Friday, 30 April 2021

ஆசை அதிகம் வைத்து, மனசை அடக்கிவைக்கலாமா?

 ஆசை அதிகம் வைத்து, மனசை  அடக்கிவைக் கலாமா?பேசாலைதாஸ் 


உணர்ச்சி என்றாலும், உரிமை என்றாலும் எதையாவது நாம் அடக்கினால் அது புரட்சியாக வெளிவரும், அல்லது அதற்கு எதிராக மனித மனம் சதா போராடிக்கொண்டே இருக்கும். இது மனிதனிடம் இருக்கும் பாலியல் உணர்ச்சிகளுக்கும் பொருந்தும், பாலியல் கவர்ச்சியினால் மனித மனம் காதல் வசப்படுகின்றது, அதுவே பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்யும் முதல் படியாகின்றது. அதனை முறைப்படி, அறஒழுக்கத்துக்குட்பட வித த்தில் அங்கீகரிக்க திருமணம் என்ற சடங்கு அவசியமாகின்றது. சில மதங்களில் துறவம் திருத்தொண்டு என்ற ரீதியில் இந்த பாலுணர்வு இடை யூறாக இருக்கும் என்பதற்காக துறவு என்ற கோணத்தில், இந்த பாலியல் உணர்ச்சிகளை அடக்குகின்றது. அதுவே பின்னர் பல விபரீதங்களுக்கு காரனமாகின்றது.

                                              தினந்தோறும் செய்திகளில் பார்க்கின்றோம், சாமி யார் பாலியல் பலாத்காரம், வன்புணர்ச்சியில்லை ஈடுபட்டதாக அறிகின் றோம், இதற்கு காரனம் அடக்கப்பட்ட பாலியல் உணர்ச்சிகளே! அதற்காக துறவறம் தவறானது என்று நான் வாதிடவரவில்லை, பாலியல் உணர்வு களை உணர்ச்சிகளை கடந்து செல்லும் பக்குவம் அவசியம் என்பதை வலியுறுத்துகின்றேன். உணர்ச்சிகளை முற்றும் முழுதாக நிராகரித்து, துறவம் மேற்கொள்வது அபத்தமானது, பாலியல் உணர்ச்சிகளை அனுபவித்தே அதை கடந்து செல்லமுடியும், இதுதான் உளவியல் வழிமுறை. எதையும் அடக்ககூடாது.

                                         ஒரு துறவி, எவ்வாறு பாலியல் உணர்ச்சிகளை அனுபவி த்தபடி, அதை கடந்து செல்வது? சிக்கலான விடயமல்லவா! அதற்குத்தான் "தந்திரா" என்ற தியான பொறிமுறையுண்டு. ஒவ்வொரு படைப்புகளும், கடவுளின் இயற்கையின் அம்சங்கள். அந்த படைப்புக்குள் ஆணும் உண்டு, பெண்ணும் உண்டு, ஆறு, கடல், குளம், வாவி மலை, மரம், மிருகம் ,மனிதன் இப்படி எல்லாவற்றிற்குள்ளும் ஆணும் பெண்ணும் கலந்திருக்கும்.

                                                       ஆணாக இருக்கும் மனிதனுக்குள் பெண் இயல்பு ஒழிந்திருக்கும், அது போலவே பெண்ணுக்குள்ளும், ஆண் இயல்புகள் மறைந்திருக்கும். துறவியான ஒருவர், தனக்குள்ளே இருக்கும், அந்த ஆண் அல்லது பெண் உணர்வுகளுடன் தனது பாலியல் உணர்ச்சிகளை அனுபவி க்கமுயலும் போது, தன்னையே அவன் தரிசிக்கின்றான், அவ்வாறு தனக் குள் இருக்கும் படைப்பின் முழுமையை அடையும் போது பேரானந்த உண ர்வை அவன் பெறுகின்றான், பின்பு பாலியல் உணர்ச்சிகள் அவனுக்கு சிற்றின்பமாக தெரியும். அதுவே முழுமையான துறவு நிலை.

                                                   இந்த துறவு மனோநிலையில் உள்ளவர்கள், ஒரு போதும், பாலியல் இச்சைகளுக்கு இடங்கொடுக்கமாட்டார்கள், துறவு நிலையை எந்தவேளையிலும் கைவிடமாட்டார்கள், நான் சொல்லும் இந்த மனோநிலையில் துறவிகள் வாழுகின்றார்களா? என்பது அவரவர்களு க்கே வெளிச்சம். எனவேதான் தத்துவவாதிகள் சொல்கின்றார்கள் "உன்னையே நீ அறிவாய்" என்று, இயேசு சொல்கின்றார் முதலில் உங் களை நீங்களே அன்பு செய்யுங்கள் என்று, அதன் சூட்சுமம் இது தான் உங்களுக்குள்ளே இருக்கும் அந்த ஆணை, பெண்ணை காதலியுங்கள்!

எனவே புலன் ஆசைகளை அடக்கலாமா ?  முக்கியமாகப் பெண் ஆசையை.  பதில் இதுதான், புலன் ஆசைகளை - முக்கியமாக பெண் ஆசையை ஒருக்காலும் அடக்கக்கூடாது .  அந்த அடக்கப்பட்ட ஆசை பிரக்ஞை மனதிலிருந்து பிரக்ஞையற்ற மனதிற்குச் சென்று ஆழமாகப் பதுங்கிவிடும்  இந்த அடக்கப்பட்ட உணர்வு , சந்தர்ப்பம் பார்த்து இருக்கும் .  சமயம் வாய்த்தால் , பாம்பு போல சீறிப்பாயும் ! அப்பொழுது அவன் தன்னிலை மறந்து ஒரு பைத்தியம்போலச் செயல்படுவான் . அல்லது மிருகம்போல செயல்படுவான் . பெரும்பாலான போலிச்சாமியார்கள் அடக்கப்பட்ட பாலுணர்வு கொண்டவர்கள்தான் !  இவர்களிடம் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் . எந்தப் புலன் உணர்வையும் அனுபவித்துத்தான் கடந்து செல்ல முடியும் .

ஒரு பெண்ணோடு உடல் உறவில் ஈடுபடும் போது, காம இச்சையின் உந்துதலில் அது இடம்பெறக்கூடாது, ஆனால் பெரும்பாலும் அது காம இச்சையின் உந்துதலில்தான் நிகழ்கின்றது. அதனால்தான் அவசரம், வேகம், படபடப்பு, பதற்றம் எல்லாம் ஒருமித்து நிகழ்வதால், அந்த உடல் உறவில் உண்மை மகிழ்வு இருப்பதில்லை. உடல் உறவு முடிந்த நிலையில், அன்பின் சல்லாபங்கள், சிலுமிசங்கள், சின்ன சின்ன சினுங்கள்கள், மெல்லிய கோபம் கலந்த ஊடல்கள் அங்கே இருப்பதில்லை, பெரும்பாலான உடல் இன்பங்கள், உடல் உறவுகள்,  நான் சொல்வது போல இருப்பதில்லை, இதனால் உண்மை அன்பு தேடி, உடல் உறவில் ஈடுபடும் உள்ளங்கள் ஏமாறுகின்றது. அங்கலாய்க்கின்றது, இன்னொரு ஆடவனை பெண்ணை நாடுகின்றது தேடுகின்றது. இதுதான் இன்றைய சமூகத்தில், குடும்பத்தில் ஏற்படும் எல்லா தகராறுகளுக்கும் காரனம்!

நான் நிறைய அவதானித்திருக்கின்றேன், ஆச்சரியப்படுகின்றேன், விழுந்து விழுந்து காதலித்த ஜோடிகளுக்கிடையில், விரிசல்கள் விவாக ரத்துக்கள், வேறு தொடர்புகளை காண்கின்றேன். நான் காதலித்து திருமணம் செய்தவனில்லை, அது எனக்கு நிகழ்வில்லையே என்ற ஏக்கம், இருந்ததுண்டு, ஆனால் காதலித்து வாழ்கை நடத்துபவர்களின் சித்திர த்தை பார்த்தால், என் போன்றவர்களின் திருமணவாழ்வு அறிவுபூர்வமா னதாக, அன்பு வழியாக தெரிகின்றது, அங்கே காதல் இயற்றப்டுகின்றது. அதனால்தான் சொல்கின்றேன், முதலில் உங்களை காதலியுங்கள், பின்னர் நீங்கள் காதலிக்கும், காதலிக்குள் இருக்கும் ஆன்மாவோடு களவி சுகம் காணும் முயற்சியில் இறங்குங்கள், முதலில் காமம் தான் வாசல் திறக்கும், அந்த வாசாலில் நின்றுவிடாதீர்கள், உள்ளே செல்லுங்கள், அன்பின் வயப்பட்டு, இரண்டறக்கலந்து இன்பம் கொள்வீர், இறையுணர்வு மெல்ல மலரும்! ஆதலில் காதல் செய்வீர், அடக்கியாளும் ராஜபக்சாக்கள் போல அன்பின் ராம்ராச்சியத்தில் வாழத்தேவை இல்லை.  அன்புடன் பேசாலைதாஸ்

 

No comments:

Post a Comment