Thursday, 24 October 2024

பெண்ணின் எதிர்பார்ப்பு!

 பெண்ணின் எதிர்பார்ப்பு!

ஒரு மனிதன் தான் விரும்பும் ஒரு தோழியிடம், "எப்படிப்பட்ட ஆணை உன் வாழ்க்கை துணையாக தேடுகிறாய்?"என்றான்.

அவள் சிறிது நேரம் நின்று, அவன் கண்ணைப் பார்த்து, "உனக்கு உண்மையாகவே தெரிய வேண்டுமா?"

தயக்கத்துடன் “ஆமாம்” என்றான்.

அவள் விளக்கத் தொடங்கினாள்,

"என்னால் செய்ய முடியாததை, எனக்காக உன்னால் என்ன செய்ய முடியும் என்று ஒரு ஆணிடம் கேட்க வேண்டும்"

"என்னால் பணம் சம்பாதிக்க முடியும். நான் என் செலவுகளை பார்த்துக்கொள்ள முடியும். பிறர் உதவி இல்லாமல் என் வீட்டை நான் கவனித்துக்கொள்வேன்". எனவே, இவற்றை தவிர்த்து "உன்னால் எனக்கு என்ன தர முடியும்? என்று கேட்பேன்"

அவள் பணத்தைக் குறிப்பிடுகிறாள் என்று நினைத்து அவன் அவளைப் பார்த்தான். "நான் பணத்தைப் பற்றி பேசவில்லை, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் சிறந்து விளங்க பாடுபடும் ஒரு மனிதன் எனக்குத் தேவை" என்றாள்.

அவன் திரும்பி உட்கார்ந்து, தன் கைகளை மடக்கி, அவளிடம் விளக்கம் கேட்டான். அவள் சொன்னாள்:

"எனக்கு மனதளவில் சிறந்து விளங்கும் ஒருவர் தேவை, ஏனென்றால் ஒரு பெண்ணுக்கு உரையாடல் மற்றும் மனக்கிளர்ச்சி அவசிய தேவை. என் உணர்வுகளின் மீது அக்கறையில்லாத மனிதன் தேவையில்லை."

"ஆன்மீக ரீதியான புரிதல் கொண்ட ஒருவர் எனக்குத் தேவை, ஏனென்றால் நான் சமமற்ற மனநிலையுடன் ஒருவருடன் இருக்க விரும்பவில்லை. நம்பிக்கையும், அவநம்பிக்கையும் ஒன்றாக வாழ்க்கை பயணம் மேற்கொள்ள முடியாது",

"அடிப்படை கட்டமைப்பே இங்கு பணம் என்றானவுடன், நான் நிதிச் சுமையுடன் வாழ விரும்பவில்லை. பண ரீதியாக சிறந்து விளங்க பாடுபடும் ஒரு நேர்மறை மனிதர் எனக்குத் தேவை."

"ஒரு பெண்ணாக நான் என்ன செய்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு உணர்திறன் உள்ள ஒருவர் எனக்குத் தேவை, ஆனால் நான் தவறு செய்தால், என்னை தடுத்து நிறுத்தும் அளவுக்கு வலிமையான திறன் கொண்டவர் எனக்குத் தேவை."

"எனக்கு உறவுகளில் நேர்மையான ஒருவர் தேவை. பொய்களும் அக்கறையின்மையும் ஆண் மகனுக்கு அழகல்ல என்று நினைப்பவள் நான்"

"கடவுளால் கொடுக்கப்பட்ட வாழ்க்கையில், நல்ல தலைவராகவும், நல்ல வழிகாட்டியாகவும் , நல்ல ஆலோசனை வழங்குபவராகவும் நல்ல நண்பராகவும் இருக்கக்கூடிய ஒரு குடும்பம் சார்ந்த மனிதர் எனக்குத் தேவை."

நான் மதிக்கக்கூடிய ஒருவர் எனக்குத் தேவை.

தன் பொறுப்புகளை கவனிக்காத ஒரு மனிதனுக்கு நான் அடிபணிய முடியாது.

அடிபணிந்திருப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை; ஆனால் அவர் தகுதியானவராக இருக்க வேண்டும்.

ஆனால், நான் அவரைத் தேடவில்லை. அவர் என்னைக் கண்டுபிடிப்பார். அவர் என்னுள் தன்னை அடையாளம் கண்டு கொள்வார். அவர் எப்போதும் என்னிடம் ஈர்க்கப்படுவார். கடவுள் பெண்ணை ஆணுக்கு துணையாகப் படைத்தார்.

"ஒரு மனிதனால் தனக்குத்தானே உதவ முடியாவிட்டால் என்னால் அவருக்கு உதவ முடியாது." புரியவில்லையா? அதாவது அவனே என்னை கண்டுபிடித்து என்னிடம் வருவான் என்கிறேன்."

சொல்லி முடித்ததும் அவனைப் பார்த்தாள். அவன் ஒரு குழப்பமான முகத்துடன் அமர்ந்திருந்தான்.

"நீ நிறைய எதிர்பார்கிறாய்" என்றான்.

அவள் பதிலளித்தாள், "எனது மதிப்பு எனக்கு தெரியும். அதானால் தான்."என்று.....

யாருக்கு யார் என்று இறைவன் வகுத்த விதி ; சேர வேண்டிய தருணத்தில் சரியாக வந்து சேரும்! என்ற முணுமுணுப்புடன் இருவரும் சென்றார்கள்!

No comments:

Post a Comment