உன்னையே நீ கவனி.
ஒரு ஜென் குருவை சந்திக்க
ஒரு சீடன் வந்தான்.
குரு,
அந்த இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில்
இருக்கிறார் என்பதை கேள்விப்பட்டு அங்கு சென்றான்.
குருவை வணங்கி நின்றான்.
' நான் உங்களிடம்
உண்மை நிலையை அறிந்து கொள்ள வந்திருக்கிறேன்.
' நான் யார் ' என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் ' என்று பணிவாக
சொன்னான்.
சிரித்த முகத்துடன் அவன் அருகில் வந்த ஜென் குரு,
அவனை அப்படியே தூக்கி,
மேல் தளத்திலிருந்து,
கீழே வீசினார்.
தரையில் போய் விழுந்த சீடனின் உடலில் இரண்டு எலும்புகள் நொறுங்கின.
உடலில்
மற்ற இடங்களிலும்
நல்ல பலமான காயம்.
தாங்க முடியாத வலியில்
இருந்தான்.
கீழே இறங்கி வந்த குரு,
அந்த சீடனின் மேல் அமர்ந்து
அவனை உலுக்கினார்.
அவன் தாங்க முடியாத
உடல் வலியில் வேதனையடைந்தான்.
பிறகு குரு நாதர்,
சீடனை அங்கேயே
விட்டு விட்டு,
மேல் தளத்தில் உள்ள
தனது இடத்திற்கு
சென்று விட்டார்.
அன்று மாலையில்,
அந்த சீடன்,
அவரிடம் வந்து அவரது
தாள் பணிந்தான்.
' அவன் மொட்டை தலையை
தடவி விட்ட குரு,
' நீ கேட்டது கிடைத்து விட்டதா ? ' என்று அவனிடம் கேட்டார்.
' ஆம் குருவே ' என்றான் அவன்.
ஜென் தத்துவங்கள் வித்தியாசமானவை.
சீடனாக வரும் அனைவருக்கும் இந்த தண்டனை கிடையாது.
பிற குருவிடம் அனைத்தும் அறிந்து கொண்டு,
விளிம்பில் நிற்பவர்களுக்குதான்
அறை, உதை, வெளியே தூக்கி எறிந்து விடுவது எல்லாம்.
ஒரு சீடன்,
ஜென் குருவின் காலில் விழுகிற
அந்த நேரத்திலேயே,
அந்த கண பொழுதிலேயே,
குரு,
சீடனின் நிலை பற்றி உணர்ந்து விடுவார்
வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு
ஒன்றுமே புரியாது.
அந்த சீடன் மீது
பரிதாபப்படுவார்கள்.
ஒரு குரு,
தனது சீடனுக்கு,
தாங்கமுடியாத வலியை
அவனது உடலில் ஏற்படுத்துகிறார் என்றால்,
அந்த ' தாங்க முடியாத ' என்ற வார்த்தையின்
அர்த்தமே வேறு.
' உன்னையே நீ கவனி.
நீயே உண்மையாக இருக்கிறாய்.
பிறகு,
அது பற்றி கேட்க வந்துவிட்டாயே ' என்று அர்த்தம்.
' நீயே ஒரு புத்தன் '
புத்தரை பற்றி என்னிடம் வந்து கேட்கிறாயே ! "
தொடர்பு கொள்ள வழி இல்லாத போது,
இது போன்ற யுக்திகளை
பயன்படுத்தி,
சீடனை உண்மையை கண்டறியும் விழிப்பு நிலைக்கு கொண்டு
வந்து விடுவார்கள்
ஜென் குருமார்கள்.
No comments:
Post a Comment