Monday, 12 April 2021

மனமே நீ சாட்சி! பேசாலைதாஸ்

 மனமே நீ சாட்சி! பேசாலைதாஸ்


"அங்கிள் எப்படி சுகம்" என்று சுகன்யா என் கண் களை பார்த்து கேட்டபோது, என் மனம் குறுகி, நாணத்தால் நெளிந்தது, முக நூலில் அவள் வனப்பான அழகு கண்டு, என் மனம் தவித்த அந்த கணங்கள் சட்டெ ன்று வந்து போனது. ஏன் எனக்கு மட்டும் இப்படி கெட்ட எண்ணங்கள் வருகிறது, என நான் என்னையே நொந்து கொண்ட சந்த ர்ப்பங்கள் நிறையவே உண்டு. மேகங்கள் என்னை உரசிப்போனது ண்டு. சில மின் னல்கள் என்னை தாக்கிப் போன துண்டு. அப்பொழு தெல்லாம்  ஏன் கெட்ட எண்ண ங்கள் எனக்கு வருகின்றது என என் மனம் கேள்வி கேட் டதுண்டு. உங்களுக்கும் அந்த உள்ளுணர்வுகள் வந்திருக்கக்கூடும், அந்த நேரங்களில்  நம் மீது நாம் வெறுப்பு கொள்ளக்கூடாது என்பதில் மட் டும் நான் திடமாக இருந்தேன்...

                                           எண்ணங்கள் நமக்கு சொந்தமானது அல்ல....! அவை நமது படைப்புகள் அல்ல...! அவை நாம் பிறப்பதற்கு முன்பே இந்த பிரபஞ்சத்தில் மேகங்கள் போல் உலவிக் கொண்டி ருப்பவை....இப்போது அவை மனித மனதின் வழியாகவும் வந்து செல்கிறது... அவ்வளவுதான்...! எண்ணங்கள் எப்படி வந்ததோ, அப்படியே சென்றுவிடும். அது நல்ல எண்ணமா கெட்ட எண்ணமா என்ற பிரதிவாதங்கள் தேவையற்ற ஒன்று. அதில் நிலைத்து நிற் கவேண்டிய அவசிய மில்லை. 

                                       அழகுப்பெண் ஒருத்தி குணிந்து மலர் பறிக்கி ன்றாள். மாரப்பு கொஞ்சம் கீழே சரிகிறது. சட்டென்று அந்த வதன மார்புகள் ஒரு ஆடவன் கண்களில் படுகின்றது. தன் காதலியின் அழகு மார்பு அதில் அவனுக்கு பளிச்சிடுகின்றது. இன்னொ ருவனுக்கு தாயின் பாலுண்ட கொங்கை சட்டென்று நினைவுக்கு வருகின்றது.இந்த எண்ணப்பிரதிபலிப்பில் நல்லது எது கெட்டது எது என்று பகுத்தறியும் நுண்ணாற்றல் பக்குவம் நமக்கில்லை. பிறகு எதற்கு எண்ணங்களை பிரித்தாயும் விசப்பரீட்சை? வந்த எண்ணங்களுக்கு நமது மனதில் நிலக்க இடம் கொடுத்தால் விபரீதமாகிவிடும்!

                                                             எண்ணத்தை நல்லது கெட்டது என பிரித்து பார்க்க வேண்டாம்...தீர்மானம் வேண்டாம்...உபசரிக்க வேண்டாம்.....அவற்றை உதாசீனப்ப டுத்து...தலையிடாதே. அவ ற்றை சாட்சியாக இருந்து பார். சற்று நேரம் கழித்து அவை வந்தது போலவே சென்றுவிடும். உபசரித்தால் தங்கிவிடும். பிறகு அவை உன்னை ஆதிக்கம் செலுத்தும். வெறுத்தாலும் அதனுடன் சண்டை யிட்டாலும் அவை உன் கவனத்தை உணவாகக் கொண்டு  வளர் ந்து அவை உன்னை அழிக்கும்...!!

நீ மனம் அல்ல...!!! அதை "வெறுமனே" கவனிக்கும் கண்ணாடி.  நீ "சாட்சி". அன்புடன் பேசாலைதாஸ் 

No comments:

Post a Comment