அந்த இரண்டு சுவாசமும் ஒன்றாகும்போது. ❤
.
நீங்கள் நேசிக்கும் தருணத்தை அதிகமாக கவனியுங்கள். எச்சரிக்கையாக இருங்கள்.
உங்கள் சுவாசம் எப்படி மாறுகிறது என்பதை கவனியுங்கள்
. உங்கள் உடல் எப்படி அதிர்கிறது என்பதை பாருங்கள்.
உங்கள் பெண் அல்லது உங்கள் ஆணை அணைத்தபடி .அதை ஒரு சோதனையாக செய்யுங்கள், நீங்கள் வியந்து போவீர்கள். ஒருநாள், அப்படி அணைத்தபடியே, ஒருவருக்குள் ஒருவர் உருகி, ஒருமணிநேரம் உட்கார்ந்திருந்தால், நீங்கள் வியந்து போவீர்கள்; அது ஒரு வண்ண ஒளிமயமான அனுபவமாயிருக்கும்.
.
ஒருமணிநேரம், எதுவுமே செய்யாமல், இருவருமே அணைத்தபடி, ஒருவருக்குள் ஒருவர் விழுந்து, இணைந்து, ஒருவருக்குள் ஒருவர் உருகி, மெதுவாக ஒரு சுவாசம் வரும்.
ஈருடல் ஒரு இதயம் போல் நீங்கள் சுவாசிப்பீர்கள். நீங்கள் சேர்ந்தே சுவாசிப்பீர்கள்.
நீங்கள் ஒன்றா கசுவாசிக்கும்போது – அது உங்களின் எந்த முயற்சியினாலும் அல்ல, நீங்கள் அத்தனை நேசிப்பதாக உணர்கிறீர்கள் சுவாசம் தொடர்கிறது அதுதான் சிறந்த தருணங்கள்,
மிகஉயர்ந்தது, அது உலகத்தினுடையதல்ல.
ஆனால் அதையெல்லாம் தாண்டி ``தொலைதூரம்’’ சார்ந்தது.
.
அந்த தருணத்தில் தியானசக்தியின் முதல் கணநேரக்காட்சி உங்களுக்கு கிடைக்கும்.
அந்தநேரத்தில் இலக்கணம் இழந்துவிடும் மொழிசெத்துவிடும். அதைசொல்லப்போனால், மொழி மறைந்துவிடும்,
அந்த ஆழமான கணங்களை என்னவென்று சொல்லமுடியாது.
No comments:
Post a Comment