Tuesday, 22 October 2024

இரும்புத் துண்டு.

இரும்புத் துண்டு.

உங்களது நண்பர் உங்களிடம்

 ' இது காந்தம் ' என்று சொல்லி ஒரு பொருளை கொடுக்கிறார்.

அதை வாங்கி பார்க்கிறீர்கள்.

அது ஒரு இரும்புத் துண்டு.

அதை காந்தம் என்கிறார் உங்களது நண்பர்.

எப்படி நம்புவது ?

இரும்பு துண்டு மட்டும்தானே கண்களுக்கு தெரிகிறது.

மின்சாரம் போலவே,

காந்த புலம் நமது கண்ணுக்கு தெரிவதில்லை.

சின்ன இரும்பு ஆணி,

இரும்பு துகள் இவற்றை அதன் அருகில் வைத்து,

அதன் காந்த ஈர்ப்பு விசையின் மூலமாகத்தான்,

அந்த இரும்பு துண்டு

 ஒரு காந்தம் என்பதை தெரிந்து கொள்கிறோம்.

பூமி -  நாம் நின்று கொண்டிருக்கும் 

தரை ( Land ) நமது கண்களுக்குத் தெரிகிறது.

புவி ஈர்ப்பு விசை

(gravity force ) நமது கண்களுக்கு தெரிவதில்லை.

ஒரு நொடி நேரம் மட்டும்

புவி ஈர்ப்பு விசை இல்லை 

என்றால்,

உலக மக்கள், விலங்குகள், பூமியில் உள்ள பொருட்கள்

அனைத்துமே 

விண் வெளியில் 

பாய்ந்து விடும்.

அது போலதான்,

 மனித உடம்பில் உருவாகும்

விந்துவும் - நாதமும்.

விந்துக்களின் கூட்டத்தை

கெட்டியான திரவ வடிவில் 

கண்களால் காண முடியும்.

ஒரு விந்தணுவை மட்டும்

நுண்நோக்கி ( microscope ) வழியாக பார்த்து விட முடியும்.

ஆனால்,

அதை சுற்றி சூழ்ந்திருக்கிற

' ஜீவ காந்த ' புலத்தை நமது கண்களால் காணமுடியாது.

காந்த மண்டலத்தால் 

சூழ பட்டதுதான்,

ஆண்களின் 

விந்து அணுவும்,

பெண்களின் நாதமும்.

ஒருவரால்,

சிறுநீரை வெளியேற்றும்

சந்தர்ப்பம் கிடைக்கும் வரையில்,

அதை வெளியேற்றாமல்

தனது கட்டுப்பாட்டுக்குள்

கொஞ்ச நேரமாவது

வைத்துக்கொள்ள முடியும்.

எப்படியென்றால்,

சிறுநீர் அணுக்களில் 

எந்த விதமான காந்த புலமும் இல்லை.

அதனால்,

அதை வெளியேற்றுவதற்கு

சமயத்திற்கேற்றது போல்

தாமதப்படுத்த முடிகிறது.

ஆனால்,

உடலுறவின்போது,

ஆண் எதிர்பாராத நேரத்தில்,

அவனது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல்,

விந்தணுக்கள் வெளிப்பட்டு விடுகிறது.

காரணம்,

எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்கும்

என்ற காந்த தத்துவத்தின் படி 

விந்து அணுக்கள் செயல்பட்டு விடுகிறது.

எதிர் துருவத்தை நோக்கி பாய்கிறது.

நாதத்தில் கலக்கிறது.

பின்னாளில்,

கரு முட்டை உருவாகிறது.

குழந்தை உண்டாகும் போது,

 குழந்தையின் உடலமைப்பு -

- அனாட்டமி  -அனைத்து குழந்தைகளுக்கும் 

ஒரே அமைப்புடன் உருவாகுவதற்கு இந்த காந்த புலமே முக்கியக் காரணமாக உள்ளது.

இதில்,

விந்தணு 

குழந்தையின் உடலாகவும்,

காந்த புலம் 

அதன் ஆத்மாவும் உருமாறுகிறது.

ஆத்மா என்பது ஒரு 

காந்த பிரதேசம்.

அதனால்தான்,

குழந்தையை

 பார்க்கிறோம்.

அதன்

ஆத்மாவை பார்க்க முடிவதில்லை.

ஆத்மாவின் சக்தியை மட்டுமே உணர முடியும்.

குழந்தை வளர்ந்து 

வாலிப பருவத்தை அடைகிறது.

காந்த புலனும் - அதாவது

ஆத்ம சக்தியும் 

வலிமை அடைகிறது.

அதன் சக்தி எல்லையற்றது.

மகாவீரர் அதை

 ' அனந்த வீர்யம் ' என்று அழைத்தார்.

அந்த காந்த புலனை இரண்டு வழிகளில்

பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதலாவது,

தியானத்தின் மூலமாக

ஆத்ம சக்தியை,

இடுப்பு பகுதியிலிருந்து -

மூலாதாரத்திலிருந்து -

மேலே ஏற்றி,

உச்சந் தலையிலிருக்கும்,

துரியம், ஸகஸ்ராதாரம்

பகுதிக்கு எடுத்து செல்ல இயலும்.

அது பேரின்ப நிலையின் ஆரம்பம்.

விந்து சக்தியில் இருந்து

காந்த சக்தியை மட்டும்

அழைத்து செல்கிற செயல்.

மனதில்,

எந்த நிலையிலும் சாந்தத்தை ஏற்படுத்தி தரும் அதுவே   'புனிதம் '

இந்த இன்பம் நிரந்தரம்.

காந்த புலத்தை 

மேல் நோக்கி செலுத்த நினைப்பவர்களுக்கு

மன உறுதி அதிகமாக வேண்டும்.

ஏன் என்றால்,

அந்த பாதை முழுவதும்

முரண்பாடுகள், 

குழப்பங்கள் அதிகம்.

ஆனால்,

இறுதியில் கிடைக்கும்

பேரின்ப நிலையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

இரண்டாவது,

காந்த புலனின் தாக்கத்தால்

உடலுறவின் மூலமாக,

கீழ் நோக்கி செலுத்தி

சிற்றின்ப நிலையை அடைந்துவிடலாம்.

இது சுலபமானது.

அடிக்கடி மனம் விரும்புவது.

ஆனால்,

இந்த இன்பம் தற்காலிகமானது.

சிறிது நேரம் மட்டுமே.

மனது,

சிற்றின்பத்தையே எப்போதும் விரும்புவதால்,

அதை மீறி பேரின்பத்திற்கான முயற்சியை மேற்கொள்வது

கடினம்தான்.

மனம்,

தேவையில்லாத சமயங்களிலும்,

காம இச்சையை தூண்டி விட்டுக் கொண்டே இருக்கும்.

எனவேதான்,

சிற்றின்பத்தில் முழுமைப் பெற்ற பின்னர்,

மனதின் தொல்லை இல்லாமல்,

பேரின்பத்திற்கான முயற்சிக்கு வருவது நல்லது.

' காமத்தில் இருந்து கடவுளுக்கு வருவதே சாத்தியமானது. 

உங்களது நண்பர் உங்களிடம்

 ' இது காந்தம் ' என்று சொல்லி ஒரு பொருளை கொடுக்கிறார்.

அதை வாங்கி பார்க்கிறீர்கள்.

அது ஒரு இரும்புத் துண்டு.

அதை காந்தம் என்கிறார் உங்களது நண்பர்.

எப்படி நம்புவது ?

இரும்பு துண்டு மட்டும்தானே கண்களுக்கு தெரிகிறது.

மின்சாரம் போலவே,

காந்த புலம் நமது கண்ணுக்கு தெரிவதில்லை.

சின்ன இரும்பு ஆணி,

இரும்பு துகள் இவற்றை அதன் அருகில் வைத்து,

அதன் காந்த ஈர்ப்பு விசையின் மூலமாகத்தான்,

அந்த இரும்பு துண்டு

 ஒரு காந்தம் என்பதை தெரிந்து கொள்கிறோம்.

பூமி -  நாம் நின்று கொண்டிருக்கும் 

தரை ( Land ) நமது கண்களுக்குத் தெரிகிறது.

புவி ஈர்ப்பு விசை

(gravity force ) நமது கண்களுக்கு தெரிவதில்லை.

ஒரு நொடி நேரம் மட்டும்

புவி ஈர்ப்பு விசை இல்லை 

என்றால்,

உலக மக்கள், விலங்குகள், பூமியில் உள்ள பொருட்கள்

அனைத்துமே 

விண் வெளியில் 

பாய்ந்து விடும்.

அது போலதான்,

 மனித உடம்பில் உருவாகும்

விந்துவும் - நாதமும்.

விந்துக்களின் கூட்டத்தை

கெட்டியான திரவ வடிவில் 

கண்களால் காண முடியும்.

ஒரு விந்தணுவை மட்டும்

நுண்நோக்கி ( microscope ) வழியாக பார்த்து விட முடியும்.

ஆனால்,

அதை சுற்றி சூழ்ந்திருக்கிற

' ஜீவ காந்த ' புலத்தை நமது கண்களால் காணமுடியாது.

காந்த மண்டலத்தால் 

சூழ பட்டதுதான்,

ஆண்களின் 

விந்து அணுவும்,

பெண்களின் நாதமும்.

ஒருவரால்,

சிறுநீரை வெளியேற்றும்

சந்தர்ப்பம் கிடைக்கும் வரையில்,

அதை வெளியேற்றாமல்

தனது கட்டுப்பாட்டுக்குள்

கொஞ்ச நேரமாவது

வைத்துக்கொள்ள முடியும்.

எப்படியென்றால்,

சிறுநீர் அணுக்களில் 

எந்த விதமான காந்த புலமும் இல்லை.

அதனால்,

அதை வெளியேற்றுவதற்கு

சமயத்திற்கேற்றது போல்

தாமதப்படுத்த முடிகிறது.

ஆனால்,

உடலுறவின்போது,

ஆண் எதிர்பாராத நேரத்தில்,

அவனது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல்,

விந்தணுக்கள் வெளிப்பட்டு விடுகிறது.

காரணம்,

எதிர் எதிர் துருவங்கள் ஈர்க்கும்

என்ற காந்த தத்துவத்தின் படி 

விந்து அணுக்கள் செயல்பட்டு விடுகிறது.

எதிர் துருவத்தை நோக்கி பாய்கிறது.

நாதத்தில் கலக்கிறது.

பின்னாளில்,

கரு முட்டை உருவாகிறது.

குழந்தை உண்டாகும் போது,

 குழந்தையின் உடலமைப்பு -

- அனாட்டமி  -அனைத்து குழந்தைகளுக்கும் 

ஒரே அமைப்புடன் உருவாகுவதற்கு இந்த காந்த புலமே முக்கியக் காரணமாக உள்ளது.

இதில்,

விந்தணு 

குழந்தையின் உடலாகவும்,

காந்த புலம் 

அதன் ஆத்மாவும் உருமாறுகிறது.

ஆத்மா என்பது ஒரு 

காந்த பிரதேசம்.

அதனால்தான்,

குழந்தையை

 பார்க்கிறோம்.

அதன்

ஆத்மாவை பார்க்க முடிவதில்லை.

ஆத்மாவின் சக்தியை மட்டுமே உணர முடியும்.

குழந்தை வளர்ந்து 

வாலிப பருவத்தை அடைகிறது.

காந்த புலனும் - அதாவது

ஆத்ம சக்தியும் 

வலிமை அடைகிறது.

அதன் சக்தி எல்லையற்றது.

மகாவீரர் அதை

 ' அனந்த வீர்யம் ' என்று அழைத்தார்.

அந்த காந்த புலனை இரண்டு வழிகளில்

பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதலாவது,

தியானத்தின் மூலமாக

ஆத்ம சக்தியை,

இடுப்பு பகுதியிலிருந்து -

மூலாதாரத்திலிருந்து -

மேலே ஏற்றி,

உச்சந் தலையிலிருக்கும்,

துரியம், ஸகஸ்ராதாரம்

பகுதிக்கு எடுத்து செல்ல இயலும்.

அது பேரின்ப நிலையின் ஆரம்பம்.

விந்து சக்தியில் இருந்து

காந்த சக்தியை மட்டும்

அழைத்து செல்கிற செயல்.

மனதில்,

எந்த நிலையிலும் சாந்தத்தை ஏற்படுத்தி தரும் அதுவே   'புனிதம் '

இந்த இன்பம் நிரந்தரம்.

காந்த புலத்தை 

மேல் நோக்கி செலுத்த நினைப்பவர்களுக்கு

மன உறுதி அதிகமாக வேண்டும்.

ஏன் என்றால்,

அந்த பாதை முழுவதும்

முரண்பாடுகள், 

குழப்பங்கள் அதிகம்.

ஆனால்,

இறுதியில் கிடைக்கும்

பேரின்ப நிலையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

இரண்டாவது,

காந்த புலனின் தாக்கத்தால்

உடலுறவின் மூலமாக,

கீழ் நோக்கி செலுத்தி

சிற்றின்ப நிலையை அடைந்துவிடலாம்.

இது சுலபமானது.

அடிக்கடி மனம் விரும்புவது.

ஆனால்,

இந்த இன்பம் தற்காலிகமானது.

சிறிது நேரம் மட்டுமே.

மனது,

சிற்றின்பத்தையே எப்போதும் விரும்புவதால்,

அதை மீறி பேரின்பத்திற்கான முயற்சியை மேற்கொள்வது

கடினம்தான்.

மனம்,

தேவையில்லாத சமயங்களிலும்,

காம இச்சையை தூண்டி விட்டுக் கொண்டே இருக்கும்.

எனவேதான்,

சிற்றின்பத்தில் முழுமைப் பெற்ற பின்னர்,

மனதின் தொல்லை இல்லாமல்,

பேரின்பத்திற்கான முயற்சிக்கு வருவது நல்லது.

' காமத்தில் இருந்து கடவுளுக்கு வருவதே சாத்தியமானது.

No comments:

Post a Comment