ராஜபார்வை
இரண்டையும் ஏற்றுக் கொள்ளுங்கள்"....
(Tilopa was an Indian Buddhist tantric)
உங்களுக்குள் முரண்பாட்டை ஒருபோதும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களிடம் வருவது எதுவாயினும் இரண்டையும் ஏற்றுக் கொள்ளுங்கள்!! இதனால் வெற்றி ஏற்படாது!! ஆனால் இருமைகளை எளிதாக கடந்து செல்ல முடியும்!! இரண்டுக்கும் சாட்சியாக இருக்க முடியும்!! உங்கள் மனம் விரும்பாத ஒன்றை அழித்து விட்டால் அது வெற்றி என்று நினைக்காதீர்கள்!! கடந்து செல்லுங்கள்.... சாட்சியாக இருங்கள்!!
ஒருநாள் அந்தி சாயும் நேரத்தில்... என் நண்பருடைய கொழிக் கடையில், நான் உட்கார்ந்து இருந்தேன். அவர் கடையை மூடும் நேரம். அப்பொழுது ஒருவர் கோழி வாங்க வந்தார். கடையில் அந்த நேரம் ஒரு கோழி மட்டும்தான் பாக்கி இருந்தது. இது எனக்குத் தெரியும். சற்று நேரத்திற்கு முன்புதான் கடைக்காரராகிய நண்பர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது, "இன்று நல்ல வியாபாரம். அனைத்து கொழிகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்றும் இன்னும் ஒரே ஒரு கோழி மட்டும்தான் பாக்கி இருக்கிறது"
என்றும் - இந்த விஷயத்தை என்னிடம் கூறியிருந்தார்!!
எனவே மிச்சம் இருந்த அந்த கோழியையும் விற்றுவிட நேரம் வந்துவிட்டதால் மிகவும் சந்தோஷத்துடன், அந்த கோழியை எடை போட்டு அதன் விலை நூறு ரூபாய் என்றார். கோழி வாங்கவந்தவர், "எனக்கு இது போதாது இன்னும் பெரிய கோழி இருந்தால் நல்லது. விருந்தினர்கள் நிறைய பேர் வந்து விட்டார்கள்" - என்று கூறினார்.
கடையில் வேறு கோழி இல்லை என்பது தெரிந்திருந்தாலும் கடைக்கார நண்பர், கடைக்குள் அந்த கொழியை எடுத்துச் சென்றார்!! அதையே திரும்பவும் எடுத்துக் கொண்டு வந்து எடை போட்டு இது போதுமா? பாருங்கள் இதன் விலை நூற்றிஐம்பது ரூபாய் என்றார்!!
ஆனால் அந்த வாடிக்கையாளர், "நான் இரண்டையும் எடுத்துக் கொள்கிறேன் அதையும் எடுத்து வாருங்கள்" - என்று கூறிவிட்டார்.!! இப்போது கடைக்கார நண்பர் தர்ம சங்கடத்தில் நெளிந்தார்.....!!
தந்த்ரா கூறுகிறது.....
"மொத்த மெய்யிருப்புமே (existence) சங்கடத்தில்தான் இருக்கிறது!!
எனவே இரண்டையும் எடுத்துக் கொள்ளுங்கள்.... இருமைகளை கடந்து வாருங்கள்.... என்று!!
சொல்லப்போனால் இங்கு இரண்டு என்பதெல்லாம் இல்லவேயில்லை!! இருப்பது ஒன்றுதான்!! வெறுத்தல் (hate) என்பது அன்பாயிருத்தலின் மற்றொரு அம்சமே!! கோபம் என்பது கருணையின் மற்றொரு எதிர் முனையே!! பகைமை என்பது பாசத்தின் மற்றொரு பார்வைக் கோணமே!! இவைகள் இரு வேறு அம்சங்கள் அல்ல என்பதை உணர்ந்து இரண்டையும் ஏற்றுக்கொண்டால்.... இரண்டையும் கடந்து சென்று விடுவீர்கள்!! வாழ்வில் எப்பொழுதும் இருமைகளுக்கிடையில் வித்தியாசம் காணாமல் வெறுமனே சாட்சியாக மட்டும் இருந்து பாருங்கள்!!
திலோப்பாவின்(Tilopa) தந்த்ரா கூறுகிறது..... "இருமையை கடந்து விடுவதே ராஜபார்வை" ஆகும்!!

No comments:
Post a Comment