Tuesday, 22 October 2024

ஞான ருசி

ஞான ருசி  

அஞ்சானி என்பவன் மனதளவில் வாழ்கிறவன் .

மனம் கழிந்த நிலை பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாது .

தகவல்கள் அறிவு என்ற இவற்றின் தளத்தில் வாழ்கிறவன்.

 ஞானத்தை ருசி பார்க்காதவன்.

 இரவல் வாழ்க்கை வாழ்கிறவன் .

பிறரை பார்த்து அவற்றே தானும் வாழ்கிறவன்.

 தன் இருத்தலின் இருந்து முகிழ்ந்து வரும் எதையும் அறியாதவன் .

புத்தருக்கு அஞ்சானி என்பவன் சாத்திரங்கள் சொல்வது அனைத்தும் தெரிந்து கொண்டவன் .

ஆனால் சத்தியத்தின் ஒரு கணத்தைக் கூட சுவைத்திராதவன் .

பெரிய அறிஞனாக இருக்கலாம் மெத்த படித்தவனாக இருக்கலாம்.

 பார்க்க போனால் அஞ்சாணிகள் மெத்த படித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

 தங்களுடைய அஞ்சானுக்கு திரையிட்டு வைக்க. அவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டி இருக்கிறது .

வார்த்தைகள் கொள்கைகள் தத்துவங்கள் என்ற எவற்றுக்கு பின்னால் தம்முடைய அகத்து அறியாமையை அவர்கள் மறைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

 நமது வெறுமையை மறைத்து வைக்க வேண்டி இருக்கிறது .

அப்போதுதான் அவர்களால் தமக்கும் தெரியும் என்று நினைத்துக் கொள்ள முடிகிறது

No comments:

Post a Comment