அற்புதமான ஈர்ப்பு சக்தி
ஒரு முறை பிரபல இயற்பியல் விஞ்ஞானி நியூட்டனிடம் ஒரு பெண்மணி வந்து:
'மிஸ்டர் நியூட்டன் அவர்களே!, இந்த கண்டுபிடிப்புக்களை எல்லாம் எப்படி உங்களால் கண்டுபிடிக்க முடிந்தது?" என கேட்டாள்.
அதற்கு விஞ்ஞானி நியூடன்: இலகுவான விடயம், பூமியில் கீழே விழும் பொருட்கள் பற்றி சிந்திப்பதில் நான் தினமும் என் நேரத்தைச் செலவழித்தேன். அதனால் இலகுவாக கண்டுபிடிக்க முடிந்தது." என்றார்.
அதற்கு அந்தப் பெண்மணி: நானும்தான் நாளாந்தம் பல மணிநேரம் சிந்திக்கிறேன், ஆனால் எதுவும் ஆகவில்லையே!" என்றாள்.
அதற்கு நியூட்டன் அவளிடம்: நீங்கள் எது பற்றி சிந்திக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு அவள்: என்னுடன் சண்டைபிடித்து,
என்னை விட்டுப் பிரிந்து சென்ற என் கணவரைப் பற்றித்தான்!" என்றாள்.
அதற்கு நியூட்டன்: நீங்கள் இருவரும் பிரிவதற்கு முன்னால் சித்தித்தீர்களா? அல்லது பிரிந்த பின்னால் சிந்தித்தீர்களா?
என்று கேட்டார்.
அதற்கு அவள்: 'பிரிந்த பின்னர்தான்" என்றாள்.
அதற்கு விஞ்ஞானி நீயூடன் அவர்கள்: நீங்கள் பிரிய முன்னர் உங்கள் கணவர் பற்றி சிந்தித்திருத்தால், அற்புதமான ஈர்ப்பு சக்தி விதியை கண்டுபிடித்திருப்பீர்கள்!" என்றார்.
No comments:
Post a Comment