Thursday, 24 October 2024

சிந்தனைத்தடாகம்

சிந்தனைத்தடாகம் 

பிடிக்காத பெண்ணை திருமணம் செய்த பிறகு பெற்றோர்கள் வழக்கமாக சொல்லுவது 'கவலைப்படாதே போக போக உனக்கு அவள் மேல் காதல் வந்துவிடும்.' போக போக வருவது காதல் அல்ல பழக்கம். பிறகு அதில் பிறக்கும் அர்ப்பணிப்பு. தொன்மையான வேட்டைக்காரன் இறைச்சியை உண்ண விரும்பியபோது, ​​புலியிடம் சிலவற்றை தனக்கு விட்டு விடுமாறு  கேட்டான். புலியும் தந்தது, என்னை என்றும் கொல்லாதே என்ற நிபந்தனையோடு. இதே நிலையில் தான் நம்மூர் கணவன் மனைவியும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். வியாபார ஆற்றலை நம் திருமண அமைப்பில் அற கட்டளையாக மாற்றி வைத்துள்ளது நமது சுற்று சூழல்கள். அனுபவம் மனிதன் தனக்கு நேர்ந்ததைக் கொண்டு என்ன செய்கிறான் என்பதே. இதை அறிந்தவன் நிறுவனமயமாக்கப்பட்ட சமுதாய கோட்பாடுகளின் செல்வாக்கு இல்லாமல் நம் முழு வாழ்க்கையையும் நாம் வாழ்ந்தால், வாழ்க்கையுடன் மேலும் நெருக்கமாகவும் உணர்வுகளுடன் நெருக்கமாகவும் இருக்க நம்மை சமுதாயம் விடாது என்பதே

கிறிஸ்தவ கடவுள் இந்து கடவுள் யூதக் கடவுள்கள் இறந்துவிட்டார்கள். இதைத்தான் நீட்சே சொன்னார் .

இன்னும் பல கடவுளால் இருந்திருக்கிறார்கள் .

அனைவரும் அழித்து போய் இல்லாமல் போய் விட்டார்கள்.

 பட்டியல் போட்டுப் பார்த்தால் இத்தனை கடவுளார் இருந்திருக்கிறார்களே என்று அதிசயத்து போய்விடுவாய் !

அப்படிப்பட்ட பட்டியல் ஒன்றை நான் பார்த்திருக்கிறேன் 

ஆனால் இப்போதோ அவர்கள் பெயர்கள் கூட யாருக்கும் நினைவில் இல்லை.

 பட்டியல் முழுக்க படித்து பார்த்தேன் நிறையத்தால் கடவுள் ஆராய் கற்பித்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.

 அந்த கடவுளார் மீது சலிப்பு தோன்றிய போது புதிய கடவுளாரை கற்பித்துக் கொள்கிறார்கள் .

பழைய பொம்மைகளுக்கு பதிலாக புதிய பொம்மைகள்.

 இந்த கடவுளால் பிறக்கிறார்கள் இறக்கிறார்கள்.

 ஆனால் இவர்கள் உண்மையான கடவுள் அல்ல.

 உண்மையான கடவுள் வாழ்க்கை தான்.

 தான். மற்றவர் .

உயர்ந்தவர். தாழ்ந்தவர் .

கருப்பர் .சிவப்பு. என பிரிவினை ஏதும் இன்றி வாழும் வாழ்க்கை தான் கடவுளால்

நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது.

உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது.

அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது.

அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்' என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

'மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.

'கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்' சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது 'லேர்ன் டு பர்கிவ்' (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்.

மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள்.

மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இதுவே காரணமாம்.

இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன.

`ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்' என்கிறது பகவத் கீதை.

இஸ்லாம் கடவுளை 'அல் கபிர்' என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம்.

'மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாது' என்கிறது கிறிஸ்தவம்.

ஆனால் மதங்களைப் பின்பற்றும் நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது?

நாட்டில் நடைபெறும் இன்றைய நிகழ்வுகளை மீடியாக்களில் பார்த்தாலே உண்மைத்தன்‍ையை தெரிந்துகொள்ள முடியும்..

மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை.

மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது.

மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள்.

குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும்.

அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும்.

குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.

பலவேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம்.

கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம்.

எதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம்.

அப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.

மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது.

ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும்.

வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது.

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.

மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்.

மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்.....

காதலில் ஒருவரை ஒருவர் மயக்கும் கலை இன்று சட்டரீதியாக கொந்தளிப்பான ஆய்வறிக்கையாக மாறியுள்ளது. ஆதியில் நாம் முகத்தை ஆற்றில் ஒட்டிக்கொண்டு மிருகத்தைப் போல தண்ணீர் குடித்தவர்கள். நாம் மலைகளுடன் பேசினவனவர்கள். காட்டுமிராண்டித்தனமாக காதலித்தவர்கள். திடீருன்னு காதலிலும் காமத்திலும் கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும் நடந்துக்க சொல்லி கட்டளை. காதலும் காமமும் சீர்திருத்த முடியாத ஒரு போதை மேம்படுத்த முடியாத ஒரு தவறு நுகர முடியாத திரவியம் பாட முடியாத ச ரி க ம ப விளையாட முடியாத சூதாட்டம் ஆனால் இன்று ஆசைப்பட முடியாத ஒரு ஆசையாக காதலும் காமமும் மாறி விட்டது. காலத்துக்கு ஏற்றால் போல்  இன்று ஒழுக்க விதிகள் பின்பற்றப்படும் போது மட்டுமே மயக்குதல் நிலைத்திருக்கும். இந்தப் படித்த உலகில் காதலியை கவரும் பொழுது பொறுமையாக இருக்க வேண்டும். ஒரு இரவில் அவளோ அவனோ மயங்க போவதில்லை. இன்று ஆண்கள் காதலனை காதலியை கவர்ந்து மயக்கி தன் வசப்படுத்தும் கவர்ச்சியான கலையைப் புரிந்து கொள்ளாமல், டார்வினின் மூதாதையர் குரங்குகளாக மாறி பெண்களை கொடூரமாக கற்பழித்து அவர்களைக் கொல்கிறார்கள். அவளுடைய குற்றத்தில் பங்குதாரராக இருப்பது காதல் அவள் மீது குற்றம் செய்வது ஆண்மையின் இயலாமை...Courtesy: Art Eternal

போர் முடிந்த பிறகு ஒரு சிப்பாய்யிடம் தளபதி கேட்டார் " பட்டாளத்தில் இருக்க போகிறாயா இல்லை ரிட்டயர் ஆக விருப்பமா" பதில் வந்தது " நான் துண்டு துண்டுகளாக பல துறைகளில் ஆய்வு செய்ய விரும்புகிறேன். அரசியல், கலாசாரம், பாரம்பரியம், மதம், மானுடவியல், காதல், சமூக நீதி, காமம், புத்தகம், போதை பொருள், தத்துவம், சினிமா, நீல படங்கள், பயங்கரவாதம், தீவிரவாதம், இன சுத்திகரிப்பு உட்பட. இவை அனைத்திலிருந்தும் சிலவற்றை புரிந்துகொள்ள முயற்சிக்க போகிறேன். அதற்கு மேல் உலகத்துல என் வீடு போல் ஒரு போர்களம் என் குடும்பத்தார் போல் கவித்துவமான எதிரி படை எங்கும் கிடையாது. அவர்களை தீவிரமாக அறிந்து கொள்ள போகிறேன். அதற்கு தளபதி "எல்லாப் போர்களும் ஒரு சிந்திக்கும் மனிதன் தோல்வியடைந்தான் என்பதற்கு அறிகுறியாகும். உன்னை போன்ற புத்திசாலிகள் சந்தேகங்கள் நிறைந்தவர்கள். நீ சுடும் தோட்டாவின் படைப்பாற்றலை முடக்குவாய். முட்டாள்கள் நம்பிக்கை நிறைந்தவர்கள். அர்த்தமற்ற போருக்கு இரண்டாவது வகை தேவை. நீ கிளம்பு.."Courtesy: Perceptive Artista

தலை சிறந்த காதலர்களுக்கு வழக்கமான காதல் முறைகள் பிடிப்பதில்லை. செக்ஸில் நாடகம் அவர்களின் வாழ்க்கையை சிலிர்க்க வைக்கிறது. பிரபஞ்சம் இந்த மாஸ்டர் காதலர்களை துல்லியமாக உருவாக்க மிகுந்த நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது ஏனென்றால் அவர்கள் அனைவரிடமிருந்தும் வித்தியாசமான ஒன்றை பாலியல் உலகிற்கும் எழுத்தாளர் உலகிற்கும் வழங்கி உள்ளது. சிறந்த காதலர்களுக்கு மற்ற பெண்களைத் தேட நேரமில்லை, ஏனென்றால் அவர்கள் தங்கள் சொந்தத்தை நேசிப்பதற்கான புதிய வழிகளைத் தேடுவதில் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள். அவர்கள் காதல் செய்யும் அத்தனை கோணங்களையும் மற்றும் காதல் செய்யும் செயல்முறையின் அனைத்து பகுதிகளையும் மேய்ந்து தின்றவர்கள். பரந்த கடற்கரைக்கு முன், அலைமோதும் நதியின் கரை மேல், பட்டபகலில் சூரியனின் அழகுடன், நிலவு வெளிச்சத்தில் தூங்கும் உடைந்த கோவிலுக்குள்ளே, பால் கொதிக்கும்போது சமையலறையில், கைவிடப்பட்ட காரின் பின் இருக்கையில், அறுவடை செய்த வயல்களில், மரணத்தையும் பாலினத்தையும் இணைக்கும் கல்லறையில் கூட இந்த புது படைப்பில் முழுகிய ஜோடி காமத்தின் உச்சத்தை அடைகிறார்கள். நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நேரத்தில் காதல் புரியும் கணவன் மனைவி போல் இவர்களுக்கு காமம் சலிப்பு தட்டுவதில்லை...Courtesy: Academic Painting/ La Peinture Acadèmique♥️

பழுத்த இலைகளின் நடுவே 

ஓரு பச்சை இலையாய் நீ எனக்குத்தெரிந்தாய் 

எத்தனை கணங்கள்

பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை

ஒளிபட்டுத் தெறிக்கும் 

உன் யெளனத்தில் கிறக்கமுற்ற என் மனம்

ஒரு ஊஞ்சலைப் போல ஆடத் தொடங்கியது

பல்வேறு திசைகளில் ஆடும் உன்னை இமைகள் விரித்து 

பார்வைகள் சுழற்றிப் பார்தேன் 

ஒவ்வொரு திசையிலும் வெவ்வேறு அழகில் ஒளிர்ந்தாய்

நின்ற இடத்தைவிட்டு நகராத நான் உன் வனப்பில் வீழ்ந்தேன்

காற்றின் பாடலில்  உன் நளீனம் உன்னதத்தில் மிதந்தது

நான் பிரார்த்தித்துக்கொண்டது என்னவெனில் 

நீ எப்போதும் பழுத்து உதிர்ந்துவிடாத

பச்சிலையாய் இருக்க வேண்டும் என்பதுதான்

என் கண்களைவிட்டு நீ உதிர்ந்து 

மறைவதை ஒரு போதும் ஏற்காது என்னுள்ளம்

நீ அப்படியே துளிர்த்திரு நான் உன் மீது விழித்திருப்பேன்.

எப்போதும் ஆசையாய் ஆவலாய் உன்னை தழுவ,,,,,,,

                                                                     அன்பின் பிரேமிதாஸ்

என் இறூதி வாழ்நாள் முழுவதும் காத்திருக்க வைத்தாய். உறவுகளின் அரவணைப்பில் இருந்து ஒதுங்கினேன். வாழ்க்கையின் பொறுப்புகளில் இருந்து, அதன் வடிவத்தை விட்டு உன்னை நாடினேன். உனக்காக சம்பாதிக்க துடித்தேன். வாழ்க்கையில் தனியாக இருப்பது மிகவும் கடினம் மற்றும் சில நேரங்களில் தனியாக இருப்பது மிகவும் சுகம் என்பதை அறிந்து கொண்டேன். உன் குடும்பத்திற்காக எல்லாவற்றிற்கும் தலையை ஆட்ட கடமை பட்டவன் நான். திருமணமாகி குழந்தைகள்  பெற்றாய். இப்போது  தனியாக இருக்கிறாய். இன்று என் காதலை ஏற்க விரும்புகிறாய். இது வருவதை நான் எதிர் பார்க்கவில்லை. உரையாடல் கவிதையாக மாறும். சிரிப்பு இசையாக கேட்கும். திரும்பவும் ஒன்றாகச் செலவழிக்கும் நேரம் ஒரு மெல்லிசையாக மாற்றியமைக்கும், அது பழையதாக இல்லாமல் புதிதாக  மீண்டும் மீண்டும் ஒலிக்கும் எனக்கு. உனக்கு குழந்தைகளின் நினைவு, இறந்த உன் கணவருடன் வாழ்ந்த வருடங்களை உன்னால் மூட முடியாது. கடவுளுக்கு கொடூரமான நகைச்சுவை உணர்வு உண்டு. நீண்ட காலமாக உனக்காக காத்திருந்ததைப்போல என் காதல்  கனவுகளில் உன் நினைவு ஆட்சி செய்தது. அது எனக்கு மகிழ்வை தருகிறது. உனக்கு பாதுகாப்புஅளித்தது. நிஜ வாழ்க்கையில் இனிமேல் என்னால் காதல் தியாகியாக இருக்க முடியாது. கவலைப்படாதே உன் தனிமையை உன் குடும்பத்தின் பொறூப்புகள்  நான் சுமப்பேன். உன்னையும் என் இதயத்தில் என்றூம்

ஆசிரியர்களின் எதிர்காலம் அவர்கள் கண் முன்னே கொல்லப்படுவதால், அவர்கள் தொழில் மேல் எந்தப் பற்றும் இல்லை என்பதை ஆதாரம் காட்டுகிறது. ஒரு பள்ளியில் மிக சில ஆசிரியர்கள் மட்டும் விரிவுரையாளர் உதவிப் பேராசிரியராகவும் பதவி உயர்வு கிடைக்கிறது. மற்றவர்கள் முப்பதைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதே நிலையில் பணி ஓய்வு பெறுகிறார்கள். விரக்தியில் நம்பிக்கையோ உற்சாகமோ அவர்களுக்கு இல்லை, மேம்படுத்தி கொள்ளும் பசியும் இல்லை. தினமும் வகுப்பறையில் வழக்கமானதை ஓப்பிக்கிறார்கள். சொன்ன நேரத்தில் சிலபஸை முடிக்க. அதனால்தான் என்னமோ இவர்களின் நெறிமுறை ரேடாரை விட்டு வெளியேறும் பல மாணவர்கள்  நேர்மையின்மையை வெளிப்படுத்துகிறார்கள். ஒரு தேசத்தின் எதிர்காலம் இந்த கசப்பான மனநிலையில் உள்ள டீச்சர்கள் கைகளில் உள்ளது. யாரவது ஒரு ஆசிரியர்  தங்களை மேம்படுத்திக் கொண்டால் அவர்களிடம் படிக்கும் மாணவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். பார்வையற்றவன் தன் வாழ்நாள் முழுவதும் தனக்கு உதவிய வாக்கிங் ஸ்டிக்கை கண் பார்வை வந்த முதல் நாளில் தூக்கி எறிவது போல் நாம் நமது படிப்பு முடிந்தவுடன் நமக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை தூக்கி எறிகிறோம். ஒரு ஜ. ஏ. ஸ் அதிகாரியை விட  ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் வாங்கி கொடுக்க வேண்டிய பொறுப்பு நமது...

உன்னிடம் எல்லாமும் சொல்லிவிட்டேன்

நீ அறிந்தும் அறியாதது போலிருக்கிறாய்

நீண்ட உன் கரங்களில் 

என் மனதை பூங்கொத்தைப் போல் தந்துவிட்டேன்

அதன் உள்வெளிகளில் உட்சென்று

என்னைக் கலைத்துப்போடு

உன் மீதான பெருங்காதலும்

மோகமும் சிதறி விழும்

நானென்பதில் உன் உயிரையும்

என் மீதான உன் உயிர்த்த

பார்வைகளையும்

கிறங்கச் செய்யும் தாமரையாய்

விரியும் உன் இதழ்களையும்

உன் சுவாசத்திலிருந்து வெளியேறும்

உயிர்க்காற்றையும் 

சேகரித்துக்கொண்டுள்ளேன்

மிக எளிதாக கடந்து செல்லும்

உன்னிடம் தயக்கமுறும் உரையாடலை

சொல்ல முடிவதில்லை

நீ எனக்காய்த் திறவாத உன் இதயத்தில்

என்ன சேமித்திருக்கிறாய்

உன் இமையோரங்களில் 

என் பிம்பம் அவ்வளவு

வாஞ்சையாக நகர்ந்து செல்வதைப்

உணர்ந்திருப்பாய்

சொல்லின் வண்ணங்களில்

உன்னை வானவில்லின் அழகில்

வரைந்து வைத்திருக்கிறேன்

திரும்பத் திரும்ப 

உன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதில்

ஆனந்தம் பெரும் அலையாய்

ஆர்ப்பரிக்கும் வேளை

அடர்வனத்தில் ஒரு பட்டாம்பூச்சி போல 

தொலைந்து போகிறேன்

எனக்கான உன் வாக்கியங்களில்

நடந்து போக உன் அனுமதிக்காய்

காத்திருக்கிறேன்

உன் மனதின் பூங்கொத்துகள்

சலசலத்துக்கொண்டிருப்பது

எனக்கு கேட்கத் தொடங்கிவிட்டது.

ஆசிரியர்களின் எதிர்காலம் அவர்கள் கண் முன்னே கொல்லப்படுவதால், அவர்கள் தொழில் மேல் எந்தப் பற்றும் இல்லை என்பதை ஆதாரம் காட்டுகிறது. ஒரு பள்ளியில் மிக சில ஆசிரியர்கள் மட்டும் விரிவுரையாளர் உதவிப் பேராசிரியராகவும் பதவி உயர்வு கிடைக்கிறது. மற்றவர்கள் முப்பதைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதே நிலையில் பணி ஓய்வு பெறுகிறார்கள். விரக்தியில் நம்பிக்கையோ உற்சாகமோ அவர்களுக்கு இல்லை, மேம்படுத்தி கொள்ளும் பசியும் இல்லை. தினமும் வகுப்பறையில் வழக்கமானதை ஓப்பிக்கிறார்கள். சொன்ன நேரத்தில் சிலபஸை முடிக்க. அதனால்தான் என்னமோ இவர்களின் நெறிமுறை ரேடாரை விட்டு வெளியேறும் பல மாணவர்கள்  நேர்மையின்மையை வெளிப்படுத்துகிறார்கள். ஒரு தேசத்தின் எதிர்காலம் இந்த கசப்பான மனநிலையில் உள்ள டீச்சர்கள் கைகளில் உள்ளது. யாரவது ஒரு ஆசிரியர்  தங்களை மேம்படுத்திக் கொண்டால் அவர்களிடம் படிக்கும் மாணவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். பார்வையற்றவன் தன் வாழ்நாள் முழுவதும் தனக்கு உதவிய வாக்கிங் ஸ்டிக்கை கண் பார்வை வந்த முதல் நாளில் தூக்கி எறிவது போல் நாம் நமது படிப்பு முடிந்தவுடன் நமக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை தூக்கி எறிகிறோம். ஒரு ஜ. ஏ. ஸ் அதிகாரியை விட  ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் வாங்கி கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு


அவர்கள் ஒருவரையொருவர் எதிரிகளாகத் தேர்ந்தெடுத்தனர். ஒரு தந்தைக்கும் வெவ்வேறு பெண்களுக்கும் பிறந்தவர்கள் யூதர்களும் பாலஸ்தீனியர்களும். முதல் தாரத்து வயிற்றில் கரு தங்கவில்லை இன்னொரு தாரத்தை நோக்கி ஓடியது அந்த ஆணின் மனம். பிறகு இருவருக்கும் கரு தங்கி விட்டது. பிறக்கும் குழந்தைகள் தர போகும் தொல்லைகள் உலக போர் அளவுக்கு வந்து சேருமென்று ஒருபோதும் கற்பனையில் கூட அவன் எதிர்பார்த்த இருக்க மாட்டான். வழக்கம்போல் இரு தாரத்து பிள்ளைகளுக்கு நடுவே வரப்பு சண்டை அதனுடன் மத சண்டையும் கலந்து விட்டது. ஒரு குழுவிற்குச் சொந்தமான உணர்வு மற்றும் அந்தக் குழுவின் நலன்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தால் போரைத் தூண்டலாம். சில ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களுக்கு வன்முறையில் உள்ளார்ந்த நாட்டம் இருப்பதாகக் கூறுகின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை விட இன்று நடக்கும் விஷயங்கள் மிகவும் வித்தியாசமானது. அன்று இருந்த இசையும் இன்றைய இசை வித்தியாசமானதாக இருந்தாலும். நாக்கு ருசி வித்தியாசமானதாக இருந்தாலும் மக்கள் மாறி வரும் இசை மற்றும் சுவைக்கு ஏற்றவாறு தங்களை மிகவும் மாற்றி கொள்கிறார்கள். ஆனால் வரப்பு மதம் சாதி சண்டைகளில் மட்டும் அன்று முதல் இன்றுவரை அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை...Courtesy: World in my eyes♥️

ஒவ்வொரு நாளும் கண்ணியத்தைப் பற்றி நீ இன்னும் எவ்வளவு கற்று கொள்ள வேண்டும் என்பதை உணர வேண்டும். முதலில் அது பெண்களுடனான உன் நடத்தையில் தொடங்குகிறது.'  'அப்போது ஒரு பெண்ணை கவரும் கற்பனைகள் என்னுடன் விளையாடுவதை எப்படி நிறுத்துவது என்று முதலில் நான் கற்று கொள்ள வேண்டும். கவரும் கலையில் கண்ணியம் குறைச்சல் ' என்றான் மாணவன். அதை நானே இன்னும் கற்கவில்லை என்று நினைத்து சிரித்தார் ஆசிரியர். பல விஷயங்களை எப்படி உணர்கிறோம் என்று நமக்கு தெரியும் ஆனால் அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று தெரியாது. எதிர் பாலினத்தை எப்படி மயக்குவது என்பது ஒரு சிக்கலான கணிதம். கவரும் கலையின் வெற்றி தோல்விக்கு நடுவே தவிக்கும் பல காதல் கதைகள். கவரும் கலையை யாராலும் கற்பிக்க முடியாது, யாரோ அல்லது ஏதாவது உன்னை சிந்திக்கதான் வைக்க முடியம். மயக்கும் கலை பொதுவான விதிகளின் கீழ் வர முடியாது.  ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு தந்திரங்கள் தேவை. ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் பாடுற மாட்டை பாடி கறக்கணும். இந்த கவரும் கலையில் வெற்றியடைகிறாயோ இல்லையோ என்பது பொருத்தமற்றது. ஏனென்றால் இது கற்க முடியாத கலை. கண்ணியத்தை புதைக்கும் ஒரு கலை வடிவம். வாழ்க்கையில் ரசிக்க வேண்டிய ஒரு அனுபவம் மட்டுமே..

அன்பு செலுத்துவது வெறுப்பதை விட எளிது என்கிறாய் ?

மனிதனை அவன் போக்கில் விட்டு விட்டால்.

 எந்த விஷயத்தையும் கலக்காமல் விட்டுவிட்டால்.

 வெகு சுலபம்தான்.

 எந்த பிரச்சனையும் இருக்காது .

பள்ளத்தை நோக்கி நீர் பாய்வதைப் போலத்தான்.

 அல்லது புகை மேலே கிளம்புவதை போலத்தான் .

மரங்களில் மலர்கள் மலர்வதைப் போலத்தான்.

 பறவைகள் பாடுவதைப் போலத்தான்.

 அவ்வளவு இயல்பாக உற்று ஊற்று போல தானே  பாயும் தான்.

 அவனை யார் விடுகிறார்கள் ?

குழந்தை பிறந்த உடனே அவன் மீது பாய்ந்து விடுகிறார்கள் .

சக்தியை எல்லாம் சிதைத்து!

 தன் பொய்வாழ்வு வாழ்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் போகும் அளவுக்கு.

 அவனை அலங்கோலப்படுத்தி விடுகிறார்கள்

 தான் எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழவில்லை.

 என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் செய்து விடுகிறார்கள்.

என் அன்பே  உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ ஏதோவொரு தேவைக்காக எனக்கு நீ தேவைப்படுகிறாய் அல்லவா கண்மணி! அதற்கு நான் காதலென்ற  பெயர் வைத்திருக்கிறேன். 

சின்னக் குழந்தை மாதிரி பண்ணாத,   லூசு மாதிரி இருக்கு, கொஞ்சம் மெச்சூரா இரு, அப்படி இரு, இப்படி இரு, அடிக்கடி சண்டையிட்டு கொள்கிறோம். ஆசையாசையாய் பார்த்துக் கொண்ட முகங்களை எதார்த்தமாய் பார்த்துக் கொள்கிறோம். தூசுபடிந்த புத்தகமாய் என் உணர்வுகள், இப்படி தான் இருக்க வேண்டுமென என் விருப்பத்தை உன் மேல் திணித்துக்  கொள்கிறேன். இன்னும் இதை காதலென்றே சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

கழுத்தின் கீழே இறங்காத  பார்வைகள், காமம் தொடாத பேச்சுக்கள், முத்தத்திற்கே பல கனாக்கள், ஒரு தீண்டலுக்கே புல்லரித்த தேகங்கள், ஆசை வார்த்தைகளுக்கு ஆகாயம் பறந்த மனம், சிறுசிறு அசைவு களையும் கவிதைகளாய்  ரசித்த நாட்கள், துளியும் சுயநலமற்ற பேரன்பில்  உனக்காக நானும், எனக்காக நீயும் வாழ்ந்திருப்போம்   அதற்கும் காதலென்றே தான் பெயர் வைத்திருந்தோம்.  ஆரம்பத்தில் காதல் நம் கைகளை பற்றிக் கொண்டிருந்தது. இப்போது நம் கைகள் அந்த காதலை  இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறது, சாகும் வரை பிரியா வரத்தோடு,,,,,,,,,,,,,







No comments:

Post a Comment