ஒரு இத்தாலியனின் மனைவி இறந்து விட்டாள்..
புதைப்பதற்காக சவப்பெட்டியை ஒரு வேனில் எடுத்துச் சென்றார்கள்..
வழியில் வேன் ஒரு பெரிய கம்பத்தில் பயங்கரமாக இடித்து விட்டது.
உடனே சவப்பெட்டி உள்ளே இருந்து ஒரு அலறல் கேட்டது.
அவசர அவசரமாக பெட்டியை கழற்றி திறந்து பார்த்ததில்
அவன் மனைவி உள்ளே உயிருடன் இருப்பது தெரிந்தது.
பின்னர் அவள் மூன்று வருடங்கள் உயிருடன் வாழ்ந்தாள்..
ஒரு நாள் மீண்டும் செத்துப் போனாள்.
இந்த முறையும் சவப்பெட்டி..
அதே பாதை..அதே வேன்..
இத்தாலிய கணவன் வண்டி ஓட்டும் டிரைவரைப் பார்த்து
"அந்த கம்பத்து கிட்ட மாத்திரம் கொஞ்சம் ஜாக்கிரதையாப்
பார்த்து ஓட்டுப்பா
இடிச்சிடபோகுது"😏😏😏😏 என்றான்.!!!.
No comments:
Post a Comment