ஆசை அதிகம் வைத்து, மனசை அடக்கிவைக் கலாமா?பேசாலைதாஸ்
உணர்ச்சி என்றாலும், உரிமை என்றாலும் எதையாவது நாம் அடக்கினால் அது புரட்சியாக வெளிவரும், அல்லது அதற்கு எதிராக மனித மனம் சதா போராடிக்கொண்டே இருக்கும். இது மனிதனிடம் இருக்கும் பாலியல் உணர்ச்சிகளுக்கும் பொருந்தும், பாலியல் கவர்ச்சியினால் மனித மனம் காதல் வசப்படுகின்றது, அதுவே பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்யும் முதல் படியாகின்றது. அதனை முறைப்படி, அறஒழுக்கத்துக்குட்பட வித த்தில் அங்கீகரிக்க திருமணம் என்ற சடங்கு அவசியமாகின்றது. சில மதங்களில் துறவம் திருத்தொண்டு என்ற ரீதியில் இந்த பாலுணர்வு இடை யூறாக இருக்கும் என்பதற்காக துறவு என்ற கோணத்தில், இந்த பாலியல் உணர்ச்சிகளை அடக்குகின்றது. அதுவே பின்னர் பல விபரீதங்களுக்கு காரனமாகின்றது.
தினந்தோறும் செய்திகளில் பார்க்கின்றோம், சாமி யார் பாலியல் பலாத்காரம், வன்புணர்ச்சியில்லை ஈடுபட்டதாக அறிகின் றோம், இதற்கு காரனம் அடக்கப்பட்ட பாலியல் உணர்ச்சிகளே! அதற்காக துறவறம் தவறானது என்று நான் வாதிடவரவில்லை, பாலியல் உணர்வு களை உணர்ச்சிகளை கடந்து செல்லும் பக்குவம் அவசியம் என்பதை வலியுறுத்துகின்றேன். உணர்ச்சிகளை முற்றும் முழுதாக நிராகரித்து, துறவம் மேற்கொள்வது அபத்தமானது, பாலியல் உணர்ச்சிகளை அனுபவித்தே அதை கடந்து செல்லமுடியும், இதுதான் உளவியல் வழிமுறை. எதையும் அடக்ககூடாது.
ஒரு துறவி, எவ்வாறு பாலியல் உணர்ச்சிகளை அனுபவி த்தபடி, அதை கடந்து செல்வது? சிக்கலான விடயமல்லவா! அதற்குத்தான் "தந்திரா" என்ற தியான பொறிமுறையுண்டு. ஒவ்வொரு படைப்புகளும், கடவுளின் இயற்கையின் அம்சங்கள். அந்த படைப்புக்குள் ஆணும் உண்டு, பெண்ணும் உண்டு, ஆறு, கடல், குளம், வாவி மலை, மரம், மிருகம் ,மனிதன் இப்படி எல்லாவற்றிற்குள்ளும் ஆணும் பெண்ணும் கலந்திருக்கும்.
ஆணாக இருக்கும் மனிதனுக்குள் பெண் இயல்பு ஒழிந்திருக்கும், அது போலவே பெண்ணுக்குள்ளும், ஆண் இயல்புகள் மறைந்திருக்கும். துறவியான ஒருவர், தனக்குள்ளே இருக்கும், அந்த ஆண் அல்லது பெண் உணர்வுகளுடன் தனது பாலியல் உணர்ச்சிகளை அனுபவி க்கமுயலும் போது, தன்னையே அவன் தரிசிக்கின்றான், அவ்வாறு தனக் குள் இருக்கும் படைப்பின் முழுமையை அடையும் போது பேரானந்த உண ர்வை அவன் பெறுகின்றான், பின்பு பாலியல் உணர்ச்சிகள் அவனுக்கு சிற்றின்பமாக தெரியும். அதுவே முழுமையான துறவு நிலை.
இந்த துறவு மனோநிலையில் உள்ளவர்கள், ஒரு போதும், பாலியல் இச்சைகளுக்கு இடங்கொடுக்கமாட்டார்கள், துறவு நிலையை எந்தவேளையிலும் கைவிடமாட்டார்கள், நான் சொல்லும் இந்த மனோநிலையில் துறவிகள் வாழுகின்றார்களா? என்பது அவரவர்களு க்கே வெளிச்சம். எனவேதான் தத்துவவாதிகள் சொல்கின்றார்கள் "உன்னையே நீ அறிவாய்" என்று, இயேசு சொல்கின்றார் முதலில் உங் களை நீங்களே அன்பு செய்யுங்கள் என்று, அதன் சூட்சுமம் இது தான் உங்களுக்குள்ளே இருக்கும் அந்த ஆணை, பெண்ணை காதலியுங்கள்!

No comments:
Post a Comment