Tuesday, 22 October 2024

தெரிந்ததும் தெரியாததும்

தெரிந்ததும் தெரியாததும்

தெரிந்ததற்கும் தெரியாததற்கும் இடையே ஒரு பாலம் தான் மனிதன் .

தெரிந்ததில் அடங்கி போய் கிடப்பது அறிவீனம் !

தெரியாததை தேடி போவது ஞானத்தின் ஆரம்பம்.

 தெரியாததோடு ஐக்கியமாகப் போவது ஞானி ஆகி போவது.

 புத்தன் ஆகி போவது.

 மீண்டும் மீண்டும் நினைவில் நிறுத்து மனிதன் இருப்பவன் அல்ல.

 மாறிக்கொண்டிருப்பவன் .

அவன் மனிதனாகும் பாதையில் பயணம் போய்க் கொண்டிருக்கிறவன்.

 ஒரு யாத்திரிகன்.

 ஒரு வழிப்போக்கன்.

 இன்னும் வீட்டுக்கு போய் சேராதவன் .

தன் வீட்டை தேடிக் கொண்டிருக்கிறவன்.

 வீட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவன் !அஞ்சானி.

 ஏனென்றால் அத்தோடு தேடுதல் முடிந்து விடும் .

தேடுதலை நிறுத்திய அந்தக் கணமே தேங்கி போன குட்டையாகி போகிறாய் .

உன் சக்திகள் அனைத்தும் தேங்கி போக உடை மாற்றம் தான் வீசும்.

பிறகு நீ இறந்து போனவன் உயிரோடு இருப்பவன் அல்ல. 

தான் யார் என்ற தேடலை முடித்தவனே உயிரோடு இருப்பவன் . 

No comments:

Post a Comment