Tuesday, 5 March 2019

மனம் என்னும் அற்புத ஓடை! பேசாலைதாஸ்

மனம் என்னும் அற்புத ஓடை! பேசாலைதாஸ்


                                             நமக்குள் இருக்கும் அற்புத கருவி, நமது மனம். நாம் நம் மனதுடன் எப்போதும் ஒத்துப்போவதில்லை, எப்பொழுது பார்த்தாலும் நேர் எதிர் முரண்! மனதை  நாம் அனுபவிக்கவேண்டும், மனது என்ன சொல்கின்றது என்பதை மெதுவாக, அமைதியாக கேளுங்கள்! மனம் போல் வாழ்வு என்பார்களே அது எதற்காக? மனதை நிறுத்த முயற்சி செய்யா தீர்கள். சலனம் அதன் இயல்பு. அதை நிறுத்த முயற்சி செய் தால் உனக்கு பைத்தியம் பிடித்து விடும். 

                                        ஒரு மரம் இலை விடுவதை நிறுத்துவதைப் போன்றது இது.. மரத்துக்கு பைத்தியம் பிடித்துவிடும். மரத்து க்கு இலைதான் இயல்பு. நீ மனவயப்பட்ட ஒருவன், அதற்கு எதிராக‌ மாற முயற்சி செய்தால் தேவையில்லாமல் உனக்கு நீயே தொந்தரவுகளை உருவாக்கிக் கொள்வாய். ஏனெனில் மனதிலிருந்து நகர்ந்து செல்வதற்கு வழிகள் உள்ளன. அது உன்னுடைய இயல்புக்கு மாறானது. 

                                    உனது இயல்புடன் ஒன்றிவிடுவதற்கு, உனது இயல்பை பின்பற்றுவதற்கு கற்றுக் கொள். இயல்பாக இருப் பதுதான் முத‌ன்மை. உனது இயல்புடன் லயப்படுவதுதான் மிக முக்கியமானதேவை. அதனால் உனது சிந்தனையை நிறுத்த முயற்சி செய்யாதே. அது மிகவும் சரியானதே.  

                               மனம் தனது வேலையை செய்வதை அனுபவி. மனது வேலை செய்வதை நிறுத்துவதற்கு முயலாதே. அதை அனுபவி. அதனுடன் விளையாடு. அது மிக அழகான விளையா ட்டு. அதனுடன் விளையாடு, அதை அனுபவி, அதை விரும்பு, அதைப் பற்றி விழிப்புடன் இரு, அதை பற்றி கவனம் கொள். மனதின் எண்ண ஓட்டத்தை பார். அவை எப்படி ஓடுகிறது, எப்படி ஒன்று ஒன்றுக்கு அழைத்துச் செல்கிறது என்று பார். ஒன்று ஒன்றை எப்படி இழுக்கிறது என்று பார். அது ஒரு அதிசயம். ஒரு சிறிய எண்ணம் எங்கோ இழுத்துச் செல்வதை கவனி. ஆரம்பித்த இடத்துக்கும், முடியும் இடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததை பார்.

                                         ஒரு நாய் குரைக்கும், உனது எண்ண ஓட்டம் தூண்டப்படுகிறது. நாய் மறக்கப்பட்டு விடுகிறது, அழகான நாய் ஒன்றை வைத்திருக்கும் உனது நண்பனின் ஞாபகம் வரு கிறது. பின் நீ அங்கு , அவன் இல்லை. நண்பன் மறந்து போய் அவனின் அழகான மனைவி நினைவுக்கு வருகிறாள், பின் வேறொரு பெண்……. நீ எங்கே போய் முடியப் போகிறாய் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அது ஒரு நாய் குரை ப்பதில் ஆரம்பிக்கிறது. 

                                          கவனி, எண்ணங்களின் தொடர்பை பார். எண்ணங்களின் சங்கிலியை பார். எளிதாக எடுத்துக் கொள்,  விழிப்புணர்வுடன் இரு, உன் மன ஓட்டம் அடுத்தவனுக்கு துன் பம் தருமென்றால், அதன் ஓட்ட திசையை மாற்று, நாய் குரை ப்பதில் ஆரம்பித்த எண்ண ஓட்டம், உன் நண்பன் மனைவி யின் அழகில் நின்றுவிட அனுமதியாதே! 

                                              அந்த எண்ணம் எப்படியோ வந்துதான் போகும்,  சஞ்சலப்படாதே  உன் நண்பணின் மனைவியின் அழகில் நின்றுவிட்டால் அங்குதான் ஆரம்பிக்கின்றது தொந்த ரவு! அது மறைமுகமாக வரும். உனது மனம் உன்னை திசை திருப்புகிறது, அதனால் உனக்கு கோபம் வருகிறது. இந்த கேடுகெட்ட மனம் தொடர்ந்து உளறிக் கொண்டேயிருப்பதை நீ உணர்கிறாய். 

                                  நீ அமைதியாக இருக்க முயற்சி செய்கிறாய், ஆனால் இந்த மனம் அதற்கு அனுமதிப்பதேயில்லை. அதனால் நீ மனதிடம் ஆத்திரம் கொள்கிறாய். அது நல்லதல்ல. இது உன்னை இரண்டாக பிரித்துவிடும். நீயும் உன் மனமும் என இரண்டாக பிரிந்து இருப்பீர்கள். எல்லா பிளவுகளும் தற் கொலைக்கான முயற்சியே. ஏனெனில் உனது சக்தி தேவையின்றி வீணாகிறது. 

                                     நம்முடன் நாமே சண்டையிட்டுக் கொள்ளும் அளவு நம்மிடம் சக்தி இல்லை. அதே சக்தியை நாம் சந்தோ ஷத்துக்கு செலவிட வேண்டும். சண்டையிடுதல் உன்னை அழித்துவிடும். சண்டையிட வேண்டிய அவசியம் இல்லை – அன்பு செய். எல்லா அழிவு சக்திகளும் அன்பு சக்தியாக மாற வேண்டும். அழகியலில் இரசித்து, கவிதையாக எல்லாவற் றையும் இரசிக்க கற்றுக்கொள். அனுபவித்துப்பார் விரைவில் எல்லா விஷயங்களும் மாற ஆரம்பிக்கும்.  அன்புடன் பேசாலைதாஸ்

Saturday, 2 February 2019

நான் நானே, நீங்கள் நீங்களே!

நான் நானே, நீங்கள் நீங்களே!   பேசாலைதாஸ்
                                           
                  மக்கள் எப்போதும் தம்மைப் பிறருடன் ஒப்பிடுவது வழக்கம். இந்த ஒப்பீடுகளால்தான் அவர்கள் மகழ்ச்சியாகவோ, துக்க மாகவோ இரு க்கிறார்கள். புகழ் பெற்ற மகான் ஒருவர் இப்படி சொல்கின்றார். "துக்கப்படுகிறவர்களைப் பார் ப்பதில்தான் மகி ழ்ச்சியின் மர்மமே இருக்கிறது. ஊனமானவனைப் பார்க் கும்போது, நீ ஊனமில் லாமல் இருப்பதற்காக மகிழ்வு தோன்றும். கண் ணற்றவனைப் பார்க் கும்போது, நீ அப்படி இல்லை என்பதில் மகிழ் ச்சி பிறக்கும். ஏழை யைப் பார்த்தால் நாம் ஏழை இல்லை என்பதில் ஆனந்தம் தோன்றும்", என்றார் அவர். அவர் சொல்லும் விளக்கத்தில் நான் ஒத்துப்போக தயா ராக இல்லை!


                                                நான் நினைப்பது இதுவே, ஒப்பிட ஆரம்பித்தால் அதற்க்கு முடிவே இல்லை. பரிதாபத்திற்குரியவர் களோடு மட்டுமே ஒருவன் தன்னை ஒப்பிட்டுக் கொள்ளமாட்டான். தன் னை விட வலிமை படைத்தவனோடும், மதிப்பு மரியாதை கொண்டவ னோடும் ஒப் பிட ஆரம்பிப்பான். அதனால், துக்கமே உண்டாகும். நம்மை விட உயர் வாக வாழும் மனிதர்களுடன் ஒப்பிடாமல், நமக்கு கீழே உள்ள மனிதர் களைப்பார்த்து, அவர்களின் துக்கங்கங்களை, இன்னல்களை ஒப்பிட்டு நாம் நிறைவடையவேண்டும் என்பதற்காக சிலர் இப்படி சொல் கின்றார்கள். 

                                                                                       இப்படித்தான் காலம் காலமாக நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள், வெவ்வேறு வார்த்தைக ளில். ஆனால், அடிப்படை என்னவோ ஒன்றுதான். பல மத நுல்களும் இதைத்தான் சொல்கின்றன. மக்கள் துக்கப்படுகிறவர்களைப் பார்த்து நிறைவடைகிறார்கள். தாம் அப்படித் துன்பப் படவில்லையே என்று கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள். இது ஒரு பக்கச் சார்புடையதாகத் தொடர்ந்து இருந்து வரக் கூடாது.  என்பது எனது வாதம்! பிறரோடு உங் களை ஒப்பிட ஆரம்பிக்கும்போது உங்களை விடத் தாழ்ந்தவர்களோடு மட்டுமல்லாமல்,உயர்ந்தவர்களோடும் ஒப்பிடவே தோன்றும். மிஞ்சுவது நீங்காத கவலைதான். 

                                                                      ஒப்பிடுதலே சரியில்லை என்கின்றேன் நான் . நீங்கள் நீங்களேதான். நான் நானே தான்! வேறு யாரும் அல்ல.  நீங்களோ நானோ ஒப்பற்றவர்கள், மகத்தானவர்கள். கடவுளால் படைக்க ப்பட்ட மகத்தான படைப்பே நாம்! சுருக்கமாக சொல்லப்போனால் நமது ஆன்மா அழிவற்ற ஆற்றலோடு படைக்கப்பட்டது, நமது உடலும் அழிவத ற்காக படைக்கப்பட்டதல்ல, இது மற்ற எல்லா மத போதனைகளைவிட கிறிஸ்தவத்தில் ஆணித்தரமாக சொல்லப்பட்டடிருக்கின்றது. 

                                                                              அப்படியானால் ஏன் உடல் மரணம  டைகின்றது? அழிவடைகின்றது என்ற கேள்வி எழும்புகின்றதல்லவா? பாவத்தின் சம்பளம் மரணம்! எனவே உடல் அழிவுக்காக சபிக்கப்பட்ட தாக இருக்கின்றது. ஆனாலும் கிறிஸ்து ஒருவர் நம் பாவங்களுக்காக மரித்து, அழிவுக்குள்ளான நமது உடலை நித்திய ஜீவியத்துக்கு உரித் துள்ளதாக மாற்றிவிட்டார். அதுவே இரட்ச்சிப்பு! எனவே நமது உயிரும் உடலும் மகத்தானவை, மக‌த்துவமாக நாம் ஒவ்வொருவரும் படைக்கப் படுள்ளோம். மற்றவரும் அப்படியே. அதனால்தான், ஒப்பிடாதீர்கள். ஒப் பிடுவது உலகத்தோடு உங்களை விலங்கு மாட்டி விடுவது. அது போட்டி பொறாமைகளை ஏற்படுத்திவிடுகிறது. அது தனியாக வருவதில்லை. துணையுடனே வருகிறது.

                                                    ஒப்பிடுவதற்கு முடிவே இல்லை.ஆனால், நீங்கள் முடிந்துவிடுவீர்கள்!அதை ஏற்றுக் கொள்வது, வாழ்வின் தவறான பாதை யைத் தேர்ந்தெடுப்பதாகும். எனவே ஒருபோதும் நம்மை நாம், மற்றவர்க ளின் வாழ்க்கையோடு ஒப்பிடாமல், விண்ணக வாழ்வோடு, தற்போ தைய வாழ்வை ஒப்பிட்டு, நிஜவாழ்வில் நிறைவு காண்போம், அன்புடன் பேசாலைதாஸ்