Monday, 19 April 2021

நின்னை சரணடைந்தேன்

 மனதிடம் ஒரு விஷமம் இருக்கிறது

நீங்கள் கோபமடைந்தால் 

அந்த நிமிடமே கோபமடைவீர்கள் 

ஆனால் நீங்கள் சரணடைய வேண்டும் போல் உணரும்போது 

நீங்கள் அதைப்பற்றி யோசிப்பீர்கள் 

நீங்கள் அதைப்பற்றி திட்டம் தீட்டுவீர்கள் 

நீங்கள் காத்திருப்பீர்கள் 

மனம் எப்போதும் ஏதோ ஒரு வினாடியில்தான் எல்லையில் இருக்கும்

அதனால் உடனடியாக தெய்வத்திடமோ, எதனிடமோ சரணடைந்துவிடுங்கள்  

அது ஒரு மரமாகக்கூட இருக்கலாம் 

ஏனெனில் 

உண்மையானது நீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பதில்லை 

உண்மையானது, உங்கள் சரணடைதல் தான்

ஒரு மரத்திடம் சரணடைந்தால் 

மரம் உங்களுக்கு ஆசானாகிவிடும்  

வேதநூல்களால் வெளிப்படுத்தமுடியாத பல விஷயங்களைப்பற்றி அந்த மரம் உங்களுக்கு வெளிப்படுத்தும்

ஒரு கல்லிடம் சரணடைந்தால் 

கல் கடவுளாகிவிடும்

கடவுள் வெளிப்படுத்தாத பல விஷயங்களை அந்த கல் வெளிப்படுத்தும்

உண்மையானது சரணடைதல் தான் 

எப்போதெல்லாம் சரணடைதல் இருக்கிறதோ 

அப்போதெல்லாம் ஒருவர் தோன்றி உங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வார்

தீக்ஷை வழங்குதல் என்றால் இது தான்

No comments:

Post a Comment