைப்பட்டேன் - மேலும் நீங்கள் எப்படி அடைய முடியும் என்று நான் கவலைப்பட்டேன். உங்கள் குதிரை மிகவும் அருமை! அது நன்றாகவே செய்தது. நானும் உங்கள் குதிரையைத் தட்டுகிறேன். அதனால்தான் நான் உங்கள் கனவில் வந்தேன்: நீங்கள் அரண்மனையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், ஏனென்றால் அது எப்படி நடக்கும், எப்படி அடைய முடியும் என்று நான் மிகவும் கவலைப்பட்டேன். அந்த இடம் வெகு தொலைவில் பார்த்தது, இன்னும் ஒரு நாள் மட்டுமே இருந்தது. ஆனால் உங்கள் குதிரை நன்றாக இருந்தது, நீங்கள் சரியான நேரத்தில் வந்துவிட்டீர்கள்.

நீங்கள் எங்கு சென்றாலும் மரணம் உங்களுக்காக காத்திருக்கும். எல்லாத் திசைகளிலும் மரணம் காத்திருக்கிறது. எல்லா இடங்களிலும் மரணம் காத்திருக்கிறது. எனவே, அதைத் தவிர்க்க முடியாது - பின்னர் மனம் அதைத் தவிர்க்க சில வழிகளைக் கற்பனை செய்யத் தொடங்குகிறது. 

ஒரு கை ஓசை

ஒரு கை ஓசை  பேசாலைதாஸ்

தியானம் கற்றுக் கொள்வதற்காக ஒரு இளந்துறவி ஜென்மகானிடம் வந்தார்.

மகான் சொன்னார் :

முதலில் ஒரு கை ஓசையின் மேல் தியானம் செய்.

இளந் துறவிக்கு குழப்பமாக போய்விட்டது. ஒரு கையில் எப்படி ஓசை வரும். இரு கைகள் சேர்ந்து தட்டினால் தானே ஓசை வரும்.

குழப்பத்தோடு மரத்தடியில் அமர்ந்து யோசிக்கலானார். ஒன்றும் புலப்படவில்லை -

திடீரென்று மூங்கில் காட்டிலிருந்து ஒரு பறவையின் கூக்குரல் கேட்டது. இதுவாக இருக்குமோ என்று மகானிடம் போய் சொன்னார்.

மகான் கோபத்தோடு அவரை முகத்தில் அடித்து,, முட்டாள் தனமாக பேசாதே,, போய் தியானம் செய் என்றார்.

மீண்டும் இளந்துறவி யோசிக்கலானார்.

ஒவ்வொரு நாள் ஒரு பதிலை கொண்டு போனார்.

மரங்களிடையே செல்லும் காற்றின் ஒலி,,

வாய்க்காலில் ஓடும் தண்ணீரின் ஒலி,,

வானில் தோன்றும் இடி முழக்கம்,,

இப்படி சொல்ல சொல்ல மகான் அவரை அடித்து போகச் சொன்னார்.

ஒரு கட்டத்தில் அவர் சொல்வதையே மகான் கேட்கவில்லை.

இளந் துறவிக்கு ஒரே வருத்தம். சொல்வதை கூட கேட்காமலேயே அடித்து துரத்துகிறாரே என்று மற்ற துறவிகளிடம் கூறி வருத்தப்பட்டார்.

திடீரென்று இளந் துறவி மகானை பார்க்க செல்லவில்லை. சில நாட்கள் கழிந்தன.

மகான் அவரைத் தேடி இளந்துறவி வழக்கமாக தியானம் செய்யும் மரத்தடிக்கு வந்தார்.

எல்லாவற்றையும் மறந்து இளந் துறவி மெளனத்தில் மூழ்கியிருந்தார்.

அவரை உலுக்கி சுய நினைவு வரச் செய்து மகான் கேட்டார்.

கடைசியாக ஒரு கை ஓசையை கேட்டு விட்டாயா? இந்த மெளனம் தான் ஒரு கை ஓசை.ஏன் என்னிடம் வந்து சொல்லவில்லை?

இளந் துறவி சொன்னார் :

இந்த மெளனத்தில் என்னை நான் மறந்து விட்டேன்.so Blissful,,so Sweet,,

இப்பொழுதுதான் எனக்கு புரிகிறது. ஏன் என் எந்த பதிலையும் கேட்காமல் என்னை அடித்து துரத்தினீர்கள் என்று.

உங்கள் அன்பையும் அக்கறையையும் சாதாரணமானவர்கள் புரிந்து கொள்ள முடியாது என்று கூறி வணங்கினார்.

புதிய ஒளி

புதிய ஒளி பேசாலைதாஸ் 

எதைப் பற்றியும்  எனக்கு  இப்போதெல்லாம் எந்த ஆவலும் இல்லை. இது ஏன்?   பன்னிரண்டு  நூற்றாண்டுகளுக்கு  முன்பு, இதே போல,  ஓர் ஆத்ம ஞானப் பள்ளி  இருந்தது. அது மாபெரும்  சூபி ஞானி  மவ்லானா ஜலாலுதீன் ரூமி என்பவருடையது.  துருக்கி  மொழியில், 'மவ்லானா'  என்றால்,  'அன்புக் குரு' என்று அர்த்தம்.  அந்தச் சொல் வேறு யாருக்குமே அடைமொழியாகப் பயன்படுத்தப் படவில்லை.

அந்தக் குருகுலத்திற்கு முன்னால், 'இந்தப் பள்ளி ஆவல் கொள்கிறவர்க ளுக்கு ஆனதல்ல', என்று எழுதப்பட்டிருந்ததுஆவலுக்கு  எந்த  ஆன்மிக அர்த்தமும் இல்லை.

ஆவல் அல்லது  ஆச்சரியம்  மனதின்  நமைச்சல்.  நமைச்சல்  இருந்தாலும் அது இருக்கும்.  இல்லாவிட்டாலும்  அது இருக்கும்.

ஆவலுக்குள் உணர்ச்சி எதுவும்  இல்லை.  அது மேலோட்டமானது. போகிற போக்கில் ஒரு  விசாரிப்பு, ஒரு வினா எழலாம். அவ்வளவுதான்.  அது உங்கள் தாகம் அன்று; தவிப்பு அன்று. அந்த ஆவலை நிறைவேற்ற  உங்கள்  வாழ்வையே தியாகம் செய்ய மாட்டீர்கள்.  ஓர் ஆராய்ச்சி  கூடச் செய்ய முயல மாட்டீர்கள்.

ஆவல் மலிவானது, யாராவது பதில் சொன்னால் சரி. சொல்லாவிட்டாலும் சரிதான். ஆழ்ந்த கவனம் அதனால் உங்களுக்கு  ஏற்பட்டு விடுவதில்லை. .... அது இதயத்திலிருந்து  எழுவதல்ல. இருத்தலைப் பற்றிய உணர்வு மயமான விசாரணை  ஏற்படுவதற்கு முன்பே ஆவல் மறைந்துவிடும்.

அதனால், அது ஒரு மோசமான அடையாளமல்ல. நீ சரியான பாதையில் தான்  போகிறாய் என்பதைச் சுட்டிக்  காட்டும்  முக்கியமான  அடையாளம்.  சரியான பாதை ஆவல் கொள்கிறவர்களுக்குச் சொந்தமானதல்ல. ஈடுபாட்டுடன், உடன்பட்டு, உண்மையை உணர உயிரையும் தியாகம் செய்யத் தயாராக  இருப்பவர்க்கே  அந்தப் பாதை உரியது. ஆவல் மறைந்தவுடனே,  நீ வெறும்  மாணவனாக அல்லாமல், சீடனாக விடுகிறாய்.

ஒரு மாணவனுக்கும், சீடனுக்குமிடையிலுள்ள வேறுபாடு  இதுதான்.  மாணவனுக்கு  ஆவல் மட்டுமே உண்டு.  சும்மா, எல்லாத் தகவல்களையும்  சேகரிப்பது மட்டுமே. அது கட்டாயத் தேடல் அன்று.  தன் அறியாமையை  மறைக்க அறிவைத் தேடுவது மட்டுமே.

ஆனால்,  அறியாமை என்னவோ அங்கேயேதான் இருக்கிறது.  அதை மூட மூட ஆபத்தாகிறது. காரணம்,  அது உங்களுக்கு  மறந்து போய் விடுகிறது.   தனது அறியாமையை மறந்து போகிறவன் தொலைந்தான் என்றுதான்  சொல்ல வேண்டும்.

நமது அறியாமையை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருப்பது, இரவு இன்னும்  முடியவில்லை, விடியல்  இனிமேல்தான் வரப் போகிறது என்று  அர்த்தம்.  இருள் கரைவதற்கு முன்பு  நீங்கள்  நீண்ட  தூரம்  போகிற வேண்டும்.  அப்போதுதான், விடியலின் முதல்  வெளிச்சத்தைப்  பார்க்க  முடியும்.  அப்புறம்தான் சகல கோலாகலங்களோடு கதிரவன் கீழ்வானில் உதயமாவான், அனைத்து  அழகுகளோடும்; ஆசிர்வதிப்புகளோடும்.

ஆவல் கொள்கிறவனிடம் எந்த ஆழமும் இல்லை. அறிய வேண்டும்  என்ற ஆர்வத் தவிப்பு, உணர்வு  மயமாக எழும்போது, அது, வாழ்வா சாவா என்பது  போலத்தான். அதை அறியாவிட்டால் வாழ்க்கை  பசுமையற்ற பாலைவனமாகி விடுமே என்று  தோன்றும். அறிந்தே ஆக வேண்டும்  என்ற  நிர்ப்பந்த உணர்வு  எழும். உணராவிட்டால் வாழ்வு பயனற்றது என்று  தோன்றும். அறிந்தால்தான் வாழ்வுக்கு அர்த்தமிருக்கும், முக்கியத்துவம்  இருக்குமென்று  தோன்றும்.

அந்தத் தவிப்பில் ஆழத்தில்  குதித்து  விடுவீர்கள்.  அப்படிப்பட்ட  ஒரு  கட்டம் வரும்.  அது அறிதல் மட்டுமல்ல. அதுவாக இருத்தலுக்கான தவிப்பு.

அறிவு எப்போதும் இருக்கவே செய்கிறது.  உங்களுக்கும்  அதற்குமான இடைவெளி  அதிகம். அவ்வளவுதான்.  அதனுடன்  நீங்கள்  சேர்ந்து  இருக்கவில்லை.  அறிபொருளிலிருந்து அறிபவன் பிரிந்திருக்கிறான். இதுதான் அறிவின் நிலைபாடு.  தண்ணீரும் இருக்கிறது. நீங்களும்  இருக்கிறீர்கள். தொடர்பு அம்சம்தான் இல்லை.  அதனால், தாகம் அதிகமாகி விடுகிறது.

ஒரு சீடனின் வாழ்வில், அறியும்  தாகத்தைத் கைவிட்டு,  இருத்தலுக்கான  தாகம் ஏற்படும் மாபெரும்  கணம் ஏற்படும்.

ஆவலுக்கு  ஆவல் தகவலில் மட்டுமே.

சீடனுக்கோ ஞானத்தில்தான் ஆசை.

பக்தனுக்கு  மாற்றத்தில்தான் விருப்பம். அவனுக்கு  உண்மை உணர்வதில் ஈடுபாடில்லை. அதில் நிறைவு ஏற்படுவதில்லை.  அவனே உண்மையாக ஆனால்தான்  உண்டு.

சொல் வறுமையால்தான், 'ஆனால் ' என்று  சொல்கிறேன். யாரும்  உண்மையாக ஆவதில்லை.  ஏனென்றால், எல்லாருமே உண்மையாகத்தான் இருக்கிறார்கள்.

உண்மை என்பது உங்களது இருப்பு. 'ஆகு‌ம் ' காரியமல்ல, அது. ஆகக்கூடிய காரியம்  அல்ல, அது.  வழிமுறையுமல்ல. பயணம் போகிற வேண்டிய பாதையும் அல்ல. நீங்கள்  சென்றடைய வேண்டிய தொலை தூரத்துக் குறிக்கோளும் அல்ல.

உண்மை உங்களது உள்ளிருப்பு. நீங்கள்  உணர்கிறீர்களோ இல்லையோ, எல்லையற்ற காலமாய் அது எப்போதும்  இருப்பது. நீங்கள்  அடையாளம் கண்டு கொள்கிறீர்களோ இல்லையோ, அது அங்கேயேதான்  இருக்கிறது.

ஒரு பக்தன் உண்மையாக ஆவதில்லை.  தானே உண்மை என்பதை அவன் கண்டு கொள்கிறான்.    மனிதப் பிரக்ஞையால் கண்டு பிடிக்கப்படும் மாபெரும் கண்டுபிடிப்பு அதுதான்.

அதனால்தான், எந்த ஆவலும்  இல்லையென்று நீ சொன்னதை நல்லது என்கிறேன். அது ஒரு பக்குவம். மாணவ நிலையிலிருந்து சீட நிலைக்கு மாறியதன் அடையாளம். நீ சீட நிலையிலிருந்தும் மாறிப் பக்தன் நிலைக்கு நகர்ந்து  விட்டாய்.

உன்னுடைய தாகம், உன்னுடைய  விசாரணை, இனி வரண்ட தேடல் அல்ல. அது  உன்னுடைய காதலாகிவிட்டது; உன் இதயத் துடிப்பாகி விட்டது. எல்லா ஆவல்களும் அதனால் இயல்பாகவே காணாமல்  போய் விட்டன.

ஒரு நாள்  -- உண்மையை அறிவதும், தெய்வீகத்தை அறிவதும், அழகை அறிவதுமான எல்லாம்  போய்விடும்.  அறிதலில் ஆர்வம் போய்விடும்.  தண்ணீரை அறிவதால் என்ன பயன்? அதை அறிவியல் பூர்வமாக அறிவதும்கூட -- நீரகம், தீயகம் கலந்ததென்று  -- உங்கள்  தாகத்தைத் தீர்க்காது.

அந்தப் பாதையின் முக்கியமான கட்டம், உங்களை அறிவதுதான்.  நீங்கள்  அதுவாகத்தான்  ஏற்கனவே இருந்து வருகிறீர்கள்.  அது தெரிகிறதோ இல்லையோ, நீங்கள்  ஆதாரபூர்வமான அதுதான்.  உங்கள்  அடிப்படை, சாரம், இருப்பு அதுவேதான். அதற்குள் இருப்பவையே ....

சத்தியம், சிவம், சுந்தரம்.

உங்கள்  உண்மையை உணரும் போதுதான்  தெய்வீகமும்,  எல்லையற்ற அழகும் எழும். உங்களது இருப்பு, தெய்விகத்தின் ஒரு பகுதி. அப்போது உங்களது ஒவ்வொரு அசைவும் ஒரு  நடனமாகும். உங்களது ஒவ்வொரு  மெளனமும் ஒரு பாடலாகும். உங்கள் சொற்கள் தீப்பற்றி எரியும்.  அது புதிய நெருப்பு. அது புதிய ஒளி -- உங்களுடைய வாழ்வு முழுதுமே காந்த சக்தியின் ஆற்றலாகி விடும்.

உளவாளிகள்

உளவாளிகள் பேசாலைதாஸ்

 சாத்தானிடம் வேலை பார்க்கும் ஒரு குட்டிப்பிசாசு சாத்தானைப் பார்க்க அரக்கப் பரக்க ஓடி வந்தது.

பயத்தால் நடுங்கியபடி சாத்தானைப் பார்த்து பேச ஆரம்பித்தது...

சாத்தானே ஆபத்து, ஆபத்து,,,

உடனே நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.

இல்லாவிட்டால் இந்த உலகத்தில் தீமைகள் அழிந்துவிடும்.

நாமும் அழிந்து விடுவோம்.

குட்டிப்பிசாசே,,, உளறாமல் முதலில் விஷயத்தைச் சொல் "

"சாத்தானே "பூலோகத்தில் ஒரு மனிதன் அடிப்படை உண்மைகளை கண்டுபிடித்து விட்டானாம்.

அதனை அவன் எல்லோரிடமும் சொல்லி விடுவான்....

எல்லோருக்கும் உண்மை தெரிந்து விட்டால் அன்பு பெருகும்

தீமை அழிந்துவிடும்...

பிறகு அங்கே நமக்கென்ன வேலை?"

சாத்தான் கடகடவென்று சிரித்தது...

முட்டாள் பிசாசே,,,

முதலில் உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கொள்.

முட்டாள் தனமாக. எஎவும் பேசாதே.

விஷயம் எனக்கும் தெரியும்.

நமது ஆட்களை நான் ஏற்கனவே அங்கு அனுப்பி விட்டேன்...

இனிமேல் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

கவலைப்படாதே,,,,

தீமை என்றுமே அழியாது."

ஆனால்,,, ஆனால்,,, நான் அங்கிருந்துதானே நேரே இங்கே ஓடி வருகிறேன்....

அங்கே நமது ஆட்கள் யாரையும் நான் பார்க்கவில்லையே "

அந்த உண்மையைக் கண்டு பிடித்தவனைச் சுற்றி அறிஞர்கள், தத்துவஞானிகள், பண்டிதர்கள், பூசாரிகள், பாதிரியார்கள் . மதகுருமார்கள் நின்று கொண்டிருப்பார்களே?

அவர்கள் எல்லாம் நமது ஆட்கள்தான்...

அதனால் நீ எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்...

இந்த மேதாவிகள் போடும் வாய்ச் சண்டையில் இவர்களுடைய வாதங்கள், பிரதிவாதங்களில், இவர்கள் அடிக்கும் கூத்தில் உண்மை துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி விடும்....

இவர்கள் மூலமாகத்தான் நான் என் ரகசிய வேலையைச் செய்கிறேன். அவர்கள் என்னுடைய ரகசிய பிரதிநிதிகள்....

என்னுடைய உளவாளிகள்.

நான் அங்கே போனாலும் கூட  மாறுவேடத்தில் தான் போவேன்...

இவர்கள் அடிக்கும் கூத்தில் அந்த ஞானியால் ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கும் வயதாகிவிட்டது..

அவர் காலம் முடிந்துவிடும்...

அதன் பின் என் ஆட்கள் அந்த ஞானியின் சீடர்களாக,

அவரது பிரதிநிதிகளாக,

அவரது தூதர்களாக தங்களை அறிவித்துக் கொண்டு அவர் பெயரால் ஒரு மதத்தை தொடங்கி அவர் கண்டுபிடித்த மெய்ஞானத்தை பூண்டோடு அழித்து விடுவார்கள்."..