உலகில் ஜைன மதத்தினர் அதிக அளவில் இல்லை.
சுமார் 3.5 கோடி பேர் தான் இருப்பார்கள்.
அவர்களும் இந்தியாவில் மட்டுமே வசிப்பவர்கள்.
ஒரு ஜைனன் கேட்கும் கேள்வியை உலகில் வேறு எவரும் கேட்க முடியாது.
அவர்கள் கேட்கும் கேள்வி உண்மையாக இருந்தால் இயற்கையாக இருந்தால் அது எல்லா மதத்தினர் மத்தியிலும் எழும்.
அவனுக்கு வினோதமான கேள்வியைத் தருவது அவனது மதப்புத்தகங்கள்.
எடுத்துக்காட்டாக ''நிகோட்'' என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.
ஜைன மதத்தின் உண்மையான கேள்வி ''நிகோட்'' என்றால் என்ன என்பது.
ஜைனன் தான் அந்த கேள்வியை கேட்பான்.
''நிகோட்'' என்றால் என்ன?
பொதுவாக ஜைனர்கள் கடவுளை நம்புவதில்லை.
நீங்கள் கேட்பீர்கள்.. ''இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது?..
மக்கள் எப்படி உருவாகிறார்கள்?'' என.
கடவுளுக்கு மாற்றாக ஜைனர்கள் உருவாக்கியது தான் ''நிகோட்''.
ஜைனர்கள் அறிவியல் ரீதியான பதிலை சொல்வார்கள்..
பிரபஞ்சம் எப்போதும் இங்கே தான் இருக்கிறது என.
ஆனால் மக்கள் எப்படி உருவாகிறார்கள்..?
மக்கள் தொகை பெருகிக் கொண்டே போகிறது..
இந்த மக்களை யாரும் உருவாக்கவில்லையாயின்..
அவர்கள் எங்கே இருந்து வருகிறார்கள்?
போன்ற கேள்விகள் வருமல்லவா
அதை எதிர்கொள்ள தான் ''நிகோட்'' எனும் சொல்லாடலை பயன்படுத்துகிறார்கள்.
மகாவீரரின் காலத்தில் இந்தியாவில் வெறும் இரண்டு கோடி மக்கள் தான் வாழ்ந்துவந்தார்கள்.
ஆனால் இன்றோ நூறு கோடியை இந்தியா தாண்டிவிட்டது.
புதிதாக உருவாகும் மக்கள் எங்கிருந்து வருகிறார்கள்?.
இத்தனை நாள் எங்கே ஒளிந்திருந்தார்கள்?.
இவர்களின் பிறப்பு இறப்பு செயல்பாட்டை கண்காணிப்பவர் யார்?.
எப்போது அவர்கள் பிறக்க வேண்டும்?.
எப்போது அவர்கள் பிறக்கக் கூடாது?.
போன்ற கேள்விகள் எழுமல்லவா?
அதனால் ஜைனர்கள் அதற்கென்று ஒரு சித்தாந்தத்தை உருவாக்க வேண்டி வந்தது.
அதற்கு ''நிகோட்'' எனப் பெயர் வைத்தார்கள்.
நிகோட் என்பது மனித ஆத்மாக்கள் உறக்க நிலையில் வானில் இருப்பவை.
பலகோடி ஆத்மாக்கள் காலமற்ற நிலையில் தன் பிறப்பிற்காக உறக்கத்தில் காத்திருக்கின்றன.
இந்த உறங்கும் ஆத்மாக்களில் சில விழிப்புணர்வு பெற்று பிறப்பெடுக்கின்றன.
உறக்க நிலையிலுள்ள பல ஆத்மாக்களின் சங்கமத்தைத் தான் ''நிகோட்'' என ஜைனர்கள் சொல்கிறார்கள்.
கடவுளுக்கெதிராக அவர்கள் உருவாக்கிய நிகோட் சித்தாந்தமும் கேள்விக்குறியது தான்.
எல்லா ஆத்மாக்களும் விழித்துக் கொண்டால் நிகோட் காலியாகும் அல்லவா?.
தேனீக்கள் தேன் கூட்டை காலி செய்வதைப் போல ஒரு நாள் மாறுமல்லவா?.
அன்று கருத்தடையே தேவையில்லாமல் போகும்.
திருமணமானாலும் குழந்தைபிறக்காது.
ஏனெனில் நிகோட் காலியாகிவிட்டதே.
சில ஜைன குருமார்களிடம் இது குறித்து நான் கேட்டேன்.
எல்லா ஆத்மாக்களும் விழிப்புற்று நிகோட் காலியானால் புதிய பிறப்பு ஏற்படாதா? என.
அவர்களிடம் அதற்கான சரியான பதிலில்லை.
அவர்கள் '' முடிவற்ற நிலையிலான ஆத்மாக்கள் எப்போதும் உறங்கிக் கொண்டிருப்பதாக எங்கள் வேதப்புத்தகங்கள் சொல்கின்றன'' என சொல்கிறார்கள்.
எண்ணிக்கை என்றாலே எண்ணப்பட்டிருக்க வேண்டும்.
அப்படி எண்ணப்பட்டிருந்தால் அவை முடிவற்றவையாக இருக்க முடியாது.
எண்ணப்படவில்லை என்றாலும் முடிவற்றவை என்று சொல்ல முடியாது.
''நிகோட்'' என்றால் என்ன என இந்த உலகம் கேட்கப் போவதில்லை.
இந்த கேள்வி எப்போதும் புத்தகரீதியான கேள்வியாகவே இருக்கப்போகிறது.
No comments:
Post a Comment