வெல்ல முடியாதது
முல்லா நஸ்ருதீன், தன்னுடைய நூறாவது வயதை முடிக்கும்பொழுது, சில பத்திரிகையாளர்கள் வந்து அவரை பேட்டி கண்டார்கள். அந்த நகரத்தில் அவர் தான் முதன் முதலில் நூறு வயதை எட்டியவர் என்று தெரிய வருகிறது.
அவரை, "நீங்கள் எப்படி இவ்வளவு நாள் வாழ்ந்தீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "நான் மது அருந்துவது இல்லை, பெண்களிடமும் எனக்கு விருப்பம் இல்லை. ஒருக்கால் அதுதான் காரணமாக இருக்கலாம்" என்றார்.
அப்பொழுது பக்கத்து அறையிலிருந்து ஏதோ சாமான்கள் விழும் சத்தமும், ஏதோ பறக்கும் சத்தமும் கேட்டன. நிருபர்கள் குழப்பத்துடன், "என்ன அது சத்தம்?" என்றார்கள்.
அதற்கு முல்லா, "அது வேறு ஒன்றும் இல்லை. என்னுடைய அப்பா குடித்துவிட்டு, வேலைக்காரியை துரத்துகிறாரோ என்னவோ?' என்று மிகச் சாதாரணமாகச் சொன்னார்.
முல்லாவின் தகப்பனாருக்கு சுமார் 125 வயது இருக்கலாம். ஆனால் முல்லா சொல்லுகிறார், தான் மது. மாதுவைத் தொடுவது இல்லை. அதுதான் தன் நீண்ட ஆயுளுக்குக் காரணம் என்று. ஆனால், அவர் தந்தை, தன் 125-வது வயதிலும் குடித்து விட்டு பெண்ணைத் துரத்திக் கொண்டிருக்கிறார்.
நீங்கள் உங்கள் உடலை எடுக்கும்பொழுதே மரணமும் உண்டாகிவிடுகிறது.
தாயின் கர்ப்பத்தில் நீங்கள் நுழையும் பொழுதே.மரணமும் சேர்ந்தே வருகிறது.
உங்களுடைய வாழ்க்கை எனும் கடிகாரம்,70 அல்லது 80 ஆண்டுகள் ஓடுவது என்பது ஆயுள் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால் உங்கள் நீண்ட ஆயுளுக்கும், வாழ்ந்த வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
'இறப்பு' என்பது தவிர்க்க முடியாதது வெல்ல முடியாதது
No comments:
Post a Comment