கடைக்கண் பார்வை
ஆனால், கடைக்கண்ணால் பார்க்கும்போது, ஒருவருடைய சக்திஅவருடைய எண்ணத்துடன் அடுத்தவர் மேல் பாய்கிறது. அது ஒரு திருட்டு பார்வையாக இருந்தால், அந்த பார்வையே, அடுத்த வரை உஷார்படுத்தி விடும். ஒரு பெண்ணின் கடைக்கண் பார் வையாக இருந்தால், அது ஆண்களிடம் ஒருவிதமான கிளர்ச்சியை தான் ஏற்படுத்தும். அந்த ஒரு கடைக்கண் பார்வை யில் அனைத்தும் புரிந்து விடும்
இனி குருவின் கடைக்கண் பார்வைக்கு வருவோம். லீ சூ என்ற ஞானி, தன் குருவுடன் ஏற்பட்ட அனுபவத்தை பற்றி சொல்கிறார். மூன்று வருடங்கள், அவரது குருவிற்கு பணிவிடை செய்து கொண்டிருந்தார் லீ சூ. அந்த மூன்று ஆண்டுகாலங்களில், அவரது குரு அவரை நேருக்கு நேராக பார்ப்பதுடன் சரி, வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசமாட்டார். அவரே சொல்கிறார், ஒரு விடியற்காலை பொழு தில், எனது அன்பு குருநாதர் தனது கடைக்கண் பார்வையை என்மீது திருப்பினார். அது , ஒரு அம்பு என் இதயத்தில் பாய்ந்தது போல் இருந்தது.
பார்வைக்கு ஒரு தனி சுவை உண்டு என்பதை அன்று உணர்ந் தேன். ஆனந்தத்தில் மிதந்தேன். என் அன்பு குருநாதர், எனது கருணைக் கடல், அந்த கணத்திலேயே,அனைத்தையும் விளக்கமாக எனக்குள் சொல்லிவிட்டார். இனி, அவர் சொல்வதற்கு என்ன இருக்கிறது ? எல்லாம் எனக் குள் வந்து விட்டது. ' என்கிறார்.
காதலர்கள் சம வயதினர். வயது, சற்று முன்பின் இருக்க லாம். அதனால், அவர்களுக்கு ஏற்படுகிற உணர்வு, சமமான நிலத்தில் ஓடுகிற ஆற்று நீரை போன்றது. குருவின் கடைக்கண் பார்வை என்பது அப்படியல்ல. அது, மேலிருந்து கொட்டுகிற அருவியை போன்றது.அது, நிற்காது. எவராலும் நிறுத்தவும் முடியாது. அது பற்றி, வார்த்தைகளால் விளக்கம் சொல்லவும் இயலாது. அது, ஒரு சீடனின் பக்தனின் தனிப்பட்ட ஆனந்தமான உணர்வு. அன்னை மரியே என்னை கடைக்கண் பாரம்மா என்று நாம் மடு அன்னையிடம் இரஞ்சி மண்ராடுவது இல்லையா? அன்புடன் பேசாலைதாஸ்

No comments:
Post a Comment