எது சமூக சேவை? பேசாலைதாஸ்
' தாஸ் ' அன்றிரவு ஒரு விலைமாது வீட்டில் தங்கியிருந்து விட்டு விடியற்காலையில் தனது வீட்டிற்கு வந்து தனது மனைவியின் அருகில் நல்ல ஒரு கணவன் போல் படுத்துக் கொண்டான். உடனே, விழித்துக் கொண்ட அவனது மனைவி, தனது கணவனை ஆசையாக அணைத்துக் கொண்டு,' ஆபீஸ் வேலை முடிந்து விட்டதா ? எப்போது வந்து படுத்தீர்கள் ? என்று அக்கறையுடன் கேட்டாள்.' நான் வந்து படுத்து இரண்டு மணி நேரம் ஆகிறது. நீ நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாய் ' என்று பொய் சொல்லி சமாளித்தான். 5 நிமிடங்கள் சென்றதும், மனைவி ஆச்சர்யத்துடன் கேட்டாள்,
' எங்கே உங்கள் ஜட்டியை காணோம் ? ' என்றாள்.
அவன் முன்பு சொன்ன பொய் வார்த்தைக்கு
மனைவியின் இந்த கேள்வியை சுலபமாக சமாளித்திருக்கலாம்.
ஆனால்,
அவளது திடீர் கேள்வியில்
திடுக்கிட்டவன்,
அதை சமாளிக்கத் தெரியாதவனாய்,
' ஆபிஸில் கழட்டி வைத்து விட்டு,
வரும்போது
மறந்து போய் வந்து விட்டேன். ' என்றான்
பரிதாபமாக. "
சமூக சேவை பற்றி உங்களது கருத்து என்ன ?
" இன்றைய நாட்டின் நிலமைக்கு,
தேவையான ஒன்றுதான்.
அந்த செயல்,
தேவையானது.
ஆனால்
அந்த வார்த்தை ,
ஒரு விளம்பர யுக்தி.
உங்களால் இயன்ற உதவியை,
அது தேவையானவர்களுக்கு
செய்கிறீர்கள்.
உங்களது வசதியை பொருத்து
இது ஒரு நாள் நிகழ்வாக இருக்கலாம்,
அல்லது
தொடர் நிகழ்வாகவும்
இருக்கலாம்.
நீங்கள் அந்த உன்னதமான செயலை,
இந்த வார்த்தை மூலமாக
விளம்பர படுத்திக் கொள்கிறீர்கள்.
' சமூக சேவை ' என்பது
அந்த நல்ல செயல்களை
மிக படுத்திக் காட்டுகிற
ஒரு விளம்பர வார்த்தையாகத்தான்
நான் பார்க்கிறேன்.
இந்த சேவையில்,
யாருடைய நிலையும் மாறப்போவதில்லை.
கொடுப்பவர்,
பெறுபவர் இருவருக்குமே
விழிப்புணர்வு என்பது
வளராது.
சில சமூக சேவை என்ற கூடாரங்களில் நான் பார்த்திருக்கிறேன்.
காலம் முழுவதும்
அவர் அவராகவே இருந்து
கையேந்த வேண்டும்.
இவர் இவராகவே இருந்து
சமூக சேவகர் என்ற பெயரை காத்துக் கொள்ள வேண்டும்.
பசித்தவனுக்கு ஒரு வேளை
உணவளித்து விட்டு,
சென்று விடுகிறீர்கள்.
அவனது அடுத்த வேளை உணவை பற்றி,
எவரும் சிந்திப்பதில்லை.
பசித்தவனுக்கு
தனது உணவை
அவனே தயாரித்து கொள்வதை பற்றியும்,
அந்த வறுமையான சூழலில் இருந்து அவன் விடுதலை
அடைவதை பற்றிய விழிப்புணர்வையும்
அவனுக்கு எந்த
சமூக சேவகரும் ஏற்படுத்துவதில்லை.
அப்படி ஒரு விழிப்புணர்வை அவனுக்கு ஏற்படுத்தினால்,
அதுதான் உண்மையான சமூக சேவை.
ஆனால்,
கையேந்துபவனின் நிலை எப்போதுமே
விழிப்புணர்வு இல்லாத பரிதாபகரமான
நிலை தான்.

No comments:
Post a Comment