ஞான வழி
நிச்சயமாக இது ஒருவர் மனதில் எழுகிற அடிப்படையான சந்தேகம்தான்.
நான் குடும்பத்தை துறந்து வந்து விடாதீர்கள் ' என்று சொல்வது,
ஒரு குடும்பத்தை துறந்து வந்து விடுவது,
வேறு இரண்டு
புதிய குடும்பங்களை உண்டாக்கிக் கொள்வதற்கு வழிவகுத்து விடலாம் என்ற
காரணத்தால்தான்.
காமத்தை வெல்வது கடினம்.
அதை கடந்துதான் செல்லவேண்டும் என்ற அடிப்படை உண்மையில் தான்.
அதற்கு ஒரு பெண் போதும்.
அவளை,
அவள் ஏற்படுத்திக் கொடுத்த குடும்பத்தை துறக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.
நான் ' விடுதலை ' என்பதை பற்றியும் இடைவிடாமல் பேசிக் கொண்டும் இருக்கிறேன்.
நான் சொல்வதை,
அதன் விளக்கத்தை
காது கொடுத்து கேட்பதோடு பலர் நின்று விடுகின்றனர்.
அவர்கள் எல்லாம்
அதை நெஞ்சில் நிறுத்தி உணர்ந்து கொள்ளவில்லை போல் தெரிகிறது.
கவனமாகக் கேளுங்கள்.
நீங்கள் சுதந்திரமாக பிறந்தீர்கள்.
ஆனால்,
அடிமைத்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் வாழ்க்கையை நான் அடிமைத்தனம் என்று சொல்ல வில்லை.
சொல்லவும் மாட்டேன்.
அதில்தான் அனைத்துமே உள்ளது.
அன்பு,
பாசம்,
கல்வி
அறிவு,
காதல்,
சகோதரத்துவம்
இது போன்றவைகளை எல்லாம்
ஒரு வாழ்க்கை இல்லாமல் உங்களால் அடையமுடியாது.
உணர முடியாது.
இவைகள் எல்லாம்
நீங்கள் ஞானமடைவதற்கு தடைகளே அல்ல.
வேறு சில அடிமைத்தனங்கள் உள்ளன.
அவற்றிலிருந்து உங்களால் மீண்டு,
விடுதலை பெற்று
வர முடியவில்லை.
அந்த அடிமை நிலையை நீங்களாகவே
மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டீர்கள்.
ஏனெனில்,
அந்த அடிமை சங்கிலி
பொன்னாலான விலங்கு.
தங்கத்தால் செய்யப்பட்டவை.
அந்த சங்கிலிகள்,
அதிகாரம்
புகழ்,
மரியாதை,
பொறாமை,
பொருள் சேர்க்கை,
என்பவற்றால்
செய்யப்பட்டுள்ளன.
அழகிய மணம் பரப்பும் மலர்களால் மூடப்பட்டுள்ளன.
அந்த அடிமை சங்கிலி உங்களுக்கு
தங்க ஆபரணங்களாக
மாறியது போல்,
ஒரு மாயத் தோற்றத்தை
ஏற்படுத்தி விட்டது.
அதனால்தான்,
நீங்கள் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது மட்டுமில்லாமல்,
அதையே உங்களது வாழ்வின் அர்த்தமும்
சிறப்பு என்றும்
உயர்ந்த குறிக்கோள் என்றும் நினைக்கிறீர்கள்.
இதுதான் உண்மையில்
' சிக்கல் '
நான் அறிவுறுத்துகிற
' விடுதலை ' என்பது,
இனிமேல் நீங்கள் புதிதாக
சாதித்து பெற வேண்டிய பிரச்சனை அல்ல.
அந்த அடிமை சங்கிலியை
உங்களை விட்டு தூரமாக தூக்கி போட்டுவிடுவதே.
இதற்காக,
நீங்கள் நன்றாக
புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்,
உங்களிடம்
இருக்கும் இந்த அடிமை சங்கிலியை,
தங்க ஆபரணம் என்று நினைக்காமல்,
அது ஒரு இரும்பு சங்கிலி
என்ற உண்மையை உணர்ந்து
கொள்வதுமட்டுமே.
அவைகள் உங்களுடன் இருக்கும்போது,
ஒரு சின்ன கீறல் ஏற்படுத்துகிற
பிளவின் வழியாகக் கூட
உங்களால்
வானத்தை பார்க்க இயலாது.
நான் போதிப்பது,
அந்த அடிமை சங்கிலியிலிருந்து விடுதலை அடைந்து,
சுதந்திர மனிதனாக
ஞான வழியை நோக்கி செல்வதை தான்.
No comments:
Post a Comment