உடனே ' ' இங்கு ' ' என்ற வார்த்தை அழிக்கப்பட்டது .
இப்போது அந்தப் பலகையில் , ' ' மீன் விற்கப்படும் ' ' என்று இருந்தது .........
#மூன்றாவது நாள் வேறொரு வாடிக்கையாளர் கடைக்கு வந்தார் .
' ' மீன் விற்கப்படும் ' ' என்பதைப் பார்த்து , ' ' விற்கப்படும் என்பது ஏன் ?
யாராவது மீனை சும்மா கொடுப்பார்களா ? ' ' என்று கேட்டார் .
உடனே ' ' விற்கப்படும் ' ' என்ற வார்த்தை அகற்றப்பட்டது .
இப்போது ' ' மீன் ' ' என்கிற ஒரே வார்த்தை மட்டுமே இருந்தது .
ஒரு வயதானவன் கடைக்கு வந்தான் .
கடைக்காரனிடம் . ' ' மீனா ? ' ' ஒரு குருடன் கூட இங்கு மீன் விற்கப்படுகிறது என்பதை தூரத்தில் வரும்போதே அறிந்து கொள்வானே ' ' என்று கேட்டான் .
உடனே ' ' மீன் ' ' என்னும் வார்த்தையும் அகற்றப்பட்டது .
இப்போது அது வெறும் பலகையாக இருந்தது .
அப்போது அந்தப் பக்கமாகப் போனவன் ஒருவன் ' ' ஏன் இந்த வெறும் பலகை ? ' ' என்று கேட்டான் .
அதனால் அந்தப் பலகையும் நீக்கப்பட்டது .
எனவே ஒவ்வொன்றாக அகற்றிய பின் ஒன்றும் இருக்காது .
ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு வார்த்தையாக அகற்றப்பட்டது .
இப்போது அங்கு மீதமிருப்பது ஒன்றும் இல்லை .
வெறும் வெறுமைதான் .
அன்பு என்பதும் இப்படிப்பட்ட வெறுமையில்தான் பிறக்க முடியும் .
ஒன்றுமில்லாத ஒன்றுதான் .
ஒன்றுமில்லாத மற்றொன்றிடம் கூடிக் கலக்க முடியும் .
ஒரு பூஜ்யம்தான் மற்றொரு பூஜ்யத்துடன் முழுமையாக இணைய முடியும் இரண்டு தனிமனிதர்கள் அல்ல .
இரண்டு வெற்றிடங்கள்தான் சந்திக்க முடியும் . ஏனெனில் வெற்றிடத்தில் தடைகள் ஏதும் இருப்பதில்லை .
மற்றவையெல்லாம் சுவர்களைக் கொண்டுள்ளன .
ஆனால் வெற்றிடத்தில் ஒன்றும் கிடையாது .
எனவே நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம் :
அன்பு என்பது தனிமனிதத்தன்மைகளான ' ' நான் ' ' என்பதும் ' ' அவன் அடுத்தவன் ' ' என்பதும் இல்லாமல் இருக்கும்போதுதான் பிறக்கும் .
அப்போது எஞ்சியிருப்பதெல்லாம் , நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாம்தான் , எல்லையில்லாத அந்த தன்மைதானே தவிர ' ' நான் ' ' என்பதல்ல .
அந்த நிலையை அடையும்போது எல்லாத் தடைகளும் பொடிப் பொடியாகி ஏற்கனவே நம்முள் தயாராக இருக்கும் கங்கையின் திடீர்ப் பாய்ச்சல் ஏற்பட்டுவிடும் .
நாம் ஒரு கிணறு வெட்டுகிறோம் .
தண்ணீர் ஏற்கனவே பூமிக்குள் உள்ளது .
அதை நீங்கள் வேறு எங்கிருந்தும் கொண்டு வர வேண்டியதில்லை .
நாம் வெறுமனே மணலையும் , கற்களையும் தோண்டி அவற்றை அப்புறப்படுத்துகிறோம் .
நாம் செய்யும் இந்தச் செயல் என்ன ?
பூமிக்குள் மறைந்திருக்கும் தண்ணீர் வெளிவருவதற்கான ஒரு இடத்தை , அந்தத் தண்ணீர் தன்னைப் பிறருக்கு காட்டிக் கொள்வதற்கான ஒரு இடத்தை , ஒரு வெற்றிடத்தைத்தான் நாம் உருவாக்குகிறோம் .
உள்ளே இருக்கும் தண்ணீர் வெளிப்படுவதற்கு ஒரு இடம் தேவைப்படுகிறது .
அது இதுவரை பெறமுடியாத ஒரு வெற்றிடத்திற்காக ஏங்குகிறது .
அப்போதுதான் அது வெளியே வர முடியும் .
அப்போதுதான் அது பீறிட்டுக் கிளம்ப முடியும் .
ஒரு கிணற்றில் முழுவதும் கற்களும் , மணலும் நிறைந்திருந்தால் , அந்த மணலையும் , கற்களையும் அப்புறப்படுத்தும் அந்தக் கணமே தண்ணீரானது மேலெழுந்து வரும் .
அதே போன்றுதான் மனிதனும் தனக்குள் அன்பு நிறைந்தவனாக இருக்கிறான் .
இப்போது அந்த அன்பு மேலெழுந்து வருவதற்கு ஒரு இடம் தேவை .
உங்களது உள்ளமும் ஆன்மாவும் எதுவரை ' ' நான் ' ' என்று சொல்லிக் கொண்டிருக்கிறதோ , அதுவரை நீங்களும் மணலும் , கற்களும் , நிறைந்த ஒரு கிணற்றைப் போன்றவர்கள்தான் ,
அன்பு என்னும் ஊற்று உங்களில் இருந்து மேலே கொப்பளித்துக் கிளம்பாது
No comments:
Post a Comment