சாத்தியம் ஆகும் அசாத்தியம் பேசாலைதாஸ்
மேற்கின் மாபெரும் உள்வியலாளர்களில் ஒருவரான கூ (Cotue) என்பவர் கற்பனையின் மூலமாகவே பலப்பல நோய்களில் இருந்து குணம்பெற லட்சக்கணக்கான மக்களுக்கு உதவினார்.
அவரது செயமுறை மிகவும் எளிமையானது நீங்கள் நலமாக இருப்பதான உணர்வை உணரத் தொடங்குங்கள் அவ்வளவே 'நான் அதிகமதிகம் நலமாகிக் கொண்டே வருகிறேன். ஒவ்வொரு நாளும் நான் கூடுதல் சுகத்தை பெற்றுக் கொண்டிருக்கிறேன்' எனக் கற்பனை செய்து கொள்ளுங்கள் என்பார்.
அவர் 'இரவில் நீங்கள் ஆழ்ந்து உறங்கும்போது தீங்கள்ஆரோக்கியமாக இருப்பதாக எண்ணிக்கொண்டே இருங்கள். ஒவ்வொரு கணமும் நீங்கள் அதிகமதிகமாய் நலமடைந்து வருவதாக எண்ணுங்கள். காலையில் எழும்போது உலகிலேயே முதல்தர ஆரோக்கியமுள்ள ஆளாக நீங்கள் இருப்பீர்கள். கற்பனை செய்துகொண்டே போங்கள், “
இப்படிக் கூறி லட்சக்கணக்கான மக்களுக்கு அவர் உதவினார். குணப்படுத்த முடியாத நோய்கள்கூட குணமாயின.
இது ஒரு அற்புதம் போலவே தோன்றுகிறது. உண்மையில் இது ஒன்றுமில்லை. இது ஒரு எளிய விதி மட்டுமே. அதாவது உங்கள் மனம் கற்பனையை பின்பற்றுகிறது.
குழந்தைகளிடம் நீ திறமை இல்லாதவன்/ள். சுறு கறுப்பில்லாதவன் / ள் '' என்று நீங்கள் சொல்லி வந்தால் அவர்கள் மந்தமானவர்கள் ஆகிறார்கள் என இப்போது உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.
பல பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு குழத்தையிடம் நீ முட்டாள் எதையும் உன்னால் செய்ய முடியாது. இந்தக் கணக்கை உன்னால் போட முடியாது'' என்று சொல்லிவிட்டு அந்தக் கணக்கை அதனிடம் கொடுத்து ''முயன்று பார்" என்று சொன்னால் அதனால் அதற்கு விடை காண முடியாது.
கதவை நீங்கள் அடைத்து விட்டிருக்கிறீர்கள்: ''
நீ புத்திசாலி, உன்னைப் போன்ற புத்திசாலிக் குழந்தையை நான் பார்த்ததே இல்லை. உன் அளவுக்கு உன் வயசுக்கு உளக்கு நிறைய அறிவு இருக்குது. உனக்குள் பல நிறமைகள் இருப்பதாக தெரிகிறது எப்பேர்ப்பட்ட கணக்கையும் உன்னால் போட்டுவிட முடியும். இப்போது இதைச் செய்துபார்'' என்று குழந்தையிடம் கூறுங்கள்; அதனால் அதைச் செய்துவிட முடியும்.
அவனுக்கு / அவளுக்கு கற்பனைச் சிறகை நீங்கள் தந்து விட்டீர்கள்
நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என நீங்கள் கருதினால், நீங்கள் அழகானவர் என நீங்கள் கற்பனை செய்து கொண்டால், ஒரு குறிப்பிட்ட அழகு உங்கள் உடலில் நிகழத் தொடங்கும்.
மேலும் ஒரு பெண்ணிடம் "நீ அழகாயிருக்கிறாய்'' என்று ஒரு ஆண் கூறும் போதெல்லாம். உடனடியாக அந்தப் பெண் மாற்றம் அடைந்து விடுகிறாள்.
அவள் அழகானவளாக இல்லாமல் இருந்திருக்கலாம் இந்தக் கணத்துக்கு முன்புவரை அவள் அழகாக இல்லாது இருந்திருக்கலாம் வெறும் சராசரியான எளிய தோற்றமுடையவளாகவே இருக்கலாம்.
ஆனால் இந்த மனிதன் அவளுக்குக் கற்பனைத் திறனை அளித்திருக்கிறான்.
எனவே காதலிக்கப்படும் ஒவ்வொரு பெண்மணியும் அதிக அழகானவளாக ஆகிறாள். காதலிக்கப்படும் ஒவ்வொரு ஆண் மகனும் அதிக அழகானவனாக ஆகிறான்.
அன்பு செய்யப்படாத ஒருவர் அழகாக இருக்கலாம்.ஆனால் அரியப்படாமல் இருக்கிறது.
இப்போது கற்பனையின் வலிமை விஞ்ஞான நிரூபனங்களாக, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளாக இருக்கின்றன.
அதாவது எத்தக் கற்பனையால் பீடிக்கப்பட்டாலும் அது ஒரு விதையாக ஆகிறது.
வெறும் கற்பனை மூலம் முழு தலைமுறைகளே மாற்றப்பட்டிருக்கின்றன; முழு கால கட்டங்களே முமு தேசங்களே மாற்றப்பட்டிருக்கின்றன.
கிறித்தவ. முகமதிய தியானங்கள் அனைத்தும் அடிப்படையில் கற்பனை மூலமாகவே அமைந்துள்ளன.
முதலில் ஒன்றை நீங்கள் கற்பனை செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. அதன்பின் அதை நீங்கள் கற்பனை செய்துகொண்டே போகிறீர்கள்.
கற்பனைக்கு வலிமை உள்ளது. அதன் மூலம் வீரனை கோழையாக்க முடியும். கோழையை வீரனாக்க முடியும்.
கற்பனையினால் அசாத்தியம்கூட சாத்தியம் ஆகும்.
No comments:
Post a Comment