சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு? பேசாலைதாஸ்
குளிர்ப் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணங் கொண்ட ஒரு சிட்டுக்குருவி வாழ்ந்து வந்தது. இலையுதிர்கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசையை நோக்கிப் பறக்க ஆயுத்தமா யின ஆனால் இந்த சிட்டுக்க்குருவி மட்டும் அவைகளோடு செல்லக் கூடா தெனத் தீர்மானித்துவிட்டது.
குளிர்காலம் வந்தது, குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குறுவி கல ங்கிவிட்டது. கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்த போது அந்த குளிரின் கடுமையில் பறந்தால், மரணம் நிச்சயம் என்பதை அறிந்து இருந்த இடத்திலேயே இருந்துவிட்டது. அடர்ந்த பனிவீழ்ச்சியி னால், அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்கவிடாமல் செய்ததோடு அது மரத்தினின்று கீழே ஒரு விவசாயின் வீட்டு முற்றத்தில் வீழ்த்திவிட்டது
அந்த முற்றத்தில் சென்று, கொண்டிருந்த பசு ஒன்று அந்த சிட்டுக்குருவி மீது சாணம் போட்டுவிட்டு சென்றுவிட்டது. சிட்டு குருவிக்கு மூச்சு திணறி னாலும் அந்த சாணத்தின் சூடு வெப்பம் அதற்கு இதமாக இருந்தது சூட்டி னாலும், மூச்சுவிட முடிந்ததாலும் மகிழ்ச்சியுற்ற அந்த சிட்டுக்குருவி பாட ஆரம்பித்தது
அந்தப் பக்கமாக வந்த பூனை பாட்டு வரும் திசையை கண்டது, சாணத்தை அகற்றிப் பார்த்தது பறவையை பார்த்ததும் மகிழ்ச்சியோடு அதை விழுங்கிவிட்டது
அன்பர்களே இந்த கதையில் இருந்து நாம் தெரிந்துகொள்ளக்கூடிய மூன்று படிப்பினையுண்டு. உன் மீது சாணம் போடுபவன்,உன் எதிரியாய் இருக்க வேண்டிய.அவசியம் இல்லை.அவன் யாராகவும் இருக்கலாம். அடுத்த படிப்பினைஉன்னை சாணத்திலிருந்து, அகற்றுபவன் உன் நண்பனா கத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவன் உன் எதிரியாகவும் இருக்காலம், இது காலத்தின் ஏற்பாடு
நீ மகிழ்ச்சியாக சாணத்தின் இதமான சூட்டில் அடங்கி இருக்கிறாய் என்றால்,சத்தமிடாமல் அமைதியாக இருக்கலாமே, எல்லாமே விதி வசம். நம்மில் பலர் அப்படித்தான், வசதிகள் வரும்போது, பட்டகஸ்டங்கள் மறந்து அந்த சிட்டுக்குருவிபோல வாழ முற்படுகின்றோம். அன்புடன் பேசாலைதாஸ்

No comments:
Post a Comment