மறுபிறவி எப்படி எப்பொழுது ஏற்படுகிறது...உருவ வழிபாடு மறையாதா?... பாவ புண்ணியம் சொர்க்கம் நரகம் உண்டா? பேய் உண்டா?
கேள்விகளுக்கு செல்லும் முன் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நீங்கள் எவ்வளவுதான் சுய சிந்தனையாளனாக மிகுந்த பகுத்தறிவுவாதியாக இருந்தாலும் ஞானம் அடைந்தவராக இருந்தாலும் இயற்கை சில விசயங்களை மிகவும் ரகசியமாகவே வைத்திருக்கிறது!
இந்த உலகம் அழியும் வரையில்
அறிந்தது Known
அறியக்கூடியது Knowable
அறியவே முடியாதது Unknowable
என்ற மூன்று விசய ஞானங்கள் இருந்தே தீரும்.
இதில் நீங்கள் கேட்ட கேள்விகள் மூன்றாம் ரகத்தை சேர்ந்தது.
இவையெல்லாம் தர்க்கத்திற்கும் விவாதத்திற்கும் அப்பாற்பட்டது. மனம் என்றாலே தர்க்கம்தான் தத்துவம் தான்.
புத்தர் ஒரு அறிவிப்பை எங்கு சென்றாலும் வெளியிடுவார். யாரும் தன்னிடம் இந்த பத்து கேள்விகளை கேட்க கூடாது என்று. அதில் நீங்கள் கேட்க கேள்வியும் அடக்கம். ஏனெனில் இந்த கேள்விகளுக்கு தர்க்க ரீதியாக பதில் அளிக்க முடியாது.
ஆகவே இந்த கேள்விகளை எண்ணி வீணாக மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்ளாமல் தியானத்தில் ஈடுபடுங்கள்.
இவையெல்லாம் இயற்கையின் ரகசியங்கள். அவைகளை இயற்கை பார்த்துக் கொள்ளும்.
நீங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தாமல் அதன் போக்கில் வாழுங்கள். பற்றற்று அனுபவியுங்கள். ஆனந்தமாக இருங்கள்.
வாழ்க்கையின் ரகசியங்களை அறிந்து கொண்டு என்ன செய்ய போகிறீர்கள்?
எனக்கு எல்லாம் தெரியும் என அகங்காரமாக கூறுவதற்கா? இந்த கேள்விகளுக்கு பதில் தெரியும் என மற்றவர்களுடம் கூறி பெருமை படுவதற்கா?
ஏன்? எப்படி? என்ற கேள்விகளை உங்களிடம் இருந்து ஒருகட்டத்தில் முடித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அமைதி! அமைதி! அமைதிதான். தியானம் தான்!
இதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment