வாழ்வே புனிதமாகி போகிறது
கடந்த காலத்தில் பாரத்தை இறக்கி வைத்து விடு .
கடந்த காலம் இனியும் இருக்கும் காலம் அல்ல.
ஏற்கனவே பறந்து போய்விட்டது.
இருப்பதல்ல .
இல்லாத பேய்களை பாரமாக சுமந்து கொண்டிருக்கிறாய் .
எதிர்காலத்தையும் பாரமாக்கி வைத்து சுமந்து கொண்டிருக்கிறது .
அது இன்னும் இருக்க வரவில்லை.
அது வரும் போது பார்த்துக் கொள்ளலாம்.
அதைப்பற்றி இப்போதே எதற்கு திட்டங்கள் போட வேண்டும் ?
நீ எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்காலத்தை பற்றி திட்டமிடுகிறாயோ!
அப்படி அது இருக்கப் போவதில்லை!
உன்னுடைய திட்டங்கள் எல்லாம் மேலும் மேலும் பிரச்சினைகளைத் தான் கொண்டு வரப் போகின்றன .
ஏனென்றால் வருவதை எதிர்நோக்கி திட்டமிடும்போது.
இயற்கையின் மேல் உன் திட்டங்களை திணித்ததாகி போகும் .
இயற்கை உன்னை தொடர்வது அல்ல .
நீ தான் இயற்கையை தொடர வேண்டும்.
நீ தான் நன்றி உடையவனாக இருக்க வேண்டும்.
எனவே வித்தியாசமான ஒரு வாழ்வை.
ஒத்திப் போடுதல் இல்லாத வாழ்வை. வாழும் போது.
இயற்கை அருமையானதாகி போகிறது வாழ்வே புனிதமாகி போகிறது
No comments:
Post a Comment