Sunday, 29 September 2024

வாழ்ந்து விடு .

 வாழ்ந்து விடு .

சாவதில் எந்த தைரியமும் இல்லை.
வாழ்வை முழுக்க வாழ்வதுதான் தைரியம்.
அதை தவிர்த்து தைரியம் வேறு எதுவும் இல்லை .
சாவது எளிது.
உன்னை தியாகம் செய்து விடாதே நீ உனக்காகத்தான் இங்கே இருப்பது.
வேறு யாருக்காகவும் இல்லை .
நிறைய பேரு கசாப்பு கடைக்காரர்கள் போல தயாராக நிற்கிறார்கள் .
அவர்கள் உன்னை பிடித்துக் கொள்ளப் போகிறார்கள்.
அவர்கள் தான் உனக்குள் இதையும் அதையும் திணித்து வைத்திருக்கிறார்கள்
உன்னை வாழ விடாமல் செய்கிறார்கள்.
மற்றவர் உன்னை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காக உன் வாழ்க்கையை தியாகம் செய்து விடாதே .
நரகமாக்கி விடாதே.
வாழ்க்கை உன்னை அனுபவிக்க வேண்டும் என்கிறது.
வாழ்க்கை உன்னை கொண்டாட வேண்டும் என்கிறது .
வாழ்க்கை கடந்த காலத்தைப் பற்றி எந்த வருத்தம் இல்லாதிருக்கும் அளவுக்கு.
கடந்ததை மறந்து போய்விடும் அளவுக்கு.
வாழ்வில் பங்கெடுத்துக் கொள் என்கிறது.

No comments:

Post a Comment