Thursday, 21 November 2024

How could we live without mobil?

How could we live without mobil?     Pesalaithas 

One day, a young man asked his grandfather: 'Grandpa! How could they live before...

- without technology

- without internet

- without computers.

- without drones

- No Bitcoins

- no phones.

- without facebook

The grandfather answered:

"just like your generation lives today...

- without prayers.

- without dignity.

- without compassion.

- scoundrel

- without honor.

- without respect

- no personality

- Out of character

- without self-love

- without modesty.

- without honor.

We, the people born between 1950 and 1991, are the blessed ones, our life is living proof.

- when we rode bikes, we never wore helmets.

-After school we did homework and went out to play until nightfall.

-We play with real friends, not with internet friends.

-If we ever feel thirsty, let's drink tap water, not bottled water.

-We never get sick sharing the same glass with our friends.

-We never gain weight by eating rice dishes every day.

-Nothing happened to our feet, despite walking barefoot.

- We never use supplements to stay healthy.

- We used to create our own toys and play with them.

Our parents were not rich, they gave us love, not worldly materials.

- We never had cell phones, DVDs, play stations, Xbox, video games, PCs, internet... but yes, we had real friends.

-We visited a friend's house without invitation and enjoyed the meal with them.

-Relatives lived nearby to enjoy family time.

- We may have appeared in black and white photos, but in those photos you can find very colorful memories.

- We are a unique and more understanding generation, because we are the last generation that listened to their parents..."..

மனிதத்தின் வெளிப்பாடு......

 மனிதத்தின்  வெளிப்பாடு......பேசாலைதாஸ்


ஒரு ஊரில் பஞ்சத்தினால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். அங்கு வந்து நிலைமையைக் கண்ட புத்தர் தன்னைக் காண வந்திருந்த அனைத்துத் தரப்பினரையும் பார்த்து.,

 ''இங்கு பட்டினி கிடக்கும் மக்களுக்கு உணவளிக்கும் பணியை யார் செய்யத் தயாராயிருக்கிறீர்கள்?''என்று கேட்டார்.

ஊரின் பெரும் பணக்காரர்,

''எனக்கு சொந்தமான எல்லாப் பணத்தை  செலவழித்தாலும் பத்தாதே,''என்று அங்கலாய்த்தார்.

படைத்தலைவர் ஒருவர்,

''ஏதாவது போர் என்றால் நாட்டு மக்களுக்காக என் ரத்தம் சிந்தத் தயாராயிருக்கிறேன். ஆனால் பட்டினி கிடப்போருக்கு உணவளிக்க தேவையான உணவு என் வீட்டில் இல்லையே,''என்றார்.

நிலச்சுவான்தார் எழுந்து,

''இந்தப் பஞ்சம் வந்தாலும் வந்தது,எனது வயல்களில் சுத்தமாக விளைச்சல் இல்லை.

இந்த ஆண்டு அரசுக்கு எவ்வாறு வரி செலுத்தப் போகிறேன் என்பதே எனது இப்போதைய கவலை. எனவே என்னால் ஒன்றும் செய்ய இயலாது. ''என்றார்.

அப்போது ஒரு பிச்சைக்காரி எழுந்து,புத்தரை வணங்கி,

''பட்டினி கிடப்பவர்களுக்கு நான் உணவளிக்கிறேன், ''என்றாள்.அனைவருக்கும் ஆச்சரியம்.,

.''அது எப்படி உன்னால் முடியும்,'' என்று அனைவரும் கேட்டார்கள்.

அவள் பணிவுடன் சொன்னாள்,

''ஐயா,நான் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வருகிறேன். அப்போது இங்கு,தன்னால் முடியாது என்று சொன்னவர்கள், தங்களால் இயன்றதை பிச்சையாகக் கொடுத்தால் அதையெல்லாம் ஒன்று சேர்த்து நான் பசியால் வாடுபவர்களின் துயர் தீர்ப்பேன்,''என்றாள்.

அவளுடைய தன்னம்பிக்கை கண்டு புத்தர் அவளுக்கு ஆசி அளித்தார்.

மற்றவர்களுக்கு நீங்கள் செய்யும் சிறிய அல்லது பெரிய உதவிகள்  மற்றவர்களை மகிழ்வித்து  நீங்களும்மகிழ்வுற்று இன்பமாக வாழலாம்..

எதுவுமே முடியா விட்டால், எதிரில் இருப்பவர்களை கடுஞ்சொற்களால் காயப்படுத்தாமல் இருப்பதே 

மனிதத்தின்  வெளிப்பாடு....

மனதின் பிரதிபலிப்பு

மனதின் பிரதிபலிப்பு   பேசாலைதாஸ் 


கோடீஸ்வரர் ஒருவர்  முகம் பார்க்கும் கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட அறை ஒன்றை கட்டினார். அந்த அறைக்குள்  யார் நுழைந்தாலும் நூற்றுக் கணக்கான பிம்பங்களாக அவரது வடிவம்  தெரியும். ஒருமுறை, அவர் வளர்த்து வந்த நாய் ஒன்று அந்த அறைக்குள் நுழைந்து விட்டது.

சுற்றிலும் பார்வையை செலுத்தி திகிலடைந்து விட்டது. சுற்றிலும் ஒரே நாய் கள் கூட்டம். அவைகள் வெவ்வேறு நாய்கள் என்று நினைத்து  குரைக்க ஆரம்பி த்து விட்டது. அதை சுற்றியுள்ள நாய்களும் ஒன்று சேர்ந்து குரைக்க ஆரம்பித்து விட்டன. நாய் ஒன்றே ஒன்றுதான்.

அனைத்தும் அந்த நாயின் பிம்பம் தான். நாயுடன் சண்டையிட ஆரம்பித்து விட்டது. ஒவ்வொறு நாயின் மேல் மோதும் போதும்  அது முகத்தில் அடிபட்டு கீழே விழுந்தது. முகத்தின் வலி குறையாமலும், மனதின் பயம் போகாமலும் அது மோதிக் கொண்டே இருந்தது. உங்களுக்கும் இதுதான் நிகழ்ந்து கொண்டி ருக்கிறது.

உண்மையோ ஒன்றுதான். ஆனால், மனதின் பிரதிபலிப்பு அதிகம். மாறுவதும், பயமுறுத்துவதும் அனைத்தும் மனதின் செயலே. நீங்கள் அமைதியாக இருந் தால், உங்களை சுற்றியுள்ள அனைத்தும்  அமைதியாகி விடும்

Sunday, 17 November 2024

சம்பிரதாய சடங்குகளே மதம்

 சம்பிரதாய சடங்குகளே மதம் பேசாலைதாஸ்


மதம் தெளிவான சிந்தனை.

ஒரு ஊரில் ஒரு பெரியவர் இருந்தார், 

அவர் ஆசையாக ஒரு ரோஜா செடியை அவர் வீட்டு வாசலில் வைத்து வளர்த்து வந்தார்.. 

அந்த செடி அழகாக பூத்து குலுங்கியது..

அந்த செடி வளர்ந்து வரும் வேளையில் அந்த பக்கமாக வரும் ஆடு, மாடு கோழி போன்றவை அந்த செடியை மிதிப்பதும், கடிப்பதுமாக நாசம் செய்து கொன்டிருந்தன..

இதை கண்ட அந்த பெரியவர் அந்த செடியை பாதுகாக்க என்னி அந்த ரோஜா செடியை சுற்றிலும் சில முள் வேலிகளை போட்டு வைத்தார்..

ரோஜா செடியை சுற்றிலும் முள் வேலிகள் இருந்ததால் அந்த செடி பாதுகாப்பாக வளர்ந்து வந்தது..

இப்போது ஆடு, மாடு, கோழிகளால அந்த செடிக்கு ஆபத்து இல்லை.. சிறிது காலம் சென்றது அந்த பெரியவர் இறந்து விட்டார்..

பிறகு அவருடைய மகன் வந்தான், அந்த செடியை பார்த்தான் தன் தந்தை ஆசையாக வளர்த்த செடி ஆயிற்றே என்று அவனும் ஆசையாக தன்னீர் ஊற்றி வளர்த்து வந்தான்..

சிறிது காலத்தில் அவனும் இறந்து விட்டான் பிறகு அவனுடைய மகன் வந்து இது, என் தாத்தாவும் தந்தையும் வளர்த்த செடி நானும் வளர்க்க வேண்டும் என்று அவனும் தண்ணீர் ஊற்றி வளர்க்க ஆரம்பித்தான்..

இப்படியே ஒவ்வொரு தலைமுறையும் அந்த செடியை வளர்த்து வருகிறோம்..

ஆனால் உண்மையில் நடந்தது அந்த ரோஜா செடி பெரியவர் காலத்திலேயே பட்டுப்போய் விட்டது,

இப்போது அவர்கள் செடி என்று வளர்ப்பதெல்லாம்அதை சுற்றி 

இருந்த முள் வேலிகளையே..

இதே போலத்தான் பெரியவர்கள் 

மதம் என்று ஒன்று உருவாக்கியது 

மனிதனை செழுமைப்படுத்த வேண்டும் 

என்ற நோக்கிலேயே..

அந்த மதம் அழியாமல் இருக்க முள் வேலி போன்று மதத்திற்க்கு சில சம்பிரதாய சடங்குகளை விதித்தனர்..

ஆதியில் மதத்தை கடைபிடித்த மனிதன் இப்போது ஒவ்வொரு மதத்திலும் இருக்கும் சம்பிரதாய சடங்குகளையே மதம் என்று எண்ணி கடைபிடிக்க ஆரம்பித்து விட்டான்

அடிப்படையை புரிந்து கொள்ளாமல்....

இன்று ஒவ்வொரு மதத்திலும் இருக்கும் உண்மையை உணர்ந்துபின்பற்றுவோர் வெகுசிலரே.


உனது மனம் என்னும் கோப்பையைக் காலியாக வைத்திரு!

உனது மனம் என்னும் கோப்பையைக் காலியாக வைத்திரு! பேசாலைதாஸ்


‘நீங்கள் எந்த அளவு உயிர்ப்புடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்குத் தன்னை அறிய முடியும். நீங்கள் உயிர்ப்புடன் இல்லாவிடில், வாழ்க்கையை அறியவே முடியாது

* இதுவரை கேட்டது அனைத்தையும் மறந்துவிடு. உனது கோப்பையைக் காலியாக வைத்திரு!

* இருள் என்ற ஒன்று இல்லை. வெளிச்சத்தை எடுத்துச் செல், இருள் மறைந்துவிடும். இருள் இருக்கிறதா? 

* மரத்துக்கு அருகில் செல்லுங்கள். யாரும் பார்க்காதபோது அதனுடன் பேசுங்கள்.மரத்தை தழுவிக் கொள்ளுங்கள். உங்களை நல்லவர் என்று அந்த மரம் உணரட்டும்! 

* சிலவற்றைப் பார்க்கும்போது உங்களுக்கு அழகாய் தெரிகிறது. அப்படியானால் உங்களுக்குள் அழகு இருக்கிறது!

* ஒருவரது கண்ணைப் பார்க்கும்போது உங்கள் இதயத்தை உங்கள் கண்ணுக்குக் கொண்டு வாருங்கள்!

* அனைத்தையும் குழந்தையின் பார்வையில் பாருங்கள்- குழப்பம் இருக்காது!

* வாழ்க்கை தருவது யாவும் சரியானதே! வாழ்க்கை பறித்துக் கொள்வது யாவும் சரியானதே!

* அன்பு வெறுப்பு இல்லாமல் அமைந்திராது! நீ விரும்புகிற நபரையே தான் வெறுக்கவும் செய்வாய்.

* செருப்பு பொருந்தியதும் கால்களை மறந்துவிடுகிறோம்!

* என்ன செய்வது என்பது கேள்வி அல்ல! எதையும் எப்படிப் பார்ப்பது என்பதுதான் கேள்வி!

* எல்லா ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். எல்லா பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். ஏனென்றால் ஆணும் பெண்ணும் சேர்ந்து உருவாக்கியது தான் ஆணும் பெண்ணும்! இதில் ஆண் யார்? பெண் யார்?

* நண்பன் என்பவன் குறைந்த அளவு பகைமை கொண்டவன். பகைவன் என்பவன் குறைந்த அளவு நட்பு கொண்டவன்.

* பேசும்போது பயப்படாதீர்கள்! பயப்படும்போது பேசாதீர்கள்! 

* எல்லாவித ஆனந்தங்களும் தற்காலிகமானதாக இருக்கும் போது தண்டனை மட்டும் எப்படி நிரந்தரமாக இருக்க முடியும்? 

* ரசித்ததைப் பாராட்டாதவன் கலைக் கொலைகாரன்!

* உனக்காகப் பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் பொய் சொல்வான்.

* நேராக வளரும் மரம் தான் முதலில் வெட்டப்படும்.

* உன்னை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை, அதேபோல உன்னை விட தாழ்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதை நீ ஏற்றுக் கொள்ளுதலே உண்மையான எழுச்சியாகும்.

* புத்திசாலியான மனிதன் மாறிக் கொண்டும், நகர்ந்து கொண்டும், ஆடிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருப்பான். அவனுக்கு வானம் கூட எல்லையாக முடியாது.

* தியானம் உன்னை உன்னுடைய உள்ளே இருக்கும் புனிதத்தலத்திற்கு கூட்டிச்செல்லும். நீ அங்கே கடவுளை காணலாம், வேறு எங்கும் காண முடியாது.

* பக்குவம் என்பது யாரையும் சாராதிருப்பது.

* குழந்தைகள் உங்களுடையவர்களல்ல, உங்கள் மூலம் வந்துள்ளவர்கள் அவ்வளவே. 

*  சமூகம், வாழ்வின் மூன்று முக்கிய விஷயங்களை அமுக்கப் பார்க்கிறது – அவை செக்ஸ், மரணம், வாழ்வின் பயனற்ற தன்மை.

* பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொள்ளும் மக்கள், அதிகம் உளறுகிறார்கள் – எந்தப் பயனுமற்ற இரைச்சல் இது.

* குடும்பம், நண்பர்கள், மகன், மகள் போன்ற எல்லாமே வெறும் வசதிகளே, பழக்கங்களே, ஊட்டப்பட்ட நம்பிக்கைகளே.

* நட்சத்திரங்கள், பாறைகள், நதிகள் என இவையாவும் உணர்வின்றி இருக்க முடியாது. உணர்வுதான் அவற்றின் வாழ்க்கையே. மனிதன் தலைகீழாகி விட்டான். மூளை முக்கியத்துவம் பெற்றுவிட்டது. மேலும் மூளை உணர்வை அடக்கிவைக்கிறது.

* உண்மையான சுதந்திரம் உன்னிடமிருந்து சுதந்திரமடைவதுதான்.

* நீங்கள் விழித்திருக்கிறீர்களா? வெற்றி உங்களுடையதே!

* கடவுளுக்குப் பிடித்தமானது சிரிப்பு! கடவுள் மகிழ்ச்சியாக இருப்பவர்களை நேசிக்கிறார்! 

* நீங்கள் உறங்கி எழுந்த பின்னால் தான் தூங்கியதையே உணர்வீர்கள்

* நாக்கில் சொற்களின் சுவையை உணருங்கள்

* நீந்தப் பழகாதீர்கள்! மிதக்கப் பழகுங்கள்!

* துளி கடலில் இருக்கிறது! கடல் துளியில் இருக்கிறது!

* இரண்டு முயல்களை விரட்டினால் ஒன்றைக்கூடப் பிடிக்கமுடியாது!

* கொந்தளிப்பு இல்லாத கடல் திறமையான மாலுமியை உருவாக்குவது இல்லை!

* எப்போதும் வயிற்றைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவர்கள் தலையைப் பட்டினி போடுகிறார்கள்!

* திறமையான தச்சன் மரச்சாமான்கள் செய்யும் போது குறைந்த வெட்டுகளையே வெட்டுவான்

* இருவருக்கும் விருப்பம் இல்லாமல் சண்டை நடக்காது!

* சொல்லாதவற்றின் பாடலே கண்ணீர்!

* கணவனாக இரு; எப்போதும் கணவனாகவே இருக்காதே! தாயாக இரு; ஆனால் எப்போதும் தாயாகவே இருந்துவிடாதே!

* சிரித்த முகம் இல்லாதவன் சொந்தமாகக் கடை வைக்கக்கூடாது

* ஒரு மலை உச்சியில் ஏறி நின்றால்தான் இன்னொரு மலை உச்சியைப் பார்க்க முடியும்

* வாள் உறையை வெட்டாது

* நீ என்ன பூவாக வேண்டுமானாலும் இரு; ஆனால் பூக்க மறக்காதே!

 கோவில் என்பது உண்மையில் ஒன்றே ஒன்றுதான். அது நீதான். நீ உனக்குள் செல்ல வேண்டும்.

* ஆசைப்பட்டால் இழப்பீர்கள்; ஆசைப்படா​விட்டால், அது உங்களுடையதே!

* எல்லாவற்றையும் ஓய்வாக எடுத்துக்​கொள்​ளுங்கள்.

* எல்லா நம்பிக்கைகளும் விஷம்போன்றது.

* உங்கள் சக்தி அனைத்துமே பாலுணர்வு சக்தியே. வெளிப்பாடுதான் வெவ்வேறு விதமாக இருக்கிறது.

உள் உணர்வு

உள் உணர்வு  


உள் உணர்வு என்பது  உனக்கு மட்டுமே தெரியக்  கூடியது ..

🍁மற்றவர் யாரும் அதை தெரிந்து கொள்ள முடியாது ..

🍁உனக்கு தலை வலித்தால் அது உனக்கு மட்டுமே தெரியும் ...

🍁நீ அதை யாருக்கும் நிரூபித்து காட்ட முடியாது ..

🍁உள்ளத்திலே மகிழ்ச்சியாக இருப்பதும் அப்படித்தான் ...

🍁உள் உணர்வு என்ற ஒன்று இருக்கிறது என்பதை அறிவியல் நிராகரிக்கிறது ...

🍁அதன் காரணமாக மக்கள் உள் உணர்வை மறந்து விட்டனர் ...

🍁அவர்கள் மற்றவர்களின் கருத்துகளையே சார்ந்துள்ளனர் ...

🍁அழகு தெய்வீகம் மகிழ்ச்சி இவை எல்லாம் உன் உள் உணர்வினால் மட்டுமே உணரப்பட முடியும் ...

🍁நிறைய தத்துவ புத்தகங்களை படித்திருந்த விவேகானந்தர் ... 

🍁ராமகிருஷ்ணரிடம் சென்று கடவுள் இல்லை என்று நான் நிரூபிக்கிறேன் என்றாராம் ..

🍁அவரின் வாதங்களை கேட்ட ராமகிருஷ்ணர் உன் உள் உணர்வு என்ன கூறுகிறது என்று சொல் என்றாராம் ...

🍁அதைக் கேட்ட  விவேகானந்தர் விழித்துக் கொண்டு மூன்று மணி நேரம் தியானத்தில் ஆழ்ந்து விட்டார் ...

🍁அவரின் உள் உணர்வு கடவுளைக் காட்டி கொடுத்து விட்டது ...

🍁இந்த அனுபவம்தான் கடவுள் ..

🍁உன்னுடைய உள் உணர்வை உணரத்தொடங்கினால் 

கடவுளை தெரிந்து கொள்ளலாம் ..

🍁ஓஷோ ...

🍁தைரியம் ..COURAGE

🍁உங்கள் உள் உணர்வை கேளுங்கள் ..

Sunday, 10 November 2024

கடைக்கண் பார்வை 


“கன்னியரின் கடைக்கண் பார்வை பட்டால் காளையற்கு மாமலையும் ஓர் கடுகாம். இது பாரதிதாசனின் பா வரி,,இதற்கு நோர்வே பேர்கன் நகரில் வாழும் நம்ம தமிழ் இளையோரிடம் கருத்துக்கேட்டால்?,,,பெண்களோட பார்வை கடைகள் மேல பட்டுதுனா (அதாவது ஷாப்பிங் பண்ண) ஆண்களோட மலையளவு சொத்து கூட கடுகு மாதிரி சுருங்கிடுமாம்.. என்று தமாஸக சொல்லிவிடுகின்றார்கள், அதிலும் ஓரளவு ஜதார்த்தம் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் பாரதிதாசனின் கருத்தோட்டம் அப்படியல்ல, பாவையின்   கடைக்கண் அசைந்தால், இளையோரின் ஊக்கம் அதாவது இன்ஸ்பைரேன் மலைபோல் எகிறி, அந்த காதலுக்காக எதையும் சாதிக்கதுணியும் என்பதே! பார்வை ஒன்றே போதுமே! பல்லாயிரம் சொல் தேவைதானா நண்பர்களே!

ஒரு பெண்ணின் கடைக்கண்
பார்வையின் தன்மையை பற்றிய அனுபவம் எனக்கு நிறைய இருக்கின்றது. நான் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, புதிதாக வரும்  மாணவிகளை களாய்ப்பதில் நான் பலே கில்லாடி, ஒரு மாணவியை மட்டும் நான் பார்வையால் கூட சந்திக்க நான் தயங்கினேன், ஆனால் அடிக்கடி ஓரக்கண்ணால், அதுதான் கடைக்கண் பார்வையால் பார்ப்பாள். எனக்குள்ள தயக்கம் அந்த பார்வையை தவிர்க்கவைத்தது, பின்னாநாளில் தான் அதை இட்டு நான் கவலைப்பட்டேன், ஆனாலும் இன்று கூட அவள் என் சிறந்த நண்பி தான். காலம் எதோ வேறு கணக்கை போட்டது.

நேரிடையாக பார்த்துக் கொள்வதற்கும், கடைக்கண் பார்வை க்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இரண்டும் ஒரே தன்மை யுடையது அல்ல. இருவர் நேரிடையாக பார்த்துக் கொள்ளும் போது, அவர்களது பார்வையின் தன்மை, இரண்டு ஜன்னல்களு க்கு இடையே ஒளி ஊடுறுவது போலதான். அது, சாதாரணமானது.

ஆனால், கடைக்கண்ணால் பார்க்கும்போது, ஒருவருடைய சக்திஅவருடைய எண்ணத்துடன் அடுத்தவர் மேல் பாய்கிறது. அது ஒரு  திருட்டு பார்வையாக இருந்தால், அந்த பார்வையே, அடுத்த வரை உஷார்படுத்தி விடும். ஒரு பெண்ணின் கடைக்கண் பார் வையாக இருந்தால், அது ஆண்களிடம் ஒருவிதமான கிளர்ச்சியை தான் ஏற்படுத்தும். அந்த ஒரு கடைக்கண் பார்வை யில்  அனைத்தும் புரிந்து விடும்


இனி குருவின் கடைக்கண் பார்வைக்கு வருவோம். லீ சூ என்ற ஞானி, தன் குருவுடன் ஏற்பட்ட அனுபவத்தை பற்றி சொல்கிறார். மூன்று வருடங்கள், அவரது குருவிற்கு பணிவிடை செய்து கொண்டிருந்தார் லீ சூ. அந்த மூன்று ஆண்டுகாலங்களில், அவரது குரு அவரை நேருக்கு நேராக பார்ப்பதுடன் சரி, வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசமாட்டார். அவரே சொல்கிறார், ஒரு விடியற்காலை பொழு தில், எனது அன்பு குருநாதர் தனது கடைக்கண் பார்வையை என்மீது திருப்பினார். அது , ஒரு அம்பு என் இதயத்தில் பாய்ந்தது போல் இருந்தது.

பார்வைக்கு  ஒரு தனி சுவை உண்டு என்பதை அன்று உணர்ந் தேன். ஆனந்தத்தில் மிதந்தேன். என் அன்பு குருநாதர், எனது கருணைக் கடல், அந்த கணத்திலேயே,அனைத்தையும் விளக்கமாக எனக்குள் சொல்லிவிட்டார். இனி, அவர் சொல்வதற்கு  என்ன இருக்கிறது ? எல்லாம் எனக் குள்  வந்து விட்டது. ' என்கிறார்.

காதலர்கள் சம வயதினர். வயது, சற்று முன்பின் இருக்க லாம். அதனால், அவர்களுக்கு ஏற்படுகிற உணர்வு, சமமான நிலத்தில் ஓடுகிற  ஆற்று நீரை போன்றது. குருவின் கடைக்கண் பார்வை என்பது அப்படியல்ல. அது, மேலிருந்து கொட்டுகிற அருவியை போன்றது.அது, நிற்காது. எவராலும் நிறுத்தவும் முடியாது. அது பற்றி, வார்த்தைகளால் விளக்கம் சொல்லவும் இயலாது. அது, ஒரு சீடனின் பக்தனின்  தனிப்பட்ட ஆனந்தமான உணர்வு. அன்னை மரியே என்னை கடைக்கண் பாரம்மா என்று நாம் மடு அன்னையிடம் இரஞ்சி மண்ராடுவது இல்லையா?  அன்புடன் பேசாலைதாஸ்

காக்கைச்  சிறகினிலே ............

.


ஒரு குழந்தை சிரிக்கிறது.

ஒரு மயில் நடனமாடுகிறது.

ஒரு நாய குரைக்கிறது.

ஆனால் உங்கள் கண்கள் அறிவால் மூடப்பட்டிருந்தால் 

உங்களால் பார்க்க முடியாது. 

அறிவுத் திரைக்கு பின்னால் வாழ்பவன்தான் 

உலகின் மிக ஏழ்மையானவன். 

சாதாரணமான வாழ்க்கை 

மிகவும் அசாதாரணமானது. 

சிறுசிறு சம்பவங்களில் 

நீங்கள் கடவுளைக் காண்பீர்கள். 

காக்கைச்  சிறகினிலே நந்தலாலா-நின்றன் 

கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;

பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா -நின்றன் 

பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா;

கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன் 

கீத மிசைக்குதடா நந்தலாலா;

தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-நின்னைத் 

தீண்டுமின்பம்ந் தோன்றுதடா நந்தலாலா.

மகாகவி பாரதியார

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்,,,,,,?

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்,,,,,,?

 


உங்கள் உள்ளம் ஏதோ ஒன்றைக் கூறுகிறது.... நீங்கள் இருக்கும் இடம் சரியில்லை என்று... அப்படி அது கூறினால் அதை கேளுங்கள்.

ஒரு வயலினிஸ்ட் நியூயார்க் மெட்ரோவில் பாதையில் 45 நிமிடங்கள் மிகத் திறமையாக வயலின் வாசித்தார். சிலர் மட்டும் நின்றனர், ஒரு சிலர் கை தட்டினர், வயலினிஸ்ட் சுமார் $30 டொலர்கள் மாத்திரமே அங்கே சம்பாதித்து இருந்தாராம்.

ஆனால் அந்த வயலினிஸ்ட் உலகின் சிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவரான ஜோஷுவா பெல் என்பதை யாரும் அங்கு அறிந்திருக்கவில்லை. அந்த மெட்ரோவில் பாதையில் ஜோஷுவா, மிகக் கடினமான வயலின் இசைக் கோர்வைகளை வாசித்தார், அது 3.5 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மெட்ரோ நிகழ்வுக்கு இரண்டு நாட்கள் முன்பு, அதே ஜோஷுவா பெல் அமெரிக்க பொஸ்டன் நகரில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு, ஒவ்வொரு டிக்கெட் 100 டொலர்களுக்கு வாங்கப்பட்டு அரங்கே நிறைந்திருந்தது.

இது நீங்கள் எவ்வளவு தான் அதிசயத்தக்க திறமையிக் கொண்டு இருந்தாலும், இருக்க வேண்டிய இடத்தில் இல்லாவிட்டால் எல்லாமே வேஸ்ட் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

நல்ல திறமை கொண்டவர்கள் அடையாளம் காணப்படாமல் எல்லா இடத்திலும் உள்ளனர், ஆனால் அவர்கள் தகுந்த அங்கீகாரம் மற்றும் பாராட்டைப் பெறுவதில்லை. ஆனால் அவர்கள் தங்களுக்கான மதிப்பையும் தன்னம்பிக்கையையும் உருவாக்கி, தங்களுக்கு உதவாத சூழலிலிருந்து விலகும் போது, அவர்கள் வளர்ச்சியடைந்து திகழ்கிறார்கள்.

உங்கள் உள்ளம் ஏதோ ஒன்றைக் கூறுகிறது.... நீங்கள் இருக்கும் இடம் சரியில்லை என்று... அப்படி அது கூறினால் அதை கேளுங்கள்!

நீங்கள் மதிக்கப்படுகிற இடத்திற்கு செல்லுங்கள். உங்கள் மதிப்பை அறியுங்கள்.

Monday, 4 November 2024

 ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.

அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார். 

தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார். எமன் வந்தார். பார்த்தார், திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டுதான் என்பதை யூகித்துவிட்டார்.

 ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தி. தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே! நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

யோசித்தார். ஒரு யோசனை வந்தது.

 சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், ‘அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது. என்னாலேயே எது சிலை எது ஆள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே!’ இப்படி சொல்லிவிட்டு மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், வேறென்ன!. சடாரென வீசினார் கயிற்றை.

 கெடுத்தது எது? தான் என்கிற ஈகோ. ஆக பலருடைய பிரச்சனைகளுக்கு, மனவருத்தங்கள்,மற்றும் சோர்வுகளுக்கு காரணம், நான் தான் தனது நான் தான் பெரியவன் என்கின்ற எண்ணங்களை ஒழித்தோம் என்றால் நாம் மிகப்பெரிய வெற்றியாளர்கள்.

அழகு என்பது தெய்வீகத்தின் முதல் பார்வை

 அழகு என்பது தெய்வீகத்தின் முதல் பார்வை 

இன்று, பலர் தங்களுக்கு எதிராகவும், மற்றவர்களுக்கு எதிராகவும், இயற்கைக்கு எதிராகவும் போராடுகிறார்கள். எனவே, வாழ்க்கை என்று அழைக்கப்படும் இந்த அற்புதமான பரிசுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதற்குப் பதிலாக, மக்கள் போராடுகிறார்கள்? என்ன நடக்கிறது?

“மனம் எப்போதும் சண்டையிடுவதற்கான சாக்குகளைத் தேடிக்கொண்டே இருக்கும். உங்களுக்கு ஒரு மனம் இருந்தால், உங்களுக்குள் ஒரு சாத்தியமான போராளி இருப்பார், அவர் எப்போதும் யாரிடமாவது சண்டையிடுவதைத் தேடுவார். ஏன் மனம் எப்போதும் சண்டையைத் தேடிக்கொண்டிருக்கிறது? சண்டையிடுவதன் மூலம், ஈகோ குவிந்து, வலுவடைகிறது. சண்டையிடுவதன் மூலம் உங்கள் ஈகோ வளர்கிறது; சண்டை போடாவிட்டால் ஈகோ மறைந்துவிடும்.

“சண்டையில் ஈகோ இருக்கிறது; அது சண்டையின் விளைவு. நீங்கள் எவ்வளவு அதிகமாக போராடுகிறீர்களோ, அவ்வளவு ஈகோ உள்ளது. நீங்கள் மட்டும் பூமியில் இருந்தால், சண்டையிட யாரும் இல்லை என்றால், உங்களுக்கு ஈகோ இருக்குமா? உங்களுக்கு ஈகோ இருக்காது. அதை உருவாக்க மற்றொன்று தேவை; மற்றொன்று அவசியம். ஈகோ ஒரு உறவு, அது உங்களுக்குள் இல்லை. நினைவில் கொள்ளுங்கள், ஈகோ உங்களுக்குள் இல்லை, அது உங்களுக்குள் இல்லை. அது எப்பொழுதும் உங்களுக்குள்ளும் மற்றவருக்குள்ளும் அமைந்துள்ளது - இடையில் எங்காவது, சண்டை நிலவுகிறது.

"அந்த ஈகோவுக்கு தொடர்ச்சியான சண்டை தேவை, ஏனென்றால் அது சண்டையை உண்கிறது. நீங்கள் எவ்வளவு அதிகமாக சண்டையிடுகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் ஈகோ வலுவடைகிறது. இது ஒரு போராளி. அதனால்தான் சரணடைவது மிகவும் கடினம். ஆனால் நீங்கள் சரணடையாவிட்டால் நீங்கள் துன்பத்தில் இருப்பீர்கள்.ட் சரணாகதி என்பது பேரின்பத்திற்கும், அழகுக்கும், உண்மைக்கும், அன்புக்கும், வாழ்க்கைக்கும், தெய்வீகத்திற்கும் வாசல். சரணாகதி என்பது கதவு. நான் 'சரணடைதல்' என்று கூறும்போது, ​​சரணடைதல் என்பது ஒருவரை நோக்கி இருக்க வேண்டும் என்று நான் அர்த்தப்படுத்துவதில்லை. அது ஒரு சாக்கு; ஏனென்றால் உங்களிடம் சரணடைய யாராவது இருந்தால் ஒழிய நீங்கள் சரணடைய முடியாது - அதனால்தான் ஒருவர் தேவைப்படுகிறார். இல்லையெனில் தேவை இல்லை; நீங்கள் சரணடையலாம், கதவு திறந்திருக்கும்."

அழகு என்பது தெய்வீகத்தின் முதல் பார்வை

ராஜபார்வை

ராஜபார்வை 


இரண்டையும் ஏற்றுக் கொள்ளுங்கள்"....

(Tilopa  was an Indian Buddhist tantric)

உங்களுக்குள் முரண்பாட்டை ஒருபோதும்  ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களிடம் வருவது எதுவாயினும் இரண்டையும் ஏற்றுக் கொள்ளுங்கள்!! இதனால் வெற்றி ஏற்படாது!! ஆனால் இருமைகளை  எளிதாக கடந்து செல்ல முடியும்!!  இரண்டுக்கும் சாட்சியாக இருக்க முடியும்!! உங்கள் மனம் விரும்பாத ஒன்றை அழித்து விட்டால் அது வெற்றி என்று நினைக்காதீர்கள்!! கடந்து செல்லுங்கள்.... சாட்சியாக இருங்கள்!! 

ஒருநாள் அந்தி சாயும் நேரத்தில்... என் நண்பருடைய கொழிக் கடையில்,  நான் உட்கார்ந்து இருந்தேன்.  அவர் கடையை மூடும் நேரம்.   அப்பொழுது ஒருவர் கோழி வாங்க வந்தார். கடையில் அந்த நேரம் ஒரு கோழி மட்டும்தான் பாக்கி இருந்தது. இது எனக்குத் தெரியும்.  சற்று நேரத்திற்கு முன்புதான் கடைக்காரராகிய நண்பர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது,  "இன்று நல்ல வியாபாரம். அனைத்து கொழிகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்றும் இன்னும்  ஒரே ஒரு கோழி மட்டும்தான் பாக்கி இருக்கிறது"  

என்றும்  - இந்த விஷயத்தை என்னிடம் கூறியிருந்தார்!!   

எனவே மிச்சம் இருந்த அந்த கோழியையும்  விற்றுவிட நேரம் வந்துவிட்டதால் மிகவும் சந்தோஷத்துடன்,   அந்த கோழியை எடை போட்டு அதன் விலை நூறு ரூபாய் என்றார். கோழி வாங்கவந்தவர்,  "எனக்கு இது போதாது இன்னும் பெரிய கோழி இருந்தால் நல்லது. விருந்தினர்கள் நிறைய பேர் வந்து விட்டார்கள்" - என்று கூறினார். 

கடையில் வேறு கோழி இல்லை என்பது தெரிந்திருந்தாலும் கடைக்கார நண்பர், கடைக்குள் அந்த கொழியை எடுத்துச் சென்றார்!! அதையே திரும்பவும் எடுத்துக் கொண்டு வந்து எடை போட்டு இது போதுமா? பாருங்கள்  இதன்  விலை நூற்றிஐம்பது  ரூபாய் என்றார்!!  

ஆனால் அந்த வாடிக்கையாளர்,  "நான் இரண்டையும் எடுத்துக் கொள்கிறேன் அதையும் எடுத்து வாருங்கள்" -  என்று கூறிவிட்டார்.!!   இப்போது கடைக்கார நண்பர் தர்ம சங்கடத்தில் நெளிந்தார்.....!! 

தந்த்ரா கூறுகிறது..... 

"மொத்த மெய்யிருப்புமே (existence) சங்கடத்தில்தான் இருக்கிறது!!  

எனவே  இரண்டையும் எடுத்துக்   கொள்ளுங்கள்.... இருமைகளை கடந்து வாருங்கள்.... என்று!! 

சொல்லப்போனால் இங்கு  இரண்டு என்பதெல்லாம்  இல்லவேயில்லை!! இருப்பது ஒன்றுதான்!!  வெறுத்தல் (hate) என்பது அன்பாயிருத்தலின் மற்றொரு அம்சமே!! கோபம் என்பது கருணையின் மற்றொரு எதிர் முனையே!! பகைமை என்பது பாசத்தின் மற்றொரு பார்வைக் கோணமே!! இவைகள் இரு வேறு அம்சங்கள் அல்ல என்பதை உணர்ந்து இரண்டையும்  ஏற்றுக்கொண்டால்....  இரண்டையும் கடந்து சென்று விடுவீர்கள்!!  வாழ்வில் எப்பொழுதும் இருமைகளுக்கிடையில்  வித்தியாசம் காணாமல் வெறுமனே சாட்சியாக மட்டும் இருந்து பாருங்கள்!!

திலோப்பாவின்(Tilopa) தந்த்ரா  கூறுகிறது.....   "இருமையை கடந்து விடுவதே ராஜபார்வை"  ஆகும்!! 

உன்னையே நீ கவனி.

  உன்னையே நீ கவனி.

ஒரு ஜென் குருவை சந்திக்க 

ஒரு சீடன் வந்தான்.

குரு,

அந்த இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில்

இருக்கிறார் என்பதை கேள்விப்பட்டு அங்கு சென்றான்.

குருவை வணங்கி நின்றான்.

' நான் உங்களிடம் 

உண்மை நிலையை அறிந்து கொள்ள வந்திருக்கிறேன்.

' நான் யார் ' என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் ' என்று பணிவாக

சொன்னான்.

சிரித்த முகத்துடன் அவன் அருகில் வந்த ஜென் குரு,

அவனை அப்படியே தூக்கி,

மேல் தளத்திலிருந்து,

கீழே வீசினார்.

தரையில் போய் விழுந்த சீடனின் உடலில் இரண்டு எலும்புகள் நொறுங்கின.

உடலில் 

மற்ற இடங்களிலும் 

நல்ல பலமான காயம்.

தாங்க முடியாத வலியில்

இருந்தான்.

கீழே இறங்கி வந்த குரு,

அந்த சீடனின் மேல் அமர்ந்து

அவனை உலுக்கினார்.

அவன் தாங்க முடியாத 

உடல் வலியில் வேதனையடைந்தான்.

பிறகு குரு நாதர்,

சீடனை அங்கேயே 

விட்டு விட்டு,

மேல் தளத்தில் உள்ள 

தனது இடத்திற்கு 

சென்று விட்டார்.

அன்று மாலையில்,

அந்த சீடன்,

அவரிடம் வந்து அவரது 

தாள் பணிந்தான்.

' அவன் மொட்டை தலையை

தடவி  விட்ட குரு,

' நீ கேட்டது கிடைத்து விட்டதா ? ' என்று அவனிடம் கேட்டார்.

' ஆம் குருவே ' என்றான் அவன்.

ஜென் தத்துவங்கள் வித்தியாசமானவை.

சீடனாக வரும் அனைவருக்கும் இந்த தண்டனை கிடையாது.

பிற குருவிடம் அனைத்தும் அறிந்து கொண்டு,

விளிம்பில் நிற்பவர்களுக்குதான்

அறை, உதை, வெளியே தூக்கி எறிந்து விடுவது எல்லாம்.

ஒரு சீடன்,

ஜென் குருவின் காலில் விழுகிற 

அந்த நேரத்திலேயே,

அந்த கண பொழுதிலேயே,

குரு,

 சீடனின் நிலை பற்றி உணர்ந்து விடுவார்

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு

 ஒன்றுமே புரியாது.

அந்த சீடன் மீது

 பரிதாபப்படுவார்கள்.

ஒரு குரு,

தனது சீடனுக்கு,

தாங்கமுடியாத வலியை

அவனது உடலில் ஏற்படுத்துகிறார் என்றால்,

அந்த ' தாங்க முடியாத ' என்ற வார்த்தையின் 

அர்த்தமே வேறு.

' உன்னையே நீ கவனி.

நீயே உண்மையாக இருக்கிறாய்.

பிறகு,

அது பற்றி கேட்க வந்துவிட்டாயே ' என்று அர்த்தம்.

' நீயே ஒரு புத்தன் '

புத்தரை பற்றி என்னிடம் வந்து கேட்கிறாயே  ! "

தொடர்பு கொள்ள வழி இல்லாத போது,

இது போன்ற யுக்திகளை

பயன்படுத்தி,

சீடனை  உண்மையை கண்டறியும் விழிப்பு நிலைக்கு கொண்டு 

வந்து விடுவார்கள்

ஜென் குருமார்கள்.

மெழுகுவர்த்தி

மெழுகுவர்த்தி 


ஒரு ஊரில் ஞானி ஒருவர் இருந்தார். தனக்கு தான் எல்லாமே தெரியும் என்ற தலைக்கணம் எப்போதும் அவரிடம் இருந்தது. இதனாலேயே யாரையும் மதிக்கமாட்டார்.

ஒரு நாள் இரவு நேரம் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் எதிரே ஒரு குழந்தை எரிகிற மெழுகுவர்த்தி ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தது.

 அந்த குழந்தையை பார்த்ததும் தனது திறமையை அந்த குழந்தையிடம் காட்டி திணறடிக்க விரும்பினார். அந்த குழந்தையிடம் சென்று வேடிக்கையாக கேட்டார்.

"ஏன் பாப்பா இந்த மெழுகுவர்த்தியை நீயாவை கொளுத்தினாயா"

"ஆமாம்" என்றது அந்த குழந்தை.

"சரி இந்த மெழுகுவர்த்தி முதல் எரியாமல் தானே இருந்தது. ஆனால், இப்போது எரிகிறது."

"ஆமாம்..."

"இந்த மெழுகுவர்த்திக்கு வெளிச்சம் எங்கே இருந்து வந்தது என்று காட்ட முடியுமா?" என்று கேட்டார்.

அதற்கு அந்த குழந்தை சிரித்தது.

இந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து விட்டது.

அதன் பிறகு ஞானியை பார்த்து கேட்டது "இப்போ இந்த மெழுகுவத்தின் வெளிச்சம் போனதை பார்த்தீர்கள். அது எங்கே போனது என்று சொல்ல முடியுமா?" என்று இந்த குழந்தை இப்படி கேட்டதும் ஞானியின் ஆணவம் அழிந்தது.

தான் படித்ததெல்லாம் அந்த வினாடியில் சுக்கு நூறாகிவிட்டதை உணர்ந்தார்.

தனது முட்டாள்தனத்தை தானே உணர்ந்து கொண்டார்.

இதனால் நாம் இன்னாரிடமிருந்து இதைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை யாரிடமிருந்தும் எதையும் கற்றுக் கொள்ளலாம்...!!!

மெல்லத்திறந்தது ஞானக்கதவு,,,,,,

 மெல்லத்திறந்தது ஞானக்கதவு,,,,,,

ஓஷோ அவரது ஞானம் பற்றி💥வானத்தில் கால் தடங்கள்

அந்த இரவு இன்னொரு உண்மை அதன் கதவைத் திறந்தது. 

ஓஷோ ஞானம் பெறுவதற்கு முன்பு1953 ஆம் ஆண்டு மார்ச் இருபத்தியோராம் நாள் எனக்கு நினைவுக்கு வருகிறது. பல உயிர்களுக்கு நான் உழைத்துக் கொண்டிருந்தேன் - என்னை நானே உழைத்துக்கொண்டு, போராடிக்கொண்டு, என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொண்டிருந்தேன் - எதுவும் நடக்கவில்லை.

ஏன் எதுவும் நடக்கவில்லை என்று இப்போது எனக்குப் புரிகிறது. 

முயற்சியே தடையாக இருந்தது, ஏணியே தடுத்தது, தேடும் ஆசையே தடையாக இருந்தது. தேடாமல் அடையலாம் என்பதல்ல. தேடுதல் தேவை, ஆனால் தேடுவது கைவிடப்பட வேண்டிய ஒரு புள்ளி வரும். ஆற்றைக் கடக்கப் படகு தேவை, ஆனால் நீங்கள் படகில் இருந்து வெளியேறி அதையெல்லாம் மறந்து விட்டு அதை விட்டுவிட வேண்டிய தருணம் வரும். முயற்சி தேவை, முயற்சி இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. மேலும் முயற்சியால் மட்டுமே எதுவும் சாத்தியமில்லை.

1953 ஆம் ஆண்டு மார்ச் இருபத்தியோராம் தேதிக்கு முன்பு, ஏழு நாட்களுக்கு முன்பு, நானே வேலை செய்வதை நிறுத்தினேன். முழு முயற்சியின் பயனற்ற தன்மையை நீங்கள் காணும்போது ஒரு கணம் வருகிறது. நீங்கள் செய்யக்கூடிய அனைத்தையும் செய்துவிட்டீர்கள், எதுவும் நடக்கவில்லை. மனிதனால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளீர்கள். பிறகு வேறு என்ன செய்ய முடியும்? இயலாமையில் ஒருவன் எல்லா தேடலையும் கைவிடுகிறான்.

தேடல் நின்ற நாள், நான் எதையாவது தேடாத நாள், நான் எதிர்பார்க்காத நாள், அது நடக்கத் தொடங்கியது. ஒரு புதிய ஆற்றல் எழுந்தது - எங்கும் இல்லை. இது எந்த மூலத்திலிருந்தும் வரவில்லை. 

அது  எங்கிருந்தும் வந்து கொண்டிருந்தது. அது மரங்களிலும், பாறைகளிலும், வானத்திலும், சூரியனிலும், காற்றிலும் - எல்லா இடங்களிலும் இருந்தது. 

நான் மிகவும் கடினமாகத் தேடிக்கொண்டிருந்தேன், அது வெகு தொலைவில் உள்ளது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மேலும் அது மிக அருகாமையில் இருந்தது.

நான் தேடிக்கொண்டிருந்ததால், நான் அருகில் இருப்பதைப் பார்க்க இயலாது. தேடுவது எப்போதும் தொலைதூரத்திற்கானது,  - அது தொலைவில் இல்லை. நான் தொலைநோக்கு பார்வையுடையவனாக இருந்தேன், அருகில் பார்வையை இழந்திருந்தேன். கண்கள் தொலைதூரத்தில், அடிவானத்தில் குவிந்துவிட்டன, மேலும் அவை உங்களைச் சுற்றியுள்ள, அருகில் இருப்பதைப் பார்க்கும் தரத்தை இழந்துவிட்டன.

நாள் முயற்சி நின்றது, நானும் நின்றேன். ஏனென்றால் முயற்சி இல்லாமல் இருக்க முடியாது, ஆசை இல்லாமல் இருக்க முடியாது, 

ஈகோ, சுயத்தின் நிகழ்வு ஒரு விஷயம் அல்ல, அது ஒரு செயல்முறை. அது உங்களுக்குள் அமர்ந்திருக்கும் பொருள் அல்ல; ஒவ்வொரு கணமும் நீங்கள் அதை உருவாக்க வேண்டும். மிதிவண்டியை மிதிப்பது போன்றது. நீங்கள் மிதித்தால் அது நீண்டு கொண்டே செல்கிறது, நீங்கள் மிதிக்கவில்லை என்றால் அது நின்றுவிடும். கடந்த வேகத்தின் காரணமாக இது சிறிது செல்லலாம், ஆனால் நீங்கள் பெடல் செய்வதை நிறுத்தும் தருணத்தில், உண்மையில் சைக்கிள் நிற்கத் தொடங்குகிறது. அதற்கு அதிக ஆற்றல் இல்லை, எங்கும் செல்ல சக்தி இல்லை. விழுந்து இடிந்து போகிறது.

நாம் ஆசையை மிதிப்பதாலும், எதையாவது பெற பாடுபடுவதாலும், நம்மை விட முன்னேறிச் செல்வதாலும் ஈகோ இருக்கிறது. அதுதான் ஈகோவின் நிகழ்வு - உங்களை விட முன்னால் குதிப்பது, எதிர்காலத்தில் குதிப்பது, நாளை குதிப்பது. இல்லாதவற்றில் குதிப்பது ஈகோவை உருவாக்குகிறது. 

இல்லாத நிலையில் இருந்து வெளிவருவதால் அது ஒரு மாயக்காற்று போன்றது. இது ஆசையை மட்டுமே கொண்டுள்ளது, வேறு எதுவும் இல்லை. இது தாகத்தை மட்டுமே கொண்டுள்ளது, வேறு எதுவும் இல்லை.

ஈகோ நிகழ்காலத்தில் இல்லை, எதிர்காலத்தில் உள்ளது. நீங்கள் எதிர்காலத்தில் இருந்தால், ஈகோ மிகவும் கணிசமானதாகத் தெரிகிறது. நீங்கள் நிகழ்காலத்தில் இருந்தால், ஈகோ ஒரு மாயை, அது மறைந்துவிடும்.

நான் தேடுவதை நிறுத்திய நாள்... தேடுவதை நிறுத்தினேன் என்று சொல்வது சரியல்ல, தேடும் நாள் நின்று விட்டது என்று சொல்வது நல்லது. மீண்டும் சொல்கிறேன்: தேடுதல் நிறுத்தப்பட்ட நாளே அதைச் சொல்ல சிறந்த வழி. ஏனென்றால் நான் அதை நிறுத்தினால், நான் மீண்டும் அங்கே இருக்கிறேன். இப்போது நிறுத்துவது எனது முயற்சியாகிறது, இப்போது நிறுத்துவது எனது விருப்பமாகிறது, மேலும் ஆசை மிகவும் நுட்பமான முறையில் உள்ளது.