விவேகானந்தர் அமெரிக்காவின் ஒரு நகரத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அவர் பைபிளில் கூறப்பட்டுள்ள ஒரு கருத்தை, அதாவது நம்பிக்கை ஒரு மலையைக்கூட அசைத்து விடும் என்கிற இயேசுவின் வாக்கியத்தை மேற்கோள் காட்டியிருந்தார்.
அப்போது அங்கு முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு வயதான பெண்மணி மிகவும் சந்தோஷப்பட்டாள்
. ஏனென்றால் அவளுக்கு அவள் வீட்டின் அருகில் இருந்த ஒரு சிறு குன்று இடையூறாக இருந்தது.
எனவே அவள் தனக்குள், "நம்பிக்கை என்பது மலையையே நகர்த்திவிடும் என்கிற போது இந்த சிறு குன்று எம்மாத்திரம்?" என்று நினைத்தாள்.
அவள் வீட்டிற்கு ஓடினாள். அவள் ஜன்னல் வழியாகப் பார்த்தாள்.
கடைசி முறையாக அந்தக் குன்றினைப் பார்த்தாள். ஏனெனில் இப்போது அந்தக் குன்று மறைந்துவிடப் போகிறது.
அதன் பிறகு அவள் ஜன்னலை மூடிவிட்டு
"கடவுளே, நான் உன்னை நம்புகிறேன். இங்கிருந்து இந்தக் குன்றினை அகற்றி விடும்." என்று மூன்று முறை கூறினாள்.
மூன்று முறை கூறிய பின்னர் அந்தக் குன்று இன்னும் அங்கு உள்ளதா என்று பார்ப்பதற்கு ஜன்னலைத் திறந்து பார்த்தாள்.
ஆனால் அந்தக் குன்று அப்படியே இருந்தது.
எனவே அவள், "எதுவும் அசையாது என்று முன்பே எனக்குத் தெரியும். இது முட்டாள்தனமானது என்பதை நான் ஏற்கனவே அறிவேன்"என்று கூறினாள்.
எனவே நீ ஏற்கனவே இது ஒரு முட்டாள்தனம் என்று அறிந்திருந்தால், அதன் பிறகு நம்பிக்கை என்பது எதையும் நகர்த்தாது.
அதன் பின்னர் எதுவானாலும் அது மலைதான்.
ஏனெனில் அந்த மலை நகர்ந்துவிடும் என்று நீ அறிவதுதான் நம்பிக்கை என்பதன் அர்த்தம்.
No comments:
Post a Comment