Saturday, 31 August 2024

 காயிலே புளிப்பதென்ன கன்னி இளம் மானே!   பேசாலைதாஸ்

கடவுளுமில்லை 

கத்திரிக்காயுமில்லை 

எல்லாம் பித்தலாட்டம்,

யாராவது கேள்வி கேட்க 

வேண்டுமானால் கேட்கலாம் 

என்றான் ஒரு நாத்திகன்,

சாதாரண பக்தன் ஒருவர்  

மேடைமீது ஏறினார்,

ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து,

தோலை மெதுவாக உரித்தார்,

பழத்தின் சுளையை 

தின்று கொண்டே,

பழம் இனிப்பாய் இருக்கிறதா 

என்று நாத்திகனை கேட்டார்,

பைத்தியக்காரனே 

நான் தின்று பார்க்காமல், 

பழம் இனிப்பா 

இல்லை புளிப்பா என்று,

எவ்வாறு சொல்லமுடியும் 

என்றான் நாத்திகன்,

அதேபோல் கடவுள் யார்,

அவர் எப்படிபட்டவர்,

அவரின் ஆற்றல் என்ன ?

என்பதை,

நீ ஆன்ம மார்க்கத்தில் 

ஈடுபட்டு பார்த்தால் தானே 

உனக்கு புரியும்,

கடவுளை இல்லை என்று 

எவ்வாறு  சொல்லுவாய்,

அனுபவித்து 

ருசித்துப் பார்க்காமல் 

ஏன் உளறுகிறாய், 

என்று கூறியவாறு 

மெதுவாக நடந்தார் ஆன்மவாதி,

வெட்கி தலை குனிந்தான் 

நாத்திகன்..

No comments:

Post a Comment