மனமற்ற நிலை
புத்தரின் மிக நெருங்கிய சீடரான ஆனந்தர்கூட ஒருநாள் அவர்கள் ஒரு காட்டின் வழியாக நடந்துகொண்டிருக்கும்போது புத்தரிடம் கேட்டார். அது இலைஉதிர்காலம் மரங்களில் இருந்து இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன. காடு முழுவதும் சருகுகளால் நிறைந்திருந்தது. காற்று வீசிக் கொண்டிருந்தது. சருகுகள் அதில் எழும்பி இங்குமங்கும் அலைந்து கொண்டு பெருத்த சலசலப்பை உண்டு பண்ணிக் கொண்டிருந்தன.
அவர்கள் அந்த காட்டின் வழியாக போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது ஆனந்தர் புத்தரிடம் கேட்டார். "பசுவான். ஒரு கேள்வி எழுந்துகொண்டே இருக்கிறது; அதை நான் அடக்கிக் கொண்டே வந்திருக்கிறேன். ஆனால் இனியும் அதை அடக்கிவைக்க முடியவில்லை. இன்று நாம் தனியாக இருக்கிறோம். மற்ற சீடர்கள் பின்தங்கி இருக்கிறார்கள். எனவே நான் இதைக் கேட்பதை யாரும் அறியமாட்டார். மற்றவர்களின் முன்பாக இதைக்க கேட்க நான் விரும்பவில்லை. என் கேள்வி: நீங்கள் கண்டுபிடித்ததை முழுவதுமாக எங்களுக்கு நீங்கள் சொல்லிவிட்டீர்களா அல்லது இன்னும் எதையாவது சொல்லாமல் ஒளித்துக்கொண்டு இருக்கிறீர்களா?
ஏனெனில் நீங்கள் எங்களுக்கு சொல்லியிருப்பது எதுவும் உங்கள் ஆனந்தத்தை உங்கள் அமைதியை எங்களுக்கு விளக்கப்படுத்தவில்லை. நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள்போல தோன்றுகிறது." எங்களுக்கு கிடைக்காத ஒன்று ஏதோ உங்களுக்கு கிடைத்ததை போல் தோன்றுகிறது.
புத்தர் சிரித்தார். அவர் தம் கையை திறந்து சொன்னார். "புத்தர் திறந்தகை போன்றவர் அவர் எதையும் மறைப்பதில்லை. மறைப்பதற்கு எதுவும் இல்லை! நான் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறேன். நான் முற்றிலும் திறந்திருக்கிறேன்.'
அப்போதும் ஆனந்தர் விடவில்லை. "ஆனால் உம் ஓயாத ஆனந்தத்தை எங்களால் விளக்க முடியவில்லை - உம்மை இரவுபகலாக நான் கவனித்து வருகிறேன். பகலில் நீர் பரவசமாயிருக்கிறீர் . இரவில் உறங்கச் செல்லும்போதும் பரவசமாயிருக்கிறீர். இது எப்படி சாத்தியம்? நானும் முயற்சி செய்திருக்கிறேன், ஆனால் கொஞ்சம் தான் முயற்சிக்க முடிகிறது, உடனே களைத்துவிடுகிறேன்.''
புத்தர் சென்ற இடமெல்லாம் இந்த கேள்வியை மக்கள் அவரிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
ஏன்? ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும். ஏதாவது புதையலை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களா? ஏதாவது கோஹினூர்வைரத்தை நீங்கள் கண்டடைந்து விட்டீர்களா? மட்டமான உலோகத்தை தங்கமாக மாற்றும் ஏதாவது ரசவாத முறையை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களா? உங்களை சாகாவரம் பெற்றவராக்கும் ஏதாவது ரகசியத்தை கண்டுபிடித்திருக்கிறீர்களா? ஏன் இவ்வளவு பரவசமாக இருக்கிறீர்கள்?"
கேள்வி கேட்கிறவர்கள் தம்மைப்பற்றியே தெரிவித்துக்கொண் டிருக்கிறார்கள். புத்தர் ஏன் பரவசமாயிருக்கிறார் என்பதைப்பற்றி உண்மை யில் அவர்கள் கேட்கவில்லை - புத்தரை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது தம்மைப்பற்றியே அவர்களுக்கு தெரிந்திருக்கிறது தாம். துன்பத்தில் இருப்பது அவர்களுக்கு தெரிகிறது. தம் துன்பத்துக்கு ஒரு காரணம் இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரிகிறது.
எப்போதாவது ஒருமுறை அவர்கள் மகிழ்ச்சியாக உணர்ந்தால் அந்த மகிழ்ச்சிக்கும் ஒரு காரணம் இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரிகிறது.
உங்களுக்கு லாட்டரியில் பரிசுவிழுந்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். லாட்டரிவிழாவிட்டால் நீங்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கமுடியும்?
புத்தருக்கோ எந்தபரிசும் விழவில்லை. உண்மையில் தன் அரண்மனையை யும் அரசையும் அனைத்து செல்வங்களையும் அவர் துறந்துவந்திருக்கிறார்.
மக்கள் தேடிக்கண்டு பிடிக்கவே முயல்வார்கள் "நிச்சயம் அவர் ஏதோ ஒன்றை கண்டடைந்துவிட்டு நம்மிடம் அதை சொல்லாமல் மறைக்கிறார். அது என்னது? 'பின் எப்படி நீங்கள் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்?"
புத்தர் சொன்னார். "ஆசை ஒரு ஏக்கத்தை உருவாக்குகிறது. அந்த ஏக்கம் துன்பமாக மாறுகிறது. எதற்காக ஆசைப்பட்டீர்களோ அது கிடைத்தவுடன், அந்த ஏக்கம் மறைந்த பின்பு துன்பமும் மறைந்து விடுகிறது.
உண்மையில் அந்தப் பொருள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை. அந்த ஏக்கம் மறைந்து போகிறது அவ்வளவுதான்.
மகிழ்ச்சி அந்த பொருளிலிருந்து வரவில்லை அது உங்கள் உள்ளே இருந்து வந்தது.
உங்களிடம் ஏற்கனவே உள்ள மகிழ்ச்சியை அடைய விடாதவாறு மனம் இந்த அலைக்கழிப்பை உங்களிடம் உருவாக்கி வைத்துள்ளது.
மனமற்ற நிலையில், உங்களுடைய இயல்பு நிலையே மகிழ்ச்சியான நிலை தான்.
நீங்கள் உங்கள் இயல்பு நிலைக்கு திரும்பினால் போதும். உங்கள் சுயம் எப்பொழுதும் ஆனந்தத்தில் நிலைத்திருக்கும்.
No comments:
Post a Comment