கிட்டாதாயின் வெட்டென மற. பேசாலைதாஸ்
ஞானி கிடைக்க சிரமமானதற்கு மதிப்பு தருவதில்லை.
சுலபமாக எது கிடைக்குமோ
அதை மதிக்கிறார் .
கிடைக்க சிரமமானதற்கு நீ மதிப்பு தருகிறாய் .
எந்த அளவுக்கு சிரமமோ அந்த அளவுக்கு மதிப்பு அதிகம் என்கிறாய்.
கோகினூர் வைரத்தின் மதிப்பு அதனுடைய மதிப்பு அல்ல.
கிடைக்க சிரமமானது என்பதற்கு தந்திருக்கும் மதிப்பு தான் அது.
ஒவ்வொரு வீதியிலும் கோகினூர் வைரங்கள் சிதறி கிடக்குமானால் யாரும் அவற்றை பற்றி கவலைப்பட போவதில்லை.
யார் அதை பற்றி நினைத்தாவது பார்க்கப் போகிறார்கள் .
அதனால் கிடைப்பது சிரமம் அது அரிது என்பதால் அந்த ஒரே காரணத்துக்காக மதிப்பு தந்து வைத்திருக்கிறார்கள் ?
அதை என்ன சாப்பிட முடியுமா
அல்லது குடித்து விடத்தான் முடியுமா?
மனிதர்கள் யாருமே இல்லாமல் போய்விட நீ மட்டும் தனியாக இந்த உலகத்தில் இருக்க நேர்ந்தது என்றால் .
அப்போது உன்னிடம் கோவினூர் வைரம் இருக்கிறது என்றால் .
என்ன செய்வாய்?
வீசி எரிந்து விட்டு போய்விடுவாய் .
எதற்காக அதை சுமந்து கொண்டு திரிய வேண்டும்.
கிட்டாதாயின் வெட்டென மற.

No comments:
Post a Comment