கூனியின் குணமும் சகுனியின் இயல்பும்
தவறுகளில் தேங்கிக்கிடப்பதே முன்னேற்றத் திற்கான முக்கிய தடையாகும். அறிஞர்🌹
கூனியின் குணமும் சகுனியின் இயல்பும்
எல்லோரும் ஒரே குணவியல்புடன் இருக்க முடியுமா? என்றால் இல்லவே இல்லை.
ஒவ்வொருவரும் தத்தம் சிந்தனைக்கு ஏற்ப குணவியல்புகளில் வேறுபட்டவர்களாக இருப்பர்.
இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த இறை வன் அனைவரையும் ஒரே குணவியல்புடன் - ஒரே தன்மை வாய்ந்த அறிவுடைமையுடன் படைத்திருக்க முடியும்.
அவ்வாறான படைப்பு இந்த உலகில் எந்த ஆக்கத்தையும் தரமாட்டா.
ஆம், எலியைப் படைத்த இறைவன் பூனை யையும் படைத்தான். அப்போதுதான் பூனை யும் எலியும் விழிப்புணர்வோடு தம்மைப் பாது காத்துக் கொண்டு வாழ வேண்டும் என்ற உணர்வோடு உற்சாகமாகச் செயற்படும்.
மாறாக எலிக்கு எதிரிகள் இல்லை என் றால், பூனையின் மிக்க நட்பு எலி என்றால், அவற்றுக்கு ஏது வாழ்வு. இதேபோன்றுதான் அனைத்தும்.
ஒரே மொழி, ஒரே இனம், ஒரே சமயம் என்பதாக இப் பிரபஞ்சத்தைப் படைத்தருளு வது ஒன்றும் இறைவனுக்குப் பெரிய காரிய மல்ல.
ஆனால் எல்லாம் ஒன்றென்றிருந்தால், அத்தனையும் இல்லாமல் போய்விடும்.
ஆம், ஒரே சமயம் என்ற நிலைமை இருந் தால்; உலக மக்கள் முதலில் கடவுளைத்தான் மறந்திருப்பர்.
ஒரே மொழி என்றால், இந்த உலகம் சைகை மொழியில்தான் உரையாடியிருக் கும்.
ஆக, எதுவும் ஒன்றுக்கு மேற்பட்டு இருக் கும்போதுதான் அவை கடும் போட்டியிட்டு உயிர்ப்போடு வாழ்ந்து கொள்ளும்.
அந்த வகையில் இராமாயணத்தில் கூனி, அவதார புருஷராகிய இராமபிரானின் பட்டா பிசேகத்தைக் குழப்புவதற்காகப் பிறந்தாள்.
அவளின் உடற்கூனும் உள்ளத்து அங்க வீனமும் இல்லாதிருந்தால், இராமாயண
காப்பியம் நமக்குக் கிடைத்திருக்க மாட்டாது.
ஆக, இராமருக்கு முன்னதாகவே அவ ரின் பட்டாபிஷேகத்தைக் குழப்புகின்ற மந்தரை எனும் கூனி மண்ணில் பிறந்து விட்டாள்.
கூனியின் பிறப்பு இராமரைக் காட்டுக்கு அனுப்புவது மட்டுமல்ல, இராவண வதத்துக் கும் அதுவே காரணம்.
இதுபோன்றுதான் மகாபாரதத்துச் சகுனி. கௌரவர் சேனைக்கான அழிவு; கௌர வர்களைக் காப்பாற்வதற்காகச் சூழ்ச்சி
செய்த சகுனியால் ஆயிற்று.
சூதில் சகுனியின் சூழ்ச்சி இல்லை யாயின், பாண்டவர்கள் வனவாசம் செல்வது ஒருபோதும் நடந்திருக்காது.
அவர்கள் வனம்செல்லாவிடில், பகவத் கீதையை நமக்கு யார் தருவார். ஆக கூனி, சகுனி என்போர் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறார்கள். இதுவே உலக நியதியாம்..
No comments:
Post a Comment