சரணாகதி
பிரபஞ்ச இருப்பின் கைகளில்...
அர்ஜுனன் ஒரு கருவியாக இருந்தால்...
அவனது 'தனித்தன்மை'யின் கதி என்ன?
எல்லாம் நடக்கவேண்டிய
முறைப்படி நடந்தால்...
முன்பே வரையறுக்கப்பட்டபடி
நடக்குமானால்...
தனிமனிதனுக்கு
என்ன பொறுப்பு இருக்க முடியும்?
அவன் இயந்திர சக்கரத்தின்
ஒரு பல் மட்டும்தானே?
🌸 இது ஒரு முக்கியமான வினா...
அதனால் நான் சொல்லப்போவதைக்
கவனமாகக் கேளுங்கள்...
அதைச் சரியாகப் புரிந்துகொண்டால்...
வாழ்க்கையின் சில அடிப்படை
உண்மைகளை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்...
🌸மற்றொருவர் கையில்...
கருவியாக மாறுகிறவரின் தனித்தன்மை,
அழிக்கப்பட்டுவிடும் என்பது மெய்தான்...
ஆனால்,
ஒருவர் தாமே விரும்பிக்
கருவியாக மாறிவிட்டால்...
விளைவது நேர்மாறாகத்தான்
இருக்கும்...
அவருடைய தனித்தன்மை
உயர்ந்த நிலையில் மலர்ந்து மணம் வீசும்...
🌸இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் நிறைய வேறுபாடு இருக்கின்றது...
ஒருவர் வேண்டுமென்றே...
உங்களைத் தாழ்த்தி...
அடிமைப்படுத்தி வேலை வாங்கினால்...
நீங்கள் உங்கள் ஆத்மாவையே
இழந்துவிடவேண்டி வரும்...
ஆனால்,
"நீங்களே விரும்பிச்
சரணாகதியடைந்து...
இயற்கையின் கரங்களில் உங்களை ஒப்படைத்துவிட்டால்..."
"உங்கள் ஆத்மா நிறைவடைந்து திகழும்."
🌸இந்த வேறுபாட்டை...
கவனமுடன் நன்றாகப் புரிந்து
கொள்ளுங்கள்...
வேறுபாடு மிக நுட்பமானது...
பிரமாதமானது...
உதாரணமாக,
நீங்கள் வலிமை கொண்டு
என் கால்களை விலங்கு
போட்டுக் கட்டிவிட்டால்...
நான் உங்கள் அடிமையாகிவிடுவேன்...
🌸ஆனால், "நானே விரும்பி...
எனக்கு அடிமையாகிவிட்டால்..
என்ன ஆகும்?"
அப்போது நானே எஜமான்
ஆகிவிடுவேன்...
அதை உருவாக்கியவன் ஆகிவிடுவேன்...
🌸டயோஜினிஸ் சொன்ன பதில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது...
"நான் சுதந்திரத்தின் ரகசியத்தைக்
கற்றுக் கொண்டுவிட்டேன்...
அதனால் எனக்கு நானே அடிமையாகிவிட்டேன்...
என் சுதந்திரத்தைப் பறிக்க
யாராலும் முடியாது...
உங்களால் என்னை அடிமைப்
படுத்த முடியாது"
என்று கூறினார்.
🌻"கண்ணன் அர்ஜுனனைத்
தன் அடிமைக் கருவியாக
இருக்கச் சொல்லவில்லை...
எதார்த்த நிலையைப் புரிந்துகொண்டு...
இருப்பின் நீரோட்டத்திற்கு ஏற்பச்
செல்லும்படி வேண்டுகிறான்...
வாழ்க்கை ஆற்றின் போக்கைஎதிர்த்து,
எதிர்நீச்சல் போடுவது முட்டாள்தனம்...
🌻"உன்னை வாழ்க்கையிடம் ஒப்படைத்துவிடு...
நீ நிறைவடைவாய்" என்கிறான் கண்ணன்...
யாரவது ஒருவர்...
உண்மையிடம்...
பூரணத்திடம்...
இயற்கையிடம்...
முழுப் புரிதலோடு
தன்னைச் சரணாகதி ஆக்கிக் கொண்டால்...
அவனது தனித்தன்மை முடமாக்கப்படாது...
🌻அது முழுமலராய் மலர்ந்து
மணம் வீசும்...
அப்போது அவரே, அவரது எஜமானன்...
"அதனால்...
சரணாகதி தவிர...
தன் எஜமானத் தன்மையை...
நிலைநாட்டிக் கொள்ள...
வேறுசிறந்த மார்க்கம் இல்லை...
இதைத் தெளிவாகப்
புரிந்துகொள்ள வேண்டும்...
🌻நான் இப்படி சரணடையும்போது,
நானே எஜமானன் ஆகிவிடுகிறேன்...
அடிமைத்தனமான சரணாகதி
அல்ல இது...
அதனால், சரணாகதி அடையும்
அர்ஜுனன், சக்கரத்தின் ஒரு பல் அல்ல...
"அவன் தெய்வீகநிலை அடைந்துவிடுகிறான்..."
முதல்முறையாக, அவனது தனித்தன்மை பூரணமாய் மலர்கின்றது...
அது எந்தவித முயற்சியும் இல்லாமல்,
இயல்பாய் நிகழ்ந்துவிடுகிறது.
No comments:
Post a Comment