Friday, 30 April 2021

தியானத்திற்கு பெண் இன்பம் ( Sex ) தடையாகவே இருக்கும்

தியானத்திற்கு பெண் இன்பம் பேசாலைதாஸ்

தியானத்திற்கு பெண்

இன்பம் ( Sex ) தடையாகவே இருக்கும் என்று கூறும் பௌத்தத்திலிருந்து 

தந்திரா எப்படி வளர முடியும்....???

*#ஓஷோ_பதில்* : " புத்தர் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது

அவர் குறிப்பிட்டது என்னவென்றால் ,

ஒருவன் தியானத்திற்குள் ஆழமாகச் சென்றால்

அவன் பெண் இன்பத்தைக் கடந்து விடுவான் என்பதுதான் .

ஆனால் மக்கள் அதைப் புரிந்துகொள்ளாமலே கடந்து செல்வதற்குப் பதிலாக 

அதனோடு சண்டைபோட ஆரம்பித்து விட்டார்கள் 

நீங்கள் அதைப் புரிந்துகொள்ள அதை நட்புடன் அணுக வேண்டும் 

அதனுடன் சற்று இணைந்து செல்லவேண்டும் 

பௌத்தம் , இந்த உலகத்தில் உள்ள மிகச்சிறந்த ஆன்மீகத் தன்மையுள்ள மதங்களில் ஒன்றாகும் 

இப்படி மக்கள் பாலுணர்வைத் தவறாகப் புரிந்துகொண்டு 

அதற்கு எதிராகச் சென்றாலும் அதனுடன் சண்டை போட்டாலும் 

அது உங்களை எதிர்க்க ஆரம்பிக்கும் 

அது உங்களை முழுமையாக ஆக்கிரமிக்க முனையும் 

இந்த மிகவும் வலுவான சக்திமிக்க பாலுணர்வை அடக்கி யாரும் வென்றதாகச் சரித்திரம் இல்லை 

உங்களுடைய சந்நியாசிகள் உடலுறவைப்பற்றி மிக அதிகமாகவே கனவு காண்பவர்கள் 

பகலில் அதை மறுப்பதுபோல வேடம் போடுவார்கள் 

ஆனால் இரவில் பல பெண்களுடன் கனவுலகில் இருப்பார்கள்....!!!

அது இப்பொழுது அவர்களது மன ஆழத்திலிருந்து வருகிறது 

பகலில் பிரக்ஞையாக அதை அவர்கள் அடக்கி வைத்திருக்கலாம் 

ஆனால் இரவில் தூங்கும்பொழுது பிரக்ஞை நிலை மறைய கனவு நிலை மேலே வருகிறது 

ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் 

அடக்கப்பட்டவை அனைத்தும் மிக ஆழமாக அங்கேயேதான் இருக்கும் 

அதிலிருந்து உங்களால் விடுபட முடியாது 

ஆனால் வெளியிடப்பட்டவை அனைத்தும் மெல்ல மறைந்துபோகும் 

புத்த சந்நியாசிகளுள் , பெண் சந்நியாசிகளும் இருந்திருக்கிறார்கள் 

எல்லோருமே பாலுணர்வைப் புரிந்து வைத்திருந்தார்கள் 

கடந்து சென்றிருக்கிறார்கள் 

பாலுணர்வு இன்பம் ,  அதைப் புரிந்துகொண்டால் 

அதைத் தியானத்திற்கு ஒரு ஏணியாக மாற்றிக்கொள்ளலாம் 

பெண் இன்பம் என்பது தியானத்தில் கீழான படிகள், அவ்வளவுதான் 

அதையே தந்திரா மூலம் மேலான நிலைக்குக் கொண்டு செல்லலாம் 

தேவை , மிகுந்த விழிப்புணர்வு   

No comments:

Post a Comment