ஞான ருசி
அஞ்சானி என்பவன் மனதளவில் வாழ்கிறவன் .
மனம் கழிந்த நிலை பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாது .
தகவல்கள் அறிவு என்ற இவற்றின் தளத்தில் வாழ்கிறவன்.
ஞானத்தை ருசி பார்க்காதவன்.
இரவல் வாழ்க்கை வாழ்கிறவன் .
பிறரை பார்த்து அவற்றே தானும் வாழ்கிறவன்.
தன் இருத்தலின் இருந்து முகிழ்ந்து வரும் எதையும் அறியாதவன் .
புத்தருக்கு அஞ்சானி என்பவன் சாத்திரங்கள் சொல்வது அனைத்தும் தெரிந்து கொண்டவன் .
ஆனால் சத்தியத்தின் ஒரு கணத்தைக் கூட சுவைத்திராதவன் .
பெரிய அறிஞனாக இருக்கலாம் மெத்த படித்தவனாக இருக்கலாம்.
பார்க்க போனால் அஞ்சாணிகள் மெத்த படித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
தங்களுடைய அஞ்சானுக்கு திரையிட்டு வைக்க. அவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டி இருக்கிறது .
வார்த்தைகள் கொள்கைகள் தத்துவங்கள் என்ற எவற்றுக்கு பின்னால் தம்முடைய அகத்து அறியாமையை அவர்கள் மறைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
நமது வெறுமையை மறைத்து வைக்க வேண்டி இருக்கிறது .
அப்போதுதான் அவர்களால் தமக்கும் தெரியும் என்று நினைத்துக் கொள்ள முடிகிறது
No comments:
Post a Comment