நீங்கள் ஒரு சோதனை செய்து பாருங்கள்
மற்றொரு கையை ஐஸ்கட்டியின் மீது வையுங்கள்
சில நிமிடங்களுக்கு பிறகு உங்கள் இரு கைகளையும் ஒரே நேரத்தில் தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தினுள் நுழையுங்கள்
உங்களால் அந்த பாத்திரத்தில் இருப்பது சுடு நீரா....??? குளிர் நீரா..???
என உடனடியாக கண்டுபிடிக்க முடியாது
அதே போல தான் கிருஷ்ணனின் விஷயத்திலும் நடைபெருகிறது
நீங்கள்ல அவனை புரிந்து கொள்ளாமல் போவதற்கு
நீங்கள் தான் காரணமே தவிர கிருஷ்ணனல்ல
அவனை முழுதாக காதலித்த ராதையிடம் கேளுங்கள்
அவள் வேறொரு கண்ணோட்டத்தில் பார்ப்பாள்
ராதையுடன் நடனமாடும்போது அவன் பூரணமாக ஆடுவான்
அப்போது ராதை அவனை முழுமுதல் கடவுள் என்று கூட சொல்லுவாள்
அவனுடன் நடனமாடும் எல்லா கோபிகைகளும் அப்படி தான் சொல்வார்கள்
அவனை தன் எலும்பு குருத்திற்குள் உணர்வார்கள்
அதுவே அவன் மற்ற பெண்களுடன் நடனமாடும்போது அவனை பேய் என்பார்கள்
அர்ஜுனனும் பாண்டவர்களும் கிருஷ்ணனை கடவுளாக உடனடியாக ஏற்றுக் கொள்வார்கள்
ஆனால் கௌரவர்கள் அவனை சாத்தான் என்பார்கள்
ஏனெனில் அவர்கள் அழிவிற்கு காரணம் அவன் தானே
ஆனால் புத்தர் விஷயத்தில் நிலைமை வேறானது
கிருஷ்ணனைப் போல புத்தருக்கு ஆயிரம் விளக்கங்கள் இருக்க முடியாது
தன் சொந்த பந்தங்களிலிருந்து முழுமையாக புத்தர் தம்மை விடுவித்துக் கொண்டவர்
அதனால் புத்தரை எந்த பக்கத்திலிருந்து சுவைத்தாலும் ஒரே சுவை தான்
அவர் ஒரு சமநிலம் போன்றவர்
அதனால் புத்தர் நிலையானவராக தெரிகிறார்
கிருஷ்ணன் உங்களுடைய எல்லா கருத்துகளையும் மதிப்பீடுகளையும் பொய்யாக்கிவிடுகிறான்
உங்கள் கருத்துகளை அவன் பொய்யாக்கிவிடுவதால் தான் அவனை பூரணமானவன் எனச் சொல்கிறோம்
கிருஷ்ணனைக் குறித்த எல்லா அனுமானங்களையும் ஒருங்கிணைத்தால்
அது அவனை முழுதாய் விளக்குவதாய் அமையக்கூடும்
ஆனால் அவையும் ஒன்றோடொன்று முரண்படக்கூடும்
அவன் என்றுமே தனக்கென ஒருவனாக இருந்ததில்லை
அவன் எந்த மனிதனாகவும் தனி மனிதனாகவும் இருப்பதில்லை
அவன் வெறுமையானவன்
பூரணமானவன்
இருப்பின் இருப்பு
கண்ணனை கண்ணாடியுடன் ஒப்பிடலாம்
கிருஷ்ணன் எனும் கண்ணாடியின் முன் நின்றால் நாம் தான் தெரிவோம்
கிருஷ்ணனைப் போன்றே நீயும் இருப்பதாக சொல்லிக் கொள்ளலாம்
அங்கிருந்து நகர்ந்த வினாடியே அவன் வெறுமை ஆகிவிடுகிறான்
யார் அவன் முன் நிற்கிறார்களோ அவர்களையே அவன் பிரிதிபலிக்கிறான்
அவன் முன் நிற்பவர்கள் எல்லோரும் தங்களையே அவனிடம் காண்கிறார்கள்
புத்தரின் தத்துவங்களுக்கு ஒரே உரை தான் இருக்கும்
இயேசுவின் போதனைகளுக்கு சில உரைகளே உள்ளன
ஆனால் அவை கூட எந்த விதத்திலும் மாறுபட்டவை கிடையாது
ஆனால் கீதைக்கு ஆயிரம் உரைகள் எழுதப்பட்டுள்ளது
எல்லா உரையாசிரியர்களும் தன் உருவையே கீதையில் கண்டார்கள்
ஆயிரம் விளக்கங்களை கிருஷ்ணன் மீது மட்டுமே உங்களால் சுமத்த முடியும்
புத்தர் மீது உங்கள் விளக்கங்களை சுமத்த முடியாது
புத்தரின் போதனைகள் தீர்க்கமானது, முடிவானது
மகாவீரர் பக்தர்களிடம் கூட இரண்டு பிரிவுகள் மட்டுமே உள்ளது
சுவேதாம்பரர்கள்..... திகம்பரர்கள் என......
ஆனால் அவர்கள் கூட மகாவீரரின் போதனைகள் மீது வேறுபாடு கொள்வதில்லை
கிருஷ்ணனைக் கொண்டு பல பிரிவுகளை உருவாக்குவது இயலாத காரியம்
ஆனால் பிரிக்கத் தொடங்கினால் ஆயிரம் பத்தாயிரம் என விரிந்து கொண்டே போகும்
அப்போதும் கிருஷ்ணனை முழுவதுமாக பிரித்துவிட முடியாது
ஆயிரம் விளக்கங்கள் அவனை சுற்றி சொல்லப்பட்டாலும் கிருஷ்ணன் என்பவனை பிரித்துக் காட்ட முடியாது
அதனால் தான் அவனை சுற்றி பல சமயப் பிரிவுகளை உருவாக்க முடிவதில்லை
இயேசுவை சுற்றி கூட மூன்று பெரிய பிரிவுகள் உண்டு
ஆனால் கிருஷ்ணனை சுற்றி ஒன்றுமே இல்லை
ஆனால் கீதைக்கு ஆயிரம் உரைகள் உண்டு
எந்த இரண்டு உரையும் ஒன்றாக இருப்பதில்லை
அதோடு எல்லா உரைகளும் ஒன்றுக்கொன்று நேர் எதிராக விரோதிகளைப் போல முட்டி மோதிக் கொள்கின்றன
சங்கரரும் இராமானுஜரும் ஒருவரை ஒருவர் ''நீ ஒரு முட்டாள்'' என மோதிக் கொள்வார்கள்
ஆனால் இருவர் சொல்வதும் ஒன்றே
ஏனெனில்
கிருஷ்ணன் வடிவமற்றவன்
வரையரையற்றவன்
உடலற்றவன்
எல்லையற்றவன்
உங்கள் முடிவிற்கு அப்பாற்பட்டவன்
ku

No comments:
Post a Comment