Saturday, 2 February 2019

நான் நானே, நீங்கள் நீங்களே!

நான் நானே, நீங்கள் நீங்களே!   பேசாலைதாஸ்
                                           
                  மக்கள் எப்போதும் தம்மைப் பிறருடன் ஒப்பிடுவது வழக்கம். இந்த ஒப்பீடுகளால்தான் அவர்கள் மகழ்ச்சியாகவோ, துக்க மாகவோ இரு க்கிறார்கள். புகழ் பெற்ற மகான் ஒருவர் இப்படி சொல்கின்றார். "துக்கப்படுகிறவர்களைப் பார் ப்பதில்தான் மகி ழ்ச்சியின் மர்மமே இருக்கிறது. ஊனமானவனைப் பார்க் கும்போது, நீ ஊனமில் லாமல் இருப்பதற்காக மகிழ்வு தோன்றும். கண் ணற்றவனைப் பார்க் கும்போது, நீ அப்படி இல்லை என்பதில் மகிழ் ச்சி பிறக்கும். ஏழை யைப் பார்த்தால் நாம் ஏழை இல்லை என்பதில் ஆனந்தம் தோன்றும்", என்றார் அவர். அவர் சொல்லும் விளக்கத்தில் நான் ஒத்துப்போக தயா ராக இல்லை!


                                                நான் நினைப்பது இதுவே, ஒப்பிட ஆரம்பித்தால் அதற்க்கு முடிவே இல்லை. பரிதாபத்திற்குரியவர் களோடு மட்டுமே ஒருவன் தன்னை ஒப்பிட்டுக் கொள்ளமாட்டான். தன் னை விட வலிமை படைத்தவனோடும், மதிப்பு மரியாதை கொண்டவ னோடும் ஒப் பிட ஆரம்பிப்பான். அதனால், துக்கமே உண்டாகும். நம்மை விட உயர் வாக வாழும் மனிதர்களுடன் ஒப்பிடாமல், நமக்கு கீழே உள்ள மனிதர் களைப்பார்த்து, அவர்களின் துக்கங்கங்களை, இன்னல்களை ஒப்பிட்டு நாம் நிறைவடையவேண்டும் என்பதற்காக சிலர் இப்படி சொல் கின்றார்கள். 

                                                                                       இப்படித்தான் காலம் காலமாக நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள், வெவ்வேறு வார்த்தைக ளில். ஆனால், அடிப்படை என்னவோ ஒன்றுதான். பல மத நுல்களும் இதைத்தான் சொல்கின்றன. மக்கள் துக்கப்படுகிறவர்களைப் பார்த்து நிறைவடைகிறார்கள். தாம் அப்படித் துன்பப் படவில்லையே என்று கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள். இது ஒரு பக்கச் சார்புடையதாகத் தொடர்ந்து இருந்து வரக் கூடாது.  என்பது எனது வாதம்! பிறரோடு உங் களை ஒப்பிட ஆரம்பிக்கும்போது உங்களை விடத் தாழ்ந்தவர்களோடு மட்டுமல்லாமல்,உயர்ந்தவர்களோடும் ஒப்பிடவே தோன்றும். மிஞ்சுவது நீங்காத கவலைதான். 

                                                                      ஒப்பிடுதலே சரியில்லை என்கின்றேன் நான் . நீங்கள் நீங்களேதான். நான் நானே தான்! வேறு யாரும் அல்ல.  நீங்களோ நானோ ஒப்பற்றவர்கள், மகத்தானவர்கள். கடவுளால் படைக்க ப்பட்ட மகத்தான படைப்பே நாம்! சுருக்கமாக சொல்லப்போனால் நமது ஆன்மா அழிவற்ற ஆற்றலோடு படைக்கப்பட்டது, நமது உடலும் அழிவத ற்காக படைக்கப்பட்டதல்ல, இது மற்ற எல்லா மத போதனைகளைவிட கிறிஸ்தவத்தில் ஆணித்தரமாக சொல்லப்பட்டடிருக்கின்றது. 

                                                                              அப்படியானால் ஏன் உடல் மரணம  டைகின்றது? அழிவடைகின்றது என்ற கேள்வி எழும்புகின்றதல்லவா? பாவத்தின் சம்பளம் மரணம்! எனவே உடல் அழிவுக்காக சபிக்கப்பட்ட தாக இருக்கின்றது. ஆனாலும் கிறிஸ்து ஒருவர் நம் பாவங்களுக்காக மரித்து, அழிவுக்குள்ளான நமது உடலை நித்திய ஜீவியத்துக்கு உரித் துள்ளதாக மாற்றிவிட்டார். அதுவே இரட்ச்சிப்பு! எனவே நமது உயிரும் உடலும் மகத்தானவை, மக‌த்துவமாக நாம் ஒவ்வொருவரும் படைக்கப் படுள்ளோம். மற்றவரும் அப்படியே. அதனால்தான், ஒப்பிடாதீர்கள். ஒப் பிடுவது உலகத்தோடு உங்களை விலங்கு மாட்டி விடுவது. அது போட்டி பொறாமைகளை ஏற்படுத்திவிடுகிறது. அது தனியாக வருவதில்லை. துணையுடனே வருகிறது.

                                                    ஒப்பிடுவதற்கு முடிவே இல்லை.ஆனால், நீங்கள் முடிந்துவிடுவீர்கள்!அதை ஏற்றுக் கொள்வது, வாழ்வின் தவறான பாதை யைத் தேர்ந்தெடுப்பதாகும். எனவே ஒருபோதும் நம்மை நாம், மற்றவர்க ளின் வாழ்க்கையோடு ஒப்பிடாமல், விண்ணக வாழ்வோடு, தற்போ தைய வாழ்வை ஒப்பிட்டு, நிஜவாழ்வில் நிறைவு காண்போம், அன்புடன் பேசாலைதாஸ்

No comments:

Post a Comment